ஒரு இளைஞனோ யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும், குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார்.பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள்,வழிகாட்டல்கள்,அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.
இப்படி பட்ட ஒரு உன்னத உறவு இத பிள்ளை பிறக்கும் முன்பே ஏன் இப்படி ஒரு உறவு இருக்கு என தெரியும் முன்பே உலகைவிட்டு சென்ற தந்தை பாவமா ????? இல்லை எல்லோராலும் புகழப்படும் ஒரு தகப்பனின் முகம் காணாமல் ஸ்பரிசம் உணராமல் வாழப்போவது சிசுவிற்க்கான தண்டனையா எதுவும் புரியவில்லை ..????
இந்த வாழ்க்கை தந்த புதிருக்கு விடை தெரியாமல் .... ரஞ்சியின் பயணம் தொடர்ந்தது ...
எதுவுமே புரியவில்லை எனினும் ... நிச்சயமாக அந்த குழந்தைக்கு தன தாயாகவும் தந்தையாகவும் ... இருப்பது என்பதுமட்டும் தெளிவாய் புரிந்தது .....
அங்கு சென்றவுடன் மனம் தானாகவே நிம்மதியை தஞ்சம் அடைந்தது ... அந்த அம்மாவின் கருணையும் அன்பும் நிறைந்த முகமும் அங்கு இருப்போரின் முகத்தில் இருந்த அமைதியும் சந்தோஷமும் ..... தன் தங்கை நிச்சயமாய் இங்கு பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பாள் என உணர்த்தியது ....
அங்கு இருந்த ஒருவாரம் நிம்மதியாக செல்ல மனநிறைவுடன் கிளம்பினார் இருவரும் ...
இங்கு வந்தவுடன் ரவி பற்றி விசாரிக்க அவன் மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் ஊர் பொள்ளாச்சி அருகே எனவும் தெரிய வந்தது ..
அவர்கள் வீட்டிற்கு சென்று எதுவும் கேட்க தோன்றவில்லை ... சொல்லவும் தோன்றவில்லை ... இதை இப்போது எப்படி கூறினாலும் தன் தங்கையின் மீது தவறாகும் ... எனவே தானே தந்தையும் தாயுமாய் இருப்பதென்றும் .... அப்படியே சிவா குணமானதும் அவள் எண்ணம் என்ன என்று அறிந்து அதற்க்கு ஏற்றாற்போல் செய்து விடலாம் எனவும் நினைத்து அமைதியானாள் ...
காலம் வேகமாக செல்ல செல்ல ... சிவாவின் முகத்தில் முன்பிருந்து போல் இல்லாமல் கொஞ்சம் தெளிவும் தாய்மையின் பூரிப்பும் தெரிந்தது ....எல்லாமே சீக்கிரம் சரியாகிவிடும் என ஒரு நம்பிக்கையும் பிறந்தது ...
மாதம் ஒருமுறை ரஞ்சி அங்கு போவதும் ... சிவாவிற்க்கான வழிக்காப்பும் அங்கேயே செய்யப்பட்டது ...
ஒருநாள் அங்கிருந்து ரஞ்சிக்கு அழைப்புவந்தது ... சிவாவுக்கு வலி எடுத்துவிட்டது எனவும் ... அவளுக்கு அந்த வலிதந்த அதிர்ச்சியில் நினைவு வந்துவிட்டது எனவும் ....
மனசெல்லாம் சந்தோஷத்துடன் ... கோழிக்கூடு வரை விமானமும் .. அதன்பிறகு கார் பயணமுமாய் அவர்கள் அங்கே போகும்போது .... உயிரற்ற உடலாய் இருந்த சிவாவும் அவள் குழந்தையும் தான் வரவேற்றார்கள் ....
நினைவு வந்த சிவா போராட எந்த முயற்சியும் எடுக்காததால் ... தாய் ...மகவு ... என இருவரும் மரணித்து இருந்தார்கள் ...
ரஞ்சியின் வாழ்வாதாரம் விதியின் சதியால் அவளிடம் இருந்து பறிக்கப்பட்டது ..
தொடரும்
{kunena_discuss:997}