(Reading time: 3 - 5 minutes)

ருப்பினும் அவனுக்கு குழப்பம்,

நிதர்சனத்தை எண்ணி பயம்!

“நம்ப மாட்டேன்..நீ என்னை விட்டுட்டு போயிடுவ..

இது எப்படி சாத்தியம்?

பிரிவதில்லையென சொல் சத்தியம்!”

கேட்டான் நாயகியின் தலைவன் !

 

மௌனம் குடிகொண்டது  அறையில்

ரௌத்திரமோ அவள் விழியில்!

சொந்தத்தை உணர்த்திட சாட்சி வேண்டுமா?

“ அங்கே பார்!” சிவந்த விழிகள் காட்டிய இடத்தில்

அந்தரத்தில் நின்றது கத்தியொன்று !

 

பயமில்லை அவனிடம்!

குறுநகை மீண்டும் இதழ்களில் அடைக்களம்!

“ நான் உன்னைவிட்டு போறதா இருந்தால்

உன்னை கொன்னுட்டுத்தான் போவேன்”

சொன்னவள் முறைக்க,

கேட்டவனோ புன்னகைக்க

“என் செல்ல பேய் டீ நீ”

கெஞ்ச வேண்டியவன், கொஞ்சிடவும்

வஞ்சியின் கோபம் காற்றில் கரைந்ததற்கு

காற்றே நீ சாட்சி !

 

ஓய்ந்து போனான் வான தேவன்!

தன் நிலமெனும் காதலிக்கு ஓய்வுதர

முத்தமழையை ஒத்திவைத்தான்.!

தெய்வீகனோ தூயவிழியை

தனக்குள் பொத்திவைத்தான்!

 

தேடி வந்துவிட்டேன்..இன்னமும்

தேவதாசாய் திரிவாயோ?

சவரம் செய்து கொள்!

குத்துகிறது உன் தாடி,

மேனியை அல்ல மனதை !

 

தொடங்கியது அவளின் பேய்க் காதல்!

செய்திடுமோ விதியும் மீண்டுமொரு மோதல்?

அடுத்த வாரம் சொல்றேன்

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1072}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.