இருப்பினும் அவனுக்கு குழப்பம்,
நிதர்சனத்தை எண்ணி பயம்!
“நம்ப மாட்டேன்..நீ என்னை விட்டுட்டு போயிடுவ..
இது எப்படி சாத்தியம்?
பிரிவதில்லையென சொல் சத்தியம்!”
கேட்டான் நாயகியின் தலைவன் !
மௌனம் குடிகொண்டது அறையில்
ரௌத்திரமோ அவள் விழியில்!
சொந்தத்தை உணர்த்திட சாட்சி வேண்டுமா?
“ அங்கே பார்!” சிவந்த விழிகள் காட்டிய இடத்தில்
அந்தரத்தில் நின்றது கத்தியொன்று !
பயமில்லை அவனிடம்!
குறுநகை மீண்டும் இதழ்களில் அடைக்களம்!
“ நான் உன்னைவிட்டு போறதா இருந்தால்
உன்னை கொன்னுட்டுத்தான் போவேன்”
சொன்னவள் முறைக்க,
கேட்டவனோ புன்னகைக்க
“என் செல்ல பேய் டீ நீ”
கெஞ்ச வேண்டியவன், கொஞ்சிடவும்
வஞ்சியின் கோபம் காற்றில் கரைந்ததற்கு
காற்றே நீ சாட்சி !
ஓய்ந்து போனான் வான தேவன்!
தன் நிலமெனும் காதலிக்கு ஓய்வுதர
முத்தமழையை ஒத்திவைத்தான்.!
தெய்வீகனோ தூயவிழியை
தனக்குள் பொத்திவைத்தான்!
தேடி வந்துவிட்டேன்..இன்னமும்
தேவதாசாய் திரிவாயோ?
சவரம் செய்து கொள்!
குத்துகிறது உன் தாடி,
மேனியை அல்ல மனதை !
தொடங்கியது அவளின் பேய்க் காதல்!
செய்திடுமோ விதியும் மீண்டுமொரு மோதல்?
அடுத்த வாரம் சொல்றேன்
தொடரும்
{kunena_discuss:1072}