(Reading time: 29 - 58 minutes)

ழுது அசிங்கபடுத்துறாளே’, என்று இன்னும் இன்னுமாய் அவன் கொதிக்க..

இவர்கள் பேசுவதை கேட்ட சற்று தள்ளி நின்றிருந்த இன்னொரு ஆட்டோக்காரன்,

“ஸார்... என்ன மேட்டர்ன்னாலும் பரவாயில்லை! ரிஸ்க் எடுத்து ஓட்டுறேன்! கொஞ்சம் பார்த்து கொடுங்க.”, என்று பேரம் பேச..

ஆத்திரத்தில் “யோவ்... உன்கிட்ட கேட்டேனா! வேலையை பார்த்துட்டு போயா!!!”, என்று உச்ச ஸ்துதியில் கத்தி விட்டு திரும்ப அஞ்சனா அங்கு இல்லை....

அவள் காணவில்லை என்றதும் ஒரு கணம் உயிரே இல்லை அவனிடம்!!! பதற்றமடைந்தவனாக சுற்றும் முற்றும் பார்த்தவனின் கண்ணில்... அவள் அவன் பைக் அருகில் சென்றிருப்பதைக் கண்ட பின்.... கோபம் டன் கணக்கில் எகிற..

விரைந்து வந்தான் அவளிடம்!

அதற்குள் அவன் பைக்கின் பின் ஸீட்டில் அமர்ந்து கொண்டு அழுகையை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்தாள்!

“வாயை மூடுடி!”, என்று கத்த...

அவன் கத்தலையும்... அந்த “டி”, யிலும் திகைத்து ஒரு கணம் அவனை ஏறிட்டவள்.. பின் உதட்டை மடித்துக் கொண்டு  அழுகையைக்  கட்டுப்படுத்த முயன்று... “ஊ... ஊ”, என்ற சத்தத்துடன் ஊளையிட....

அது இன்னும் எரிச்சலை கிளப்ப... “நான் எப்படி ஏற???? இறங்கு!!!”, என்று பல்லைக் கடித்து தன் சீற்றத்தை கட்டு படுத்த முயன்றவனாக...

அவன் திட்ட திட்ட இன்னுமே வருத்தமடைந்தவளாக... முடியாது என்பது போல கழுத்தை வெட்டி  பாலாஜியுடன் அடம்பிடிப்பது போல இவனிடம் சண்டையிட முயன்றாள்!

அவன் என்ன பாலாஜியா? இருக்கிற இடத்தில் அட்ஜெஸ்ட் செய்து அப்படி இப்படி என்று பைக்கில் ஏறி அமர!!!

அவள் மறுத்ததை கண்டதும்... தரதரவென்று இழுத்து அவளை கீழே தள்ளும் வேகத்தில் தான் அவளிடம் பாய்ந்தான்!

ஆனால், அதை நினைத்த படி செயல் படுத்த அவள் சரியான வசத்தில் இல்லாததோடு.. என்னதான்  கோபம் கண்ணை மறைத்தாலும்... அவளை இழுக்க முயன்ற கரங்களோ பெண்ணின் மென்மையை உணரத் துவங்க....

தன் பேச்சைக் கேட்காத கரத்தை ஓங்கி சீட்டில் குத்தி விட்டு...

“ச்சே! ஏன்டி சாகடிக்கிறே !!!!! ”, என்று மறு கையால் நெற்றியைப் பிடித்த படி கண்களை மூடி நிற்க..

அவன் சொன்ன வார்த்தை நெஞ்சை பிளக்க... அதற்கு மேல் முரண்டு பிடிக்காமல்  அவன் சொன்னதை செய்தவளால் அழுகையை மட்டும் நிறுத்தவே முடியவில்லை!

அவளிடம் முகவரியைக் கேட்டு வண்டியைக் கிளப்பிவன் பின்னே இரு பக்கமும் காலை போட்டு அமர்ந்து கொண்டவளின் ஒரு கை இழுத்து போர்த்தியிருந்த துணியை பிடிக்க.. மறு கை கன்னத்தை பிடிக்க..

வழி நெடுக அழுது கொண்டே வர....

ரோட்டில் இவர்களை கடந்து செல்பவர்கள் இவர்களை ஒரு மாதிரி பார்த்து விட்டு செல்வதை கண்டவனுக்கு புரியாதா ஆட்டோகாரன் சொல்லிச் சென்றதை தான் அந்த சந்தேகப் பார்வைகளும் சொல்கின்றன என்று! பெரும் அவமானமாக போனது அவனுக்கு! இருந்தாலும் இப்படி ஒரு சம்பவத்தை தாங்க முடியாமல் தான் அழுகிறாள் என்று நினைத்து பொறுமையை இழுத்து பிடித்தவனாக...

“அழாதேன்னு சொல்றேன்ல”, என்று சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டவன்.. கடைசியில்....

“என்ன செய்தா அழாம இருப்பே? கால்ல விழணுமா? சொல்லித் தொலை! அதை வேணாலும் செய்றேன்” என்றான் மொத்த எரிச்சலையும் குத்தகைக்கு எடுத்தவனாக!!!

அதில் அவள் அழுகை இன்னும் பெருக....

“அழாம இருக்க முடில......”, என்று கேவலுடன் மூச்சு வாங்கியவள் ...

“மிளகாவை தேச்சு.... விட்ட மா(தி)ரி கன்னமெல்லாம்...... காந்துது!”

“ப்ச்... அது கூட பரவாயில்ல........”,

“....... நீங்க அறைஞ்சிட்டீங்கன்றது தான் அதிகம் வலிக்குது!’, என்று மனதில் உள்ளதை.. மனம் பட்ட காயத்தை வலியுடனே வெளிபடுத்தியவள்... கூடவே..

“என்னை பாஜி கூட...”, என்று சொல்லி விட்டு மூக்கை உறிந்தவள்..

“....அறைஞ்சதே  கிடையாது தெரியுமா?” என்று அழுகையுடனே முடித்தது தான் தாமதம்..

சீறிக் கொண்டிருந்த அவன் வண்டியின் வேகம் அப்படியே மட்டுபட்டு ரோட்டோரம் ஒதுங்க... சட்டென்று வண்டியை அவன் நிறுத்துதவும்.. அழுகைக்கிடையே..

‘அய்யோ.. வலிக்குது அது இதுன்னு சொல்லி ஆர்யாவை  ஃபீல் செய்ய வச்சுட்டோமா?’, என்ற கவலை வர... மூக்கை உறுஞ்சிய படியே,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.