அவனை தொடர்ந்து சரண்யாவை கவனித்த உமாவும், முகம் மலர எழுந்து நின்று சரண்யா அமர நாற்காலியை இழுத்து போட்டுக் கொடுத்தாள்...
“தேங்க்ஸ் உமா...” என்றபடி அமர்ந்த சரண்யா, மித்ரன் பக்கம் பார்த்தாள்...
அவன் முகத்தில் எப்போதும் இருப்பதை விட கூடுதல் கடுகடுப்பு இருப்பதாக தோன்றியது...
அதை பற்றி அதிகம் யோசிக்காமல் விட்டவள், என்ன சொல்லி பேச்சை தொடங்குவது என்று யோசித்தாள்.... ஒன்றும் புரியவில்லை.... குட் மார்னிங் சொல்லலாமா???
அவள் அதிகமாக யோசிக்க அவசியமில்லாமல் மித்ரனே பேச்சை துவங்கினான்.
“டைம் என்ன?”
அமைதியான இரவு நேரத்தில் அதிர வைக்கும் இடியை போல இருந்தது அவனின் குரல்.
...
This story is now available on Chillzee KiMo.
...யே கந்தசாமி கிட்ட ஒரு டேபிள் ரெடி செய்ய சொன்னேன்... த்ரீ மன்த்ஸ்க்கு தானே... தட் ஷுட் டூ...”
“தேங்க் யூ...”
அந்த அறையை விட்டு வெளியே வந்த சரண்யாவிற்கு சிங்கத்தின் குகையில் இருந்து வெளி வந்த ஒரு உணர்வு...
ஏன் இவனை சந்திக்கும் போதெல்லாம் வனவிலங்குகளின் நினைவு வருகிறது???