நந்திதாவிற்கு தன் மனம் முழுவதும் நிறைந்திருக்கும் கணவனுக்கு பிடித்தது போல நடந்துக் கொள்ள எந்த தடையும் இல்லாததால், அன்றைய நாள் அவர்கள் இருவரும் விரும்பிய படி, அவர்களின் காதலை பறைசாற்றும் விதமாக வெகு இனிமையாகவே சென்றது...!
மறுநாள் உதய் ஆபிஸ் சென்ற பின் வழக்கம் போல தன் சூப்பர் மருமகள் வேலைகளை முடித்து விட்டு, அறையினுள் உலாவிக் கொண்டிருந்தாள் நந்திதா...
உதயின் கொஞ்சல்கள், சீண்டல்கள், காதல் மொழிகள் என நினைவில் நின்றவற்றை நினைத்து நினைத்து புன்னகைத்துக் கொண்டிருந்தவளுக்கு, அது என்னவோ அவளையும் மீறி சந்தோஷ் பற்றி உதயிடம் சொல்லாமல் விட்டது நெருஞ்சி முள்ளாக உறுத்திக் கொண்டு இருந்தது....
அது ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
பிடிக்கலை... ஆனால் அவர் எல்லாத்தையும் சொல்லும் போது நான் சொல்லாமல் இருக்கிறது தப்போன்னு தோணுது....”
துளசிக்கு நந்திதாவின் மனநிலையை தத்ருபமாக புரிந்தது...
நந்திதாவிற்கு உதய்யிடம் சந்தோஷ் பற்றி சொல்ல விருப்பமில்லை.... ஆனால் அதை சொல்லாமல் இருப்பதால் அவளுக்குள் குற்ற உணர்ச்சி...!