(Reading time: 22 - 44 minutes)

ர்யமனை அழைத்த பின்... அவனையும் தாண்டி தான் கண்ட காட்சியில் ஒரு ஷணம் அப்படியே இன்ப அதிர்ச்சியில் நின்று விட்டவள்...  இப்பொழுது தான் இயல்புக்கு வந்தவளாக.. தன் சந்தோஷம் மொத்தத்தையும் குரலில் கலந்து...

“பெல்லி பாய்!”, என்று உற்சாகம் பொங்க துள்ளி குதிக்க....  

அவள் சொன்ன அடை மொழியில்... முன் சென்றவனின் வயிறு அனிச்சை செயலாக சில இஞ்ச் உள்ளே தானாக உள்வாங்கிக் கொள்ள...

‘நாம ஃபிட்டா இருக்கோமே.. நமக்கு ஏது பெல்லி?’, என்று தன் கண்களால்  தன் முறுக்கேறிய உடம்பை செல்ஃபி எடுத்து திருப்தியடைய...  

‘பின்ன இவ யாரைச் சொல்றா’, என்ற கேள்வியுடன் அவளைப் பார்க்க.. பிள்ளையாரைப் பார்த்து பக்தி சிரத்தையாக கன்னத்தில் போட்டுக் கொள்வதைக் கண்டதும்...  

‘பேர் வைக்கிறதுலே கடவுளையும் விட்டு வைக்கலையா!!!!???’, , என்று வந்த சிரிப்பை உதட்டுற்குள் புதைத்து.... லேசாக கனைத்து  அவள் கவனத்தை தன் வசம் திருப்பியவன்..

அவள் வெற்று நெற்றியில் பார்வையைப் பதித்து...

“கோவில்ல போய் விபூதி குங்குமம்ன்னு எதையாவது வைச்சிட்டு வா!” என்று கட்டளையிட்டு விட்டு.. வந்த காரியம் முடிந்தது என தனது பைக் நோக்கி திரும்ப..  

அஞ்சனாவிற்கு இப்பொழுது தான் அழைத்து வந்த காரணம் புரிய,

‘அட... இதுக்கு தான் கடைக்குள்ளே இருந்து இவன் அரக்க பறக்க ஓடி வந்ததா?? அன்னைக்கு கமலா அம்மா! இப்போ இவனா??’

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

தனக்கு தோன்றியதை அப்படியே அவனிடம் கேட்டவள்.. கூடவே,

“உங்க குடும்பமே இப்படி தானா? குங்குமம் பொட்டு கவுண்டர் பரம்பரையா நீங்கெல்லாம் ?”, என்று குறும்பு மின்ன கேட்ட படி அவனருகில் வரவும்,

‘குங்கும பொட்டு கவுண்டரா???’, கொஞ்சம் கமலாம்மாவின் பெரிய பொட்டை தன் நெற்றியில் வைத்து பார்த்து  திகைத்த ஆர்யமன்.. ‘எப்படிலாம் யோசிக்க வைச்சிட்டா லூசு’, என்று செல்லமாக தனக்குள் கடிந்தவனாக..

“ஏற்கனவே அரை ஆம்பிளையா தெரியுறே! இதுல வாயைப் பாரு!”, என்று உரிமையாய் அவள் தலையில் தட்டியவனின் பார்வையோ  அவள் வாய் பார்க்க ஆரம்பிக்க..

“ஆஹான்!!! அரை ஆம்பிளையா??? முழு ஆம்பிளை நான்!”, என்று கண்களை உருட்டி இல்லாத மீசையை முறுக்கி காட்டி.. புருவம் உயர்த்தியவள்..

“அன்ட் ஐ எம் யுவர் பாய் ஃப்ரண்ட்”, என்று கண் சிமிட்டலுடன் முடித்ததும் யோசனைக்கு சென்றவனை கவனியாது பிள்ளையாரை தரிசிக்க ஓடினாள்.

ஆம், தான் பெண் என்ற எண்ணமின்றி இவனை பார்க்க சொல்கிறாள். பழக சொல்கிறாள். வேண்டுகோளும் அல்லாது... கட்டளையும் அல்லாது நான் இப்படி தான் என்று உணர்த்தும் விதம்... எத்தனை பக்குவம்!

பக்குவமற்ற பெண்ணிடம் இருந்து வந்த அந்த பக்குவமான விளம்பலில் குழம்பி தான் போனான்!

‘You are unpredictable’, என்று எண்ணிக்  கொண்டே கண் மூடி பிராத்திப்பவளை பார்த்தவனின் மனம் தனக்குள்ளே ஜெபித்தது!  

‘கடவுளே! இந்த பிரச்சனை ஒரு கெட்ட கனவு போல இதோடு முடிந்து போயிடணும்! இனி அவளை எந்த விதத்திலும் ரண படுத்தக் கூடாது!’,

என்று! அஞ்சனாவின் மனமோ,  

‘பெல்லி பாய்! ஆர்யாவை அனுப்பி என்னை காப்பாத்தினது போல லாஸ்ட் மினிட்ல கூட பரணியை அனுப்பி விடுவே! எனக்கு நம்பிக்கை இருக்கு!’

என்று தான் வேண்டிக் கொண்டது!

இந்த இருள் சூழ் இரவில். அத்தனை கசப்பான நிகழ்வை தாண்டி வந்த பின்னும் அன்றைய விடியலில் இருந்த எதிர் மறை எண்ணங்களோ... நிராசையோ.. சோர்வோ எதுவும் துளி கூட இல்லாது.... இலகுவாக உணர்ந்தவளாக தெள்ளத் தெளிந்த மனதுடன் தன் வேண்டுதலை வைத்தவளுக்கு எது அவளை அப்படி உணர வைக்கிறது என்பதை எண்ணாமல் போனாள்!

வேண்டுதலை முடித்தும்.. அங்கிருந்த குங்குமத்தை  நெற்றியில் வைக்கும் பொழுது அனிச்சையாக அவள் பார்வை இவன் புறம் திரும்ப...  

பைக்கில் சாய்ந்தவாறு மார்ப்பிற்கு குறுக்காக கை கட்டியே தன்னையே பார்த்து நின்றவனைக் கண்டதும் நகைத்த படி அவனுக்கும் சிறிது விபூதி குங்குமம் எடுத்து வந்து கொடுத்தாள்.

அதை வாங்கிக் கொண்டவனுக்கு.. ராகவ் நெற்றியில் இவள் விபூதி பூசிய காட்சி நினைவில் வந்து அவன் தான் பாவா என்று புரிந்து வைத்திருந்ததில்  சிறு சிறு பொசு பொசுப்பை உண்டாக்கியிருக்க..  

அப்போது போய் அஞ்சனா,

“பாவாகிட்ட பேச மறந்தே போயிடுச்சு பாருங்க! ஃபோன் தாங்க!”, என்று வேறு கேட்டு வைக்க..  

“என் டப்பா போன்லாம் உன் பாவா ரேஞ்ச்க்கு ஒத்து வராது! ”, என்று சுள்ளென்று எரிந்து விழுந்தவன்... கடு கடு முகத்துடன் பைக்கில் ஏறப் போக...  

‘பார்ரா டப்பா ஃபோனுக்கு காட்டுற ரோஷத்தை!!’, என்று எண்ணியவளை  இந்த திடீர் ‘உர்’ முகம் அஞ்சுறுத்தவில்லை! மாறாக வம்பளக்கவே  உந்த.... அவன் முன்னே வந்து நின்று,  

“ஒரு டப்பா ஃபோனுக்கு கெஞ்ச கூடாதுன்னு தான் பார்க்கிறேன்! my bad!!!

என் ஃபோன் ஃபிலோ பேக்லே மாட்டிடுச்சே! நாளைக்கு ஆபிஸ் போனதும் அவளை பார்த்து வாங்கணும்”, என்று இவள் பேச்சு ஃபிலோமினாவிடம் செல்ல..

அவள் ஃபிலோமினாவை சொன்னதும்....  கண் மண் தெரியாமல் கோபம் வந்தது அவனுக்கு....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.