05. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்
கவிழையாவிடம் மஹிந்தன் தான் வைத்திருந்த ஒப்பந்த பத்திரத்தை தூக்கிகாண்பித்து கூறினான், அவ்வொப்பந்தத்தின்படி நீ என்னிடம் மூன்று வருடம் வேலை செய்வதர்க்கு ஒப்புக்கொண்டுள்ளாய். நீயாக என்னிடம் வேலைசெய்யாமல் வெளியேறி போகநினைத்தால் ஐம்பது இலட்சம் ரூபாய் எனக்கு தருவதாக ஒத்துக்கொண்டுள்ளதாக கையெழுத்து போட்டுள்ளாய் என்று கூறினான்.
அதை கேட்ட கவிழையாவிற்கு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் பேச்சுவர மறுத்தது. இது அநியாயம் இவ்வாறு நடந்துகொள்ள உங்களுக்கு கொஞ்சம்கூட மனச்சாட்சியில்லையா? என்றுகூறினாள்.
அதற்கு மஹிந்தன், என் மனம் சொல்வதைத்தான் நான் செய்கிறேன். நீ சொல்வதுபோல் யோசித்தால் நான் இவவளவு சக்சஸ்புல் பெர்சனாக வந்திருக்க முடியாது. எனக்கு நான் நினைப்பது நடக்கவேண்டும். அப்படிநடக்க என்ன செய்யவேண்டும் என்பதைமட்டும் தான் நான் யோசிப்பேன் என்றான்.
அவன் பேசுவதக்கேட்ட கவிழையா, அன்று நான் மாலில் வைத்து திட்டியதற்காக இவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்றாள். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் என்றுகூறினாள்.
அதனைகேட்ட்ட மஹிந்தன் மனதுக்குள், உன்னை என்னிடம் வரவழைப்பதற்கு இதைத்தவிர வேறு வழியில்லை என்று நினைத்த்க்கொண்டு, வெளியில் உன்னுடைய மன்னிப்பு ஏற்றுகொள்ளப்பட்டது என்றுகூறினான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
அதைக்கேட்ட கவிழையா மனம் சிறிது அமைதியடைவதர்க்குள் மஹிந்தன் கூறினான் ஆனால் நீ நான் விரும்பும்படி நடந்துகொண்டாள் இவ்வேலையைவிட்டு இப்பொழுதே சென்றுவிடலாம் என்றுகூறினான்
அவன் எதுவோ விபரீதமாக சொல்லப்போகிறான் என்று அவள் மனம் எச்சரிக்கை மணி அடித்தது.
மஹிந்தன் என்ன விருப்பம் என்று கேட்கமாட்டாயா? பேபி என்று கேட்டுக்கொண்டு நீ கேட்கவில்லைஎன்றாலும் நான் சொல்லிவிடுகிறேன் உனக்கென்று எல்லாம் நான் கொடுக்கிறேன் வீடு கார் பணம் நகை என்று நீ எது கேட்டாலும் தருகிறேன் நீ எனக்காக மட்டும் நான் வாங்கிகொடுக்கும் வீட்டில்.. என்று அவன் கூறிகொண்டு மேலே பேசமுற்பட்டதைக் கேட்க இஷ்டப்படாமல் தன் காதுகள் இரண்டையும் கைகளால் மூடிக்கொண்டு “நிப்பாட்டு உன் உளறலை” என்றுகத்தினாள்.
நீ நினைப்பது உன் கனவில்கூட நடக்காது. உன்னுடைய கீழ்த்தரமான விருப்பத்திற்கு இனங்கும் சாக்கடை என்று என்னை நினைத்துக்கொண்டாயா? என்று கூறிவிட்டு கண்களில் கண்ணீர் வழிவதை தன் புறங்கையால் துடைத்துக்கொண்டாள்
மூன்று வருடம் இவ்வேலையை நான் செய்கிறேன் எனக்கு ஐம்பது இலட்சம் பணம் என்பது ஈசியான விஷயம் கிடையாது . ஆனால் அத்துமீறி எதுவும் நீ என்னிடம் நடந்துகொள்ள முயன்றால் “ஒன்று உன் உயிர் போகும் அல்லது எனதுயிர் போகும்”, என்று உதடு உடல் எல்லாம் நடுங்க கூறியவள், நான் நாளையில் இருந்து என் வேலையில் ஜாய்ன் பண்ணிக் கொள்கிறேன் என்று கூறி தன் கைப்பையை எடுத்துக்கொண்டு விறுவிறு என்று வெளியேறினாள்.
அவள் வெளியில் செல்ல நுழைவாயிலின் அருகில் வருவதற்குள் அங்கு வாசலில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது
அவள் வளாகத்தின் படிகட்டுகலில் இறங்கும்போது அக்காரின் ஓட்டுனர் கவிழைவை எதிர்கொண்டு பணிவாக மேடம் எம்.டி ஸார் கம்பெனியின் காரில் உங்களை இறக்கிவிடச் சொன்னார்கள் என்றுகூறி காரின் கதவை திறந்துகொண்டு ப்ளீஸ் ஏறுங்கள் என்று கூறினான்
உடனே எனக்கு தேவையில்லை, என்று போய் சொல்லுங்கள் என்றுகூறியபடி அக்காரை கடக்க முயன்றவளின் முன் ஓடிவந்து ப்ளீஸ் மேடம் நீங்கள் ஏற வில்லையெனில் என்வேலை போய்விடும் என்று அவன் கெஞ்சி கூறினான்
அப்பொழுது தான் சுற்றியுள்ள எல்லோரும் திரும்பி கவனிப்பதைப் பார்த்து அவள் மேலும் அவனுடன் வாதாடி எல்லோர் முன்பும் காட்சிபொருளாக வேண்டாம் என்று நினைத்து அக்காரின் பின்கதவை திறந்து ஏறிக்கொண்டாள்.
கார் வீட்டின் முன் வந்து நின்றதை கூட கவி உணரவில்லை அவள் இறங்காமல் உட்கார்ந்துகொண்டு இருப்பதைப் பார்த்த டிரைவர் இறங்கிவந்து, காரின் கதவை திறந்துவைத்துக்கொண்டு மேடம் வீடு வந்துவிட்டது என்று கூறவும் தான் அதனை சுதாரித்துக் கொண்டு இறங்கினாள் .
அவள் இறங்கி வீட்டிற்குள் செல்லும் முன் நாளைக்கு காலை ஒன்பது மணிக்கு உங்களை ஆபீஸ்க்கு கூட்டிச்செல்ல கார் வருவதை உங்களிடம் சொல்லச் சொன்னார்கள் மேடம். நன்றி என்று கூறி கார் புறப்பட்டுச் சென்றது.
வீட்டு வாசலில் கார் நிற்பதை சன்னல் மூலம் பார்த்த பார்வதி, யார் வந்திருக்கிறார்கள்? என்று பார்க்க கதவைத் திறப்பதற்க்குள் கார் சென்றுவிட கவிழையாவைப் பார்த்து என்னடி காரில் வந்து இறங்குகிறாய்? யாருடைய கார் அது? என்று விசாரித்துக் கொண்டே உள்ளே செல்ல திரும்பி நடந்தாள்.
அதற்க்குள் தன்னை சுதாரித்து தன் முகத்தை சிரித்ததுபோல் வைத்துக்கொண்டு அம்மா எனக்கு கம்பெனி கார் அலாட் பண்ணி கொடுத்திருக்கிறார்கள் என்றுகூறினாள்.