(Reading time: 22 - 44 minutes)

டனே மஹிந்தன் நீ இன்னும் ஸ்கூலிற்கு போகும் பிள்ளை கிடையாது. இந்த மஹிந்தனின்.. என்று கூறி ஒரு நிமிடம் மௌனமாகி அவளை மேலிருந்து கீழ்வரை தன் கண்களால் ரசித்துவிட்டு பின் செக்ரட்டரி என்று கூறினான்.

அவ்வளவு நேரம் சற்று சாதாரணமாக பேசிக்கோண்டு இருந்தவள் அவனுடைய அந்த ஒரு நிமிட மௌனத்திலும் பார்வையிலும் இவன் மனதில் என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறான் என்ற கோபமும் எச்சரிக்கையும் கொண்டு திரும்பவும் அவனுடன் விறைப்பாக பேச ஆரம்பித்தாள்.

நான் உங்கள் செக்ரட்டரி மட்டும் தான். என்று கூறி கோபத்தை சிறிது கட்டுப்படுத்தி அவனை முறைத்துப் பர்த்துக்கொண்டு தன் பேக்கை எடுத்துக்கொண்டு வெளியேற போனவளைத் தடுத்து கொஞ்சம் நில் ழையா என்றவன்

தன்னுடைய ப்ரீப்கேஸை உமாவை எடுத்துக்கொண்டு வரச்சொல்லிவிட்டு கவிழையாவைப் பார்த்து வா போகலாம் என்று கூறி ஒரு அடி எடுத்து வைத்தவன் அவள் வராமல் அங்கேயே நிற்பதைப்பார்த்து திரும்பி என்ன? என்று கேட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

நீங்கள் என்னுடன் ஏன் ஒன்றாக வருகிறீர்கள்? என்று கேட்டாள். அதில் எரிச்சலானவன் வாடீ! இப்படி நீ அலம்பல் பண்ணிக்கொண்டு நின்றால் கையை பிடித்து இழுத்துக்கொண்டு செல்வேன் என்றான்.

அவனுடைய பேச்சினை கேட்டவளுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது அவன் அவ்வாறு செய்தால் தன் மானம் தான் போகும் என்பதை அறிந்து வேறு வழியில்லாமல் அவன் பின்னால் சென்றாள்.

மஹிந்தன் காரின் பின் கதவை கவிழையா ஏறுவதற்கு தோதாக திறந்துகொண்டு அவளைப் பார்த்தான். கவிழையா ஏறாமல் காரை சுற்றி மறுபுறம் இருந்த கதவை திறந்து ஏறிக்கொண்டாள்

அவள் செய்வதை பார்த்தவன் உதடுகள புன்னகையில் விரிந்தன. உமாவிடம் தன் ப்ரீப்கேஸை வாங்கியவன் காரில் அவள் அருகில் உட்காந்தவுடன் கார் கவிழையாவின் வீட்டை நோக்கிச் சென்றது.

ஸ்வர்யாவிடம் தன் போனில் அப்பொழுது வந்த கவிழையா மஹிந்தனுடன் காரில் ஏறும் புகைப்படத்தை அஜய் காண்பித்தான்.பார் உன்னுடைய வருங்கால கணவன் வேறு பெண்ணுடன் வாழ்கையை அனுபவிக்கிறான்

நீதான் முன்பு மாதிரி என்னுடன் நேரம் செலவழிக்க மாட்டேன் என்கிறாய் என்றான்.

அவன் காட்டிய புகைப்படத்தை உற்றுப் பார்த்தாள் ஐஸ்வர்யா. அதில் கவிழையா முகத்தில் கோபமும் எரிச்ச்சலும் அப்பட்டமாக தெரிய கார் கதவைத் திறந்து ஏறுவதும் மறுபுறத்தின் கதவை திறந்துகொண்டு குறும்புச் சிரிப்புடன் மஹிந்தன் ஏறும் காட்சியை கண்டாள்.

அவள் வாய் தானாக மஹிந்தனை பார்த்து நான் இந்த மிடில் கிளாஸ் பெண்னைவிட எந்தவிதத்திலும் குறைந்து போகவில்லை

இவளை உன்னிடம் இருந்து விரட்ட செண்டிமெண்ட் வார்த்தை போதும் எனக்கு என்றுச்சொன்னவள் அஜய் நாளை நீ என்னிடம் வெளியே வரச்சொல்லி கேட்டிருதாயே எப்போழுதுவர என்று எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பு என்று கூறிவிட்டு அந்த க்ளப் விட்டு வெளியேறினாள்

அஜய்க்கு ஐஸ்வர்யா மேல் ஒரு கண் உண்டு இன்னும் அவளை முழுவதுமாக நெருங்க வில்லை ஒரு ஹக், லிப்கிஸ் மட்டுமே அவள் அனுமதித்திருந்தாள்

அவளை கவர்ச்சியான உடையில் கண்டு அவள் அழகை மொத்தமாக இன்னும் அனுபவித்து முடிப்பதற்குள் அவள் கல்யாணம் என்ற பெயரில் அவனைத் தவிர்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

அவளின் கல்யாணத்திற்குள் எப்படியும் அவளை மொத்தமாக நெருங்கும் சந்தர்ப்பத்திர்கு கொக்குபோல காத்திருந்தான்.

எனவே மஹிந்தனின் அலுவலக்த்தில் வேலை பார்க்கும் அவனின் நண்பன் மூலம் இதுபோன்ற மகிந்தனின் செயல்களை அவன் பெற்று அதனை ஐஸ்வர்யாவிடம் கூறி அவளை தன்னுடன் நெருங்கி பழகவைப்பதர்க்கு அவளின் பொறாமையை தூண்டிவிட்டுக் கொண்டு அதில் குளிர் காய விருபினான்.

அவள் போனதும் தன்னுடைய நண்பனிடம் எப்படியும் அவள் கல்யாணத்திற்குள் நான் அவளை அடையவேண்டும் என்றான். அதற்கு அவன் நீ நினச்சா முடிக்காமல் விடமாட்டாய் என்பது எனக்குத் தெரியும், என்று கூறியதும், அஜய் வில்லன் சிரிப்பு சிரித்தான்.

றுநாள் கவிழையா நீலவான கலரில் அடர் ஊதாநிற பார்டர், ப்ளௌஸ் உள்ள காட்டன் புடவையை உடுத்தி அடர் ஊதாக்கல் தோடும் அதற்கு பொறுத்தமான பென்டனுடன் கூடிய செயின் அணிந்து அவளின் இடுப்புவரை உள்ள கூந்தலை கிளிப்பால் அடக்கி அவள் கண்களுக்கு சிறிது மையிட்டு ஊதநிற பொட்டிட்டு வந்தாள்.

அவளை பார்த்த பார்வதிக்கு தன்மகளின் அழகை கண்டவளுக்கு இன்று வந்தவுடன் திருஸ்டி சுத்திப்போடணும் என்று நினைத்துக்கொண்டாள்.

நேற்று ஈஸவரன் தன் மகள் வேலையின் காரணமாக சோர்வாக இருப்பதைப்பர்த்தவர் நாளை மகளிடம் அவள் பணியிடத்தில் ஏதேனும் சிரமம் அல்லது பிரச்சனை இருக்குதா? என்பதனை விசாரித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.