(Reading time: 12 - 23 minutes)

10. நிர்பயா - சகி

Nirbhaya

ட்சுமியின் மனம் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தது.

இன்று காலை நடந்த நிகழ்வுகள் யாவும் கற்பனையாக கூடாதா என்ற நப்பாசை மனதில் எழாமல் இல்லை.

இன்று தான் ஊரிலிருந்து அவன் திரும்பி இருந்தான்.அவன்,லட்சுமியின் இரண்டாம் புத்திரன் பிரதாப்!!

ஆனந்தமாக பேசிக் கொண்டிருந்தனர் அனைவரும்...!

"அமெரிக்கா பயணம் எல்லாம் எப்படி இருந்தது?"

"ம்..சூப்பர் மாமா!செம ஜாலி!ரொம்ப ரிலாக்ஸா இருக்கேன்."

"ம்..சரிப்பா!நீ போய் ரெஸ்ட் எடு!"-என்று சங்கரன் கூறுவதற்கும்,அவரது வீட்டின் அழைப்புமணி அழைப்பதற்கும் சரியாக இருந்தது.எட்டி பார்த்தவர்கள் முகத்தில் அதிர்ச்சி!!

வெளியே காவல்துறையினர் நின்றிருந்தனர்.

"வாங்க இன்ஸ்பெக்டர் என்ன விஷயம்?"

"மிஸ்டர்.பிரதாப்பை அரஸ்ட் பண்ண வந்திருக்கோம்!"-அனைவரும் திடுக்கிட்டனர்.

"எதுக்கு?என் பையன் என்ன தப்பு பண்ணான்?"

"ஒரு பொண்ணை கற்பழித்து கொலை பண்ணிருக்கான்!"-அடுத்த அதிர்ச்சி!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"எ..என்ன?வாட் தி ஹெல்?நான் அப்படிப்பட்டவனா?யார்கிட்ட பேசுறோம்னு தெரிந்து பேசுங்க!"

"இன்ஸ்பெக்டர்!"-பரிச்சயமான குரல் செவிகளில் ஒலிக்க,அனைவரும் திரும்பினர்.

முகத்தில் உக்கிரம் கொப்பளிக்க,வெளியே நின்றிருந்தாள் நிர்பயா.சில நொடிகள் அமைதி காத்தவள்,ஆறு வருடங்களுக்கு பின் தன் முதல் அடியை எடுத்து வைத்தாள்.

"ஒருநாள் நான் நிச்சயம் திரும்பி வருவேன்!உங்களுக்கு எமனா வருவேன்.அன்னிக்கு என்னை பார்த்து கதி கலங்கி போய் நிற்பீங்க!நான் திரும்ப வருவேன்!"-ஆம்..!அன்று அவள் செய்த சங்கல்பம் இன்று நிறைவேறியது.பல்லவி மற்றும் விசாலாட்சி இருவரும் அதிர்ந்து போய் நின்றனர்.

"இழுத்துட்டு வாங்க அந்த மிருகத்தை!"-ஒரு காவலர் பிரதாப்பின் கரத்தை பற்ற,அவரை தடுத்தார் லட்சுமி.

"யார் வீட்டுக்கு வந்து யார் பையனை கூட்டிட்டு போற?அவன் மேலே கையை வைத்த..."-என்றவர்,உள்ளே சென்று மண்ணெண்ணையை எடுத்து வந்து,

"கொளுத்திப்பேன் ஜாக்கிரதை!"-அனைவரும் திடுக்கிட்டு நிற்க,நிர்பயாவின் முகத்தில் சலனமில்லை.அவள் கண் காட்ட அவர் கையில் இருந்த கேனை பிடுங்கினார் ஒரு காவலர்.அதை வாங்கியவள்,பொறுமையாக அதை திறந்து லட்சுமியின் மேல் மொத்த எண்ணெய்யையும் கொட்டினாள்.

"அம்மூ!"-அச்சமயத்திலும் முதலில் துடித்தது பல்லவி தான்!!

"மேட்ச் பாக்ஸ் எடுத்து வந்து கொடுங்க!!அவங்க கொளுத்தி முடித்ததும் அவனை அரஸ்ட் பண்ணி நாய் மாதிரி இழுத்துட்டு வாங்க!"-அவளது கூற்று அனைவரையும் கதி கலங்க வைத்தது.

"ஏ..யார்கிட்ட பேசுற நீ?"-தங்கைக்காக பரிந்தரைக்கு வந்தார் சங்கரன்.

"உஷ்..!"-சுட்டுவிரலை தன் இதழில் வைத்து அவரது கோபத்தை தன் சினத்தால் அடக்கினாள் நிர்பயா.

"பேசாம இரு!இல்லைன்னா,அசிங்கப்படுத்தி அவனை இழுத்து போக சொல்வேன்."

"அம்மூ என்ன பேசுற நீ?"

"இன்ஸ்பெக்டர் ஒபே மை ஆர்டர்!இவனை இழுத்துட்டு போங்க!"-ஆட்சியராய் அவள் ஆணையிட,பிரதாப்பின் கரத்தை பற்றி இழுத்து சென்றனர் காவல் துறையினர்.

வந்த பணி நிறைவேறியதும்,திரும்பியவளை தடுத்தது சங்கரனின் குரல்!!

"தப்பு பண்ணிட்ட!பெரிய தப்பு பண்ணிட்ட!இதுக்காக அனுபவிப்ப!"-நிர்பயா தன் கனலை கக்கும் பார்வையை அவர் மேல் விடுத்து கூறினாள்.

"அதைப் பார்க்க நீங்க இருக்க மாட்டீங்க!"என்று!!

"நான் எதிர்ப்பார்க்கவே இல்லைடி!அவன் உன் ரிலேஷனா?"

"ம்..."

"அவ்வளவு கேவலமா ச்சே..!"

"சுப்ரியாவை எப்படிங்க அவனுக்கு தெரியும்?"

"பிரதாப்,சுப்ரியா படித்த அதே காலேஜ்ல தான் எம்.எஸ் படித்தான்.நான் யாரால உன்கிட்ட வந்து லவ்வை சொன்னேனோ!அதே மாதிரி அவன் ப்ரண்ட்ஸ் அவனை தூண்டிவிட்டு அவளை கம்ப்பல் பண்ண வைத்திருக்காங்க!ஆனா,அந்த பொண்ணு விஷ்வான்னு ஒருத்தனை லவ் பண்ணிருக்கா!அவன் தான் வாழ்க்கைன்னு சொல்லிட்டா!இவனுக்கு கோபம் தாங்கலை..அந்த பொண்ணு ஊருக்கு வந்திருந்த சமயத்தில் இங்கே கொன்னுட்டான்!அங்கேயே கொன்னா சந்தேகம் வருமே!சுப்ரியாவை கொன்னுட்டு வித் இன் 2 ஹவர்ஸ்ல அமெரிக்கா ஃப்லைட் கோயம்புத்தூரில ஏறியாச்சு!ப்ளான் பண்ணி சாகடித்திருக்கான்!"

"............"-நிர்பயா என்ன எண்ணினாளோ,ஒன்றும் பேசாமல் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

"பிரதாப்பை நினைத்து வருத்தப்படுறீயா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.