“ராகவேந்திரனின் அட்ரஸ்” கண்கள் மின்னிட அதை பார்த்தவள், கையில் நாளிதழை எடுத்தாள்.
“அபி..”
“என்ன நிரூ?”
“ஒரு நியூஸ் இருக்கு!”
“என்ன?”
“இது உனக்கு நல்லதான்னு தெரியல..ஆனா கண்டிப்பா கெட்டது இல்லை!” என்று அந்த பேப்பரை அவளிடம் கொடுத்தாள் அர்ப்பணா.
அந்த செய்தியை பார்த்த, அர்ப்பணாவின் முகம் அதிர்ச்சியை பிரதிபலித்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 01..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
இன்னொரு பக்கம், ஆஃப் ஆகியிருந்த கைப்பேசியை சார்ஜரில் போட்டாள் கண்மணி. தனியாய் இருப்பதினாலோ என்னவோ, அவளது அன்றாட வேலை நிரல் ஒரே போல இருக்காது. அன்று மிகவும் சோம்பலாக இருந்ததினால்
காலை உணவு ஏதும் தயாரிக்காமல் ஜூஸ் குடித்தபடி ஃபோனை உயிர்ப்பித்தாள் கண்மணி.
உடனே வெற்றியின் அழைப்பு வந்தது.
“வெற்றி… குட் மார்னிங்” அவளது உற்சாகமான குரலைக் கேட்டு எதிர்முனையில் அமைதியானான் வெற்றி.
“ ஹலோ கேட்குதா டா?”
“கண்மணி எங்க இருக்க?”
“அய்யா என் மேல ரொம்ப கோபத்துல இருக்கீங்க போல!கண்மணின்னு கூப்பிடுறீங்க?”
“ப்ச்ச் கேட்ட கேள்விக்கு பதில் வராதா?”
“ வீட்டுலதான் இருக்கேன்”
“வெளில எங்கயாவது போனியா?”
“இல்லையே!”
“ரேடியோ கேட்டியா?”
“ப்ச்ச் இல்லடா..ஜூஸ் குடிச்சிட்டு இருக்கேன் “
“அப்படியே இரு..நான் வரும்போது மட்டும் கதவை திற!”என்றான் அவன் இறுகிய குரலில்.
“ஏதாவது பிரச்சனையா?”. ஃபோனை வைத்திருந்தான் வெற்றி.
அபியிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, ராகவேந்திரனின் வீட்டிற்கு சென்றாள் நிரூபணா. வீட்டின் கேட் பூட்டப்பட்டிருக்க, உள்ளே ராகவனின் குரலில் கேட்டது. எப்படி உள்ளே செல்வது?என்று யோசித்தவள், ஆபத்திற்கு பாவமில்லை என்று எண்ணி வழக்கம் போலவே சுவர் ஏறி குதித்தாள். அங்கு தான் கண்ட காட்சியில் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டிருந்தாள் நிரூபணா.
“ அம்மா.. நான் எது நடக்க கூடாதுன்னு நினைக்கிறேனோ, எப்பவுமே அதுதான் நடக்குது ஏன் மா?” உடைந்த குரலில் கேட்டான் சத்யேந்திரன்.
“கண்ணா, பேசுறதுக்கு நேரமில்லை..”
“நான் கண்மணியை பார்க்கனும்மா”
“இப்போவே போ! அதான் முழுசா நனைஞ்சாச்சே! இனி என்ன இருக்கு? நீ போய்ட்டு வாப்பா”என்று சுலோட்சனா சமிக்ஞை காட்டவும், சத்யனின் கார் கண்மணியின் வீட்டை நோக்கி சீரி பாய்ந்தது.
காலிங் பெல் சத்தம் கேட்டதுமே ஓடி வந்து கதவை திறந்தாள் கண்மணி.
“ வா டா.. என்ன பிரச்சனை?”என்று அவள் கேட்க, அவளை மேலிருந்து கீழென ஒரு முறை பார்த்து வைத்தான் வெற்றி.
“வெற்றி.. உன்னைத்தான் கேட்கிறேன்..என்னாச்சுன்னு சொல்லு!”
“இந்தா இதைப்படி!” நாளிதழை நீட்டினான் வெற்றி.
கேள்வியுடன் அதை படிக்க ஆரம்பித்தாள்கண்மணி.
பிரபல நடிகர் சத்யனின் தொடரும் காதல் வேட்டை! அர்ப்பணாவை தோழி என்று அழைத்தனின் உண்மை பின்னணி இதுவோ? மறைந்த நடிகர் கௌரவின் வாரிசான, நடிகர் சத்யனும் நடிகை அர்ப்பணா காதலித்து வந்தது நாம் அறிந்ததே. பலநேர்காணகல்களில் இதை இருவரும், நேரடியாக மறுத்து வந்தாலும், மக்களுக்கு பிடித்த ஜோடியாக இருவரும் அங்கீகரிக்கப்பட்டனர்.
நேற்று நடந்த நட்சத்திர விருது விழாவில், “அர்ப்பணா என் தோழி” என்று சத்யன் பேசிய உரை ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இதற்கிடையில், சத்யனின் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படமொன்று இணையத்தளங்களில் காட்டுத் தீயார் பரவி வருகிறது. இந்த பெண் சத்யன் தற்பொழுது நடித்து வரும் படத்தில் உதவி இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது!
இதுதான் அந்த செய்தியின் சுருக்கம். கண்மணி மழையில் நனைந்தபோது, சத்யன் அவளுக்கு தன் கோட்டை போர்த்திவிட்ட புகைப்படங்கள் அந்த செய்தியுடன் இணைக்க பட்டிருந்தது.
நேற்றிரவு முதல், இந்த செய்தியை படிக்கும்வரை கண்மணியின் மனதில் தென்றலாய் வருடிய நிகழ்வு அது. இன்று மனசாட்சியில்லாத சில பேனாக்களினால் குத்தி கிழிக்கபட்டு, அவள் உள்ளத்தில் புயல் அடித்தது.
வெற்றியை இயலாமையுடன் பார்த்தாள் கண்மணி. அவன் முகபாவனையை வைத்து, வெற்றி என்ன யோசிக்கிறான் என்று அவளால் கணிக்க முடியவில்லை.
“என்ன ஆனாலும் சரி கண்ணம்மா, என் மேல படிஞ்ச கரை உன்மேல படியாது..இந்த சினிமாவின் நிழலில் இருந்து உன்னை நான் காப்பாத்துவேன்” , நேற்று பேச்சின் ஊடே சத்யன் சொன்ன வாக்கு அது.
அவன் வார்த்தையை காப்பாற்ற வரவில்லையா? என்று கண்மணியின் மனம் கேட்கும் முன்னரே அந்த வீட்டிற்குள் புயலென புகுந்தான் சத்யேந்திரன்.
கண்மணியின் கனவு பலித்திடுமோ?
-வீணை இசைந்திடும்-
{kunena_discuss:1055}