அவனுடைய அதீத முகமலர்ச்சி காரணமாக இரண்டுக் கண்கள் அவன் மீது கவனம் செலுத்த வைத்ததையும், வன்மமாய் முறைத்தையும் அவன் அறிந்திருக்கவில்லை.
வேண்டா வெறுப்பாக அன்றைய மீட்டிங்க்கில் வந்திருந்த அவனுடைய பார்வை ரூபனைத் தொட்டு தொடர , ரூபனின் பார்வையோ அடிக்கடி பட்டும் படாமல் தன் அருகில் இருந்த அனிக்காவைத் தொட்டு தொட்டுச் சென்றதை கவனித்தான். இப்போது அனிக்காவும் முழுவதுமாய் அவன் பார்வையில் வந்து விழுந்தாள்.
ஓஹோ இவள்தான் இவன் மகிழ்ச்சிக்கு காரணமா? என்னைப் பொறுத்த வரையில் இவன் வாழ்க்கையில் சந்தோஷமாய் இருக்க கூடாதே? அதை என்னால் பொறுக்க இயலாதே? என்றெண்ணியவன் அவர்களை முழுமையாக கவனிக்க ஆரம்பித்தான். நிகழ்ச்சிகள் நிறைவுற்று அவர்கள் மாலிற்கு பயணிக்க அவர்கள் செல்லுமிடமெல்லாம் அவனுடைய விலையுயர்ந்த கார் அவர்களைப் பின்தொடர்ந்தது.
மாலில் இருந்து சிரித்துக் கொண்டே திரும்பி காரில் ஏறி பயணித்த இருவரின் முகமலர்ச்சியைப் பார்த்து இவன் பற்களை நறு நறுவெனக் கடிக்க மேல் நாடியின் அவனின் நான்கு போலிப் பற்களும் சட்டென்று வெளிப்பட்டதாலோ என்னமோ வெகு விகாரமாய் அவனுடைய முகம் தோன்றலாயிற்று.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
உன்னருகே நானிருந்தால்
என் பொழுதுகள் அழகாகும்..
உன் மொழி எப்போதும் கேட்டிருந்தால்
என் உள்ளமெல்லாம் உவகை பெறும்...
நீ எந்தன் அருகில் வந்து
இதழ் விரிய புன்னகைத்தால்
கண்கள் கொள்ளா அவ்வழகோ - என் மனதில்
படக் காட்சியென பதிந்து விடும்....
காலமெல்லாம் அருகிருக்க
மாலையிட்டு சொந்தம் கொள்ள
சம்மதமாய் உன் வருகையை
எதிர்பார்த்திருப்பேன்.
நீ எந்தன் வாழ்வில் வரும்
அந்நன்னாளுக்காய் காத்திருப்பேன்.
தொடரும்
{kunena_discuss:970}