(Reading time: 23 - 46 minutes)

கே. இனிமேல் நான் தான் உங்க ப்ராஜெக்ட் ஹெட்.உங்களோட அடுத்த ப்ராஜெக்ட் என் கூட தான்.Monday லிருந்து ஸ்டார்ட் பண்ணிடலாம்..”என்று அவன் பேசிக் கொண்டிருந்தபோதே அவனது மொபைல் அடித்தது.அந்த மொபைலில் ஒலித்த பாடலைக் கேட்டு கவி மேலும் கோவமானாள். அப்படி என்ன பாட்டுனா

அழகே....அழகில் தீதொரு

ஷிலயழகே

மலரே...என்னுயிரில் விடரும்

பனிமலரே

மலரே நின்னே கன்னதிருன்னல்

மிழிவிகிய...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

இது தாங்க அந்த பாட்டு.இப்ப சொல்லுங்க கவிக்கு கோவம் வராம இருக்குமா...,

மொபைல் ஒலித்ததும் ,கவியை பார்த்து ஒரு அர்த்த பார்வை வீசியவன், அனைவரையும் பிறகு பார்க்காலம் என்றுக் கூறி போக சொன்னான். வெளியே வந்த அனைவரும் கவியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெளியே வந்த மித்ரா கவியை திசை திருப்புவோம் என்று நினைத்து, ” கவி வாடி நாம காண்டீன் போயிட்டு வருவோம்...” என்று அழைக்க

கவி இருந்த கோபத்தையெல்லாம் அவள் மீது காண்பித்தாள். ”போடி, எப்பா பாத்தாலும் சாப்பாடு சாப்பாடுனு...,மனுஷனோட மனச புரிஞ்சிகாமா..”என்று கத்த ஆரம்பித்தால் கவி.

கவி அவ்வளவு கோபத்தில் இருந்தாள். அவளது நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் அவளை மலர் என்று அழைத்தால் பிடிக்காது என்று, அதனால் யாரும் அவளை என் இப்படி நடந்துக்கொள்கிறாய் என்று கேட்கவில்லை.

கோபமாக இருந்தவளைப் பார்த்த யாமினி தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி அனைவரையும் அனுபிவைத்தாள். அனைவருக்கும் ஆகாஷ் தெரியாமல் கூறிவிட்டான் என்று தோன்றியது, அர்னவை தவிர. கவிக்கும், ஆகாஷும் ஒருவரை ஒருவர் முன்பே அறிந்திருக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது.

போகும்பொழுது, ஒரு உந்துதலின் பேரில் ஆகாஷின் அறையை திரும்பி பார்த்த அர்னவ், அங்கு ஆகாஷ் நின்றுக்கொண்டிருப்பதை பார்த்தன்.

யாராக இருப்பான் இவன்...என்ற எண்ணம் அர்னவின் மனதில் எழுந்தது.

அனைவரும் சென்றவுடன்..,அவளை மீட்டிங் ஹாலிற்கு அழைத்துச்சென்றாள்

யாமினி. அவளுக்கு தெரியும் கவியின் மனநிலை எப்படி இருக்கும் என்று. அவளது சிறு வயது முதலே இந்த உணர்வுகளைப் பார்த்தவள் அல்லவா...

கவி அங்கு சென்றதுமே அழ தொடங்கிவிட்டாள்.அவள் அழுது முடித்ததும்அவளிடம் பேச ஆரம்பித்தாள் யாமினி.

“விடு கவி,ஆகாஷ் தெரியாமதான கூப்பிட்டாறு..”

“இல்ல யாமினி,அப்படிக் கூப்பிடாலே தாங்க முடியல அதுவும் தெரிஞ்சே(!!!?)கூப்பிட்டா..” என்றுக் கூறி அழுதவளை எப்படி சமாதானம் படுத்துவாள்.

“உனக்கு தெரியும்ல எதனால எனக்கு அந்த பெயர் பிடிக்காதுனு...,அத கேட்டாலே எனக்கு கோவமா வருது நான் என்ன பண்ண..”என்று பலவாறு புலம்பியவளை ஒருவாறு தேற்றினாள்.அவள் அழுது முடித்தும் முகம் கழுவி வர சொல்லி காண்டீன் சென்று வந்தார்கள். பிறகு தனது கேபினுக்கு திரும்பினார்கள். அவள் வந்ததும் அனைவரும் சினேகமாக புன்னகைத்தனர்.

நேராக மித்ராவிடம் சென்றாள் கவி.அவளை என்ன என்பதுபோல பார்த்தாள் மித்ரா.

“சாரி டி,நான் எதோ கோவத்துல..”

“அப்படியே அறைஞ்சனா..., என்னடி நினைச்சிகிட்டு இருக்க....” என்று அவளை அடிக்க கை ஓங்கியவள் அவளை கட்டி அணைத்தப்படி”லூசாடி,நீ..,எங்ககிட்ட உன்னோட கோபத்த காட்டாமா யார்ட காட்டுவ...”என்றுக் கூறினாள் மித்ரா.

அங்கு வந்த அமர் ” என்ன ஒரு சீன்...,தேவதை வம்சம் நீயோ..னு பேக் கிரௌண்ட் சாங் போடுங்க..”என்று கலாய்த்தான் அவர்களை.ஒரு வழியாக அங்கே சோகம் போய் சந்தோசம் தொற்றிக்கொண்டது.

ஆகாஷின் அறையிலோ,

தனது மொபைலை எடுத்தவன், திரையில் தெரிந்த பெயரை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தான்.

“சொல்லுங்க ஜனா..”

“........”

“என்னது 3 மாதம் தான் டைம்அ...,எனக்கு இன்னும் ஒரு மாதம் டைம் சேர்த்து தாங்க..”

“............”

“நான் ரொம்ப பாவம் இல்லையா,கஷ்டப்பட்டு சரிபடுத்த வேணாமா...”

“தாங்க்ஸ்...,ஓகே பாய்” என்று போனை வைத்தவன் ஒரு அழகான சிரிப்பை உதிர்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.