“சரி,உங்களை மீறி நடந்துட்டாளும் ..,வைடா,அதான் கரெக்ட் நேரத்துக்கு போன் பண்ணிட்டியே...”
“...”
“ஓகே,பாய்...”
போனை வைத்தவன் மேற்கொண்டு என்ன செய்ய என்று தெரியாமல் யோசனையுடன் அவனது அறைக்கு சென்று தனது கட்டிலில் விழுந்தவன், தனக்கு எதிரில் குறும்பு சிரிப்புடன், போட்டோவில் இருந்தவளை பார்த்து அவளுடனான தனது இனிய தருணங்களை நினைத்துப்பார்த்துக் கொண்டே உறங்கிவிட்டான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
தனது பிளாட்டிற்க்கு சென்றவள் சுத்தமாக தன்னை நினைத்து வெட்கப்பட்டாள்.அவனது அணைப்பிற்கு தனது தேகம் ஏங்குகிறது என்று இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் உணர்ந்துக் கொண்டாள்.
இவனை பார்த்தவுடனே இப்படி எதாவது நடக்கும் என்று அவள் ஊகித்து இருந்தாள். ஆனால், அவள் சொன்ன எந்த ஒரு கட்டளையையும் அவன் முன் ஏற்க மறுக்கிறது அவளது மூளை.
எப்படியாவது இவனை இங்கிருந்து துரத்தவேண்டும் என்று நினைத்தாள் கவி.
“என்னவனே உன்னை எனது
கனவு என்று நினைத்து
மறக்க நினைத்தேன்
ஆனால் நீயோ நான்
கனவல்ல உன்னால்
மறக்க முடியாத நினைவு
என்று உணர்த்திக்கொண்டு
இருக்கிறாய், என்னால்
உன்னை கனவு என்று
கண் திறந்து தொலைக்கவும்
முடியவில்லை,கண்மூடி
நினைவு என்று உன்னை
உணராமல் இருக்கவும்
முடியவில்லை,பாவை நான்
என்செய்வேன்...”
அதை எவ்வாறு செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே தூங்கிவிட்டாள் அவள்.
அவளுக்கு தெரியவில்லை நாளை காலை இவனை மட்டும் அல்லாமல் இன்னொருவரையும் சமாளிக்க வேண்டும் என்று.
யார் அந்த இன்னொருவர்.(!!), அவரது வருகை ஆகாஷையும் கவியையும் இணைக்குமா......பிரிக்குமா.......
“முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன்வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழிதிறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா
முதற்கனவு முதற்கனவு மூச்சுள்ளவரையிலும் வருமல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா”
தொடரும்
{kunena_discuss:1099}