(Reading time: 23 - 46 minutes)

வளது வீட்டின் வாயிலில் வேஷ்டி சட்டையில் அவள் கதவை திறந்தவுடன் அருகாளில்(நிலைபடி) சாய்ந்த கோலத்தில் நின்றிருந்தான் ஆகாஷ்.

அவள் அவனையே பார்த்தபடி இருக்க தனது இடது பக்க புருவத்தை என்னஎன்பது போல் தூக்கினான் ஆகாஷ்.

அதுவரை அவனையே பார்த்தவள் தனது கண்களை அவனிடம் பிரித்தெடுத்து

“சார்..... நீங்க.... இந்த...காலையில..இங்க..எப்படி..”என்று கோர்வையாக பேசமுடியாமல் திணறினாள் கவி. ஏனென்றால் ஆகாஷிற்கும் அவளுக்கும் இடையேயான தூரம் குறைந்திருந்தது.

“என்னடா செல்லம், வாயெல்லாம் குழறுது...,மாமாவ பார்த்து ரோமான்ஸ் மூடுக்கு போய்டியா...,என்ன சார்னுலாம் கூப்பிடாம,நீ ஆசையா எப்படி கூப்பிடுவாயா அப்படி கூப்பிடு..” என்று அவன் கூறவும்,கவிக்கு சட்டென்று கோபம் வர

“நீங்க யாருனே தெரியாது மிஸ்டர் ஒழுங்கா போய்டுங்க..” என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே அவளது பிளாட்டிருக்கு அவர்களது குரூப்பே வந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவர்களை பார்த்து ஒரு நிமிடம் திகைத்தவள் அடுத்த நிமிடம் ஆகாஷை தாண்டிச்சென்று அவர்களை வரவேற்றாள் கவி.

“ என்னப்பா வரணு சொல்லவே இல்லை..”என்று கவி கேட்க

“ஒரு சர்ப்ரைஸா இருக்க தான் “என்றான் அமர்.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல கவி” என்றான் சுதாகர்.

“என்ன கவி உன்னோட பக்கத்து வீட்டுல புதுசா வந்துருக்குறவங்க யார்னு உனக்கு தெரியுமா” என்றாள் மித்ரா.

“யார்டி உனக்கு தெரிஞ்சவங்களா..”

“நம்ப எல்லோருக்கும் தெரிஞ்சவங்கதான் ..”என்றாள் யாமினி.

“எனக்கு தெரிஞ்சவங்களா..”என்று கவி யோசிக்க

“அது வேற யாரும் இல்ல நம்ப ஆகாஷ் தான் “ என்று மித்ரா சொல்ல,அவனை திரும்பி பார்த்த கவியின் கண்களில் அப்பட்டமாக கோபம் தெரிந்தது.

“என்ன சார் உங்க பக்கத்து வீட்டுகாரங்காட்ட சொல்லலியா” என்றுகேட்டாள் மித்ரா.

“நான் வந்தப்ப ம...கவி தூங்கிட்டாங்க,அனு மட்டும் தான் இருந்தாங்க”என்று கவி பதில் சொல்லும் முன்னே பதில் சொன்னான் ஆகாஷ்.

அதற்குள் அர்னவ் “அனு எங்க..”

“அவ தூங்குறா ” என்றாள் கவி.

அவளை போய் எழுப்ப வேண்டியது தான் என்றுக்கூறிகொண்டே மித்ரா உள்ளே போக அனைவரும் அவளை தொடர்ந்து உள்ளே போயினர்.

அவர்கள் போன உடன் அவன் புறம் திரும்பிய கவி, அவனை முறைக்க பார்த்தாள்.

அவள் தன்னை முறைக்க பார்ப்பதை ரசித்தவன் அவளை மேலும் சீண்டினான்.

“என்னடா செல்லம் மாமா அவ்வளவு அழகா இருக்கேனா..”என்றுக் கூறிகொண்டே அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

“ம் நினைப்புதான் பொழப்பை கெடுக்குமா அ...ஆகாஷ்,என்ன நிம்மதியா வாழவிட கூடாதுனு முடிவு பண்ணிருகிங்களா( அப்ப இவன் மட்டும் இல்லையா)..”என்று அவனிடம் பாய்ந்தாள் கவி.

“நான் உன்கூட இருந்தா தான் உனக்கு நிம்மதினு எனக்கு தெரிது உனக்கு தெரிலிய செல்லம்.

ஆனா மாமா ரொம்ப பாவம்,ஏன் தெரியுமா இப்பயெல்லாம் நீ பெட் காபி தான் குடிக்கிறியா..”என்று அவளை பார்த்தப் படிய அவன் கூற,அப்போதுதான் தான் வந்து கதவை திறந்த கோலத்தை பார்த்தாள் கவி.

அவளை பார்த்தவன் சிரித்துக்கொண்டே “நீ எப்படி இருந்தாலும் பரவா இல்லடி செல்லம் மாமாவுக்கு நீ எப்பொதும் அழகி தாண்டி..”என்றுக் கூறி சென்றான் ஆகாஷ்.

அவனையே முறைக்க பார்த்த கவி அனு அழைத்ததும் கதவை சாத்திவிட்டு உள்ளே சென்றாள்.

“சாரி கவி. ஆகாஷ் நேத்தே சொன்னாரு நான் தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்..” என்றாள் அனு.

“பரவா இல்லடி விடு, நான் போய் எல்லார்க்கும் காபி போட்டுட்டு வரேன்..” என்றுக் கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் கவி.

தன்னை தூய்மைபடுத்திக் கொண்டு அனைவருக்கும் காபி போட்டு எடுத்து சென்றாள் கவி.

அனைவருக்கும் அவள் காபி கொடுத்துவிட்டு, ஆகாஷிற்கு மட்டும் பழசாறு எடுத்து வந்துக் கொடுத்தாள் கவி.

அதை பார்த்த மித்ரா, “ என்ன கவி சார்க்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு..”என்றுக் கேட்க

“அவருக்கு தான் காபி பிடிக்காதுல,அதான்..”என்றாள் கவி.

“அது எப்படி கவி உனக்கு தெரியும்...”என்று அமர் கேட்க, என்ன பதில் சொல்வதுனே தெரியாமல் கவி விழிக்க அதற்குள் “நான் தான் ஜூஸ் எடுத்துகிட்டு வரசொன்னேன் ” என்றுக் கூறி சமாளித்தான் ஆகாஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.