அனைவரும் அவர்களது வேலையில் கவனம் செலுத்த, கவிக்கோ மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. அவளுக்கு பழைய நினைவுகள் மனதை ஒரு நிலைபடுத்தாமல் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.மதிய உணவை கூட அவளால் சரியாக உண்ணமுடியவில்லை.அங்கேயும் ஆகாஷ் வந்து இணைந்துக் கொண்டான்.அனைவரும் அவனிடம் அன்பாக பழக ஆரம்பித்தனர், அவனது செய்கைகளும் அதற்கு ஏற்றார் போல் இருக்க அனைவரும் அவனிடம் நன்கு இணைந்துக்கொண்டனர்.அவன் இதைஎல்லாம் தெரிந்து செய்கிறான் என்று அவளுக்கு புரிந்துதான் இருந்தது.அவனது அருகாமை அவளுக்கு பிடித்து இருந்தாலும் அது தேவை இல்லை என்று அவளது மனம் முரண்டிகொண்டே இருந்தது.
ஒரு வழியாக அன்றைய பணி முடிந்து அனைவரும் கிளம்பி இருந்தனர்.மறுநாள் சண்டே என்பதால் அனைவரும் ஒரு துள்ளலுடன் கிளம்பினர். அப்பொழுதும் ஆகாஷ் அனைவருக்கும் விடையளிக்க தவறவில்லை.குறிப்பாக அவளுக்கு... அனைவரும் பார்க்கிங்கில் பேசிக்கொண்டு கிளம்ப இருந்தபொழுது அவர்களை நோக்கி வந்தான் ஆகாஷ்.
“ஹாய் என்ன எல்லாரும் கிளம்பியாச்ச..”என்று கவியை பார்த்தவாரே கேட்டான் ஆகாஷ்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
“ஆமாம் ஆகாஷ்”என்றுக் கூறினான் சுதாகர்
“சண்டே பிளான் பண்றிங்களா..,என்ன பிளான்”என்றான் ஆகாஷ்.
“அப்படிலாம் ஒன்னும் இல்லை இந்த வாரம் யாரும் ப்ரீயா இல்லை”என்றாள் மித்ரா.”
“ஓகே பாய்”என்றுக் கூறிகொண்டே கவியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.அவளை நோக்கி அவன் வரவும் கவியின் மனம் தறிகெட்டு துடிக்க ஆரம்பித்தது.
அவளுக்கும் அவனிற்கும் இடையேயான தூரம் மிகவும் குறைய அவள் நிலையோ மிகவும் மோசமாக ஆகிகொண்டிருந்தது.
அமர் மித்ராவின் கலாட்டாவை அனைவரும் கவனித்துக்கொண்டிருந்ததால் அனைவரும் அவர்களை கவனிக்க மறந்தனர்.
அவளது அருகே சென்றவன்,” ஐ மிஸ் யு மிளகா..”என்றுக் கூறி அவளது அருகில் இருந்த காரில் ஏறி சென்று விட்டான்.அவன் சென்றும் அவளது மனம் சம நிலையை அடைய படாத பாடுபட்டது. காரில் சென்றவனுக்கோ மனம் பலவாறு இருந்தது.கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அவன் பட்ட வேதனைக்கெல்லாம் ஒரு வடிகால் இன்று கிடைத்ததை போல் உணர்ந்தான். இனி எந்த ஒரு நிலையிலும் அவனது மிளகாயை பிரியக் கூடாது என்றதொரு நினைப்புடன் தனது காரில் பாடலை ஒலிக்கவிட்டான்.அந்த பாடல் கூட அவனுக்கு ஏற்றதாக ஒலித்தது.
ஒரு நாள் ஒருபொழுது
உன் மடியில் நான் இருந்து
திருநாள் காணாமல்
செத்தொழிந்து போவேனோ?
தலையெல்லாம் பூக்கள் பூத்து
தள்ளாடும் மரம் ஏறி
இல்லையெல்லாம் உன் பெயரை
எழுதாமல் போவேனோ?
உன் பாதம் தாங்கி நெஞ்சில்
பதியாமல் போவேனோ?
உன் பன்னீர் எச்சில் ருசியை
அறியாமல் போவேனோ?
உன் உடலை உயிர் விட்டு போனாலும்
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ?(2)
உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி
நீ வாழும் காலம் வரை நானும் வாழ்வேனோ?
என் உரிமை நீதானே?
அந்த பாடல் அவனின் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபளிக்க அமைதியாக அதனில் ஒன்றிவிட்டான் ஆகாஷ்.
கவியும்,அனுவும் சென்னை டிராபிக்கை சமாளித்து ஒரு வழியாக அறைக்கு வந்து சேர்ந்தனர்.
இன்று காலை முதல் அவளுக்கு நடந்த சம்பவங்கள் மற்றும் அவளது மனக் குழப்பங்களால் தலைவலி ஏற்பட ப்ரெஷ் அப் ஆகி அவளுக்கும் அனுவிற்கும் சேர்த்து டீ போட்டாள். அனுவும் ப்ரெஷ் அப் ஆகி வந்தவுடன் இருவரும் குடிக்க ஆரம்பித்தனர்.
அமைதியாக இருந்த கவியை பார்த்த அனு பேச ஆரம்பித்தால்
“கவி நாளைக்கு எங்க போலாம்”
“எங்கேயும் போக வேண்டாம் அனு.டிரெஸ் வாஷ் பண்ணனும்”
“சரி டி..”
“ம்”
“ஆகாஷ் செம ஜாலி டைப்ல...”
“ம்..”
“நம்ம குரூப்க்கு இன்னொரு ஆளு கிடசிட்டாங்க”
“அனு சாரி,எனக்கு தலைய வலிக்குது...”
“ஒ நான் அப்ப சமைக்கிறேன்.நீ போய் ரெஸ்ட் எடு” என்றுக் கூறி அனு சமைக்க சென்று விட்டாள் அனு.