“அவங்க சரியாகிடுவாங்க மாமா… சீக்கிரம் உங்கிட்ட பேசுவாங்க… நீ அழாத…..”
தன் பிஞ்சுக் கரங்களால் அவனின் முகம் பற்றி அவள் கூற,
அதற்கு மேலும் தாங்காதவனாய் அவளை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான் அவன் சத்தமில்லாமல்…
“எங்கிட்ட வந்துடுடி… ப்ளீஸ்… சகி… நீ இல்லாம முடியாதுடி… ப்ளீஸ்டி… சகி… வந்துடுடி….”
அவன் இங்கே மானசீகமாக அவளிடம் உரையாட, அவனின் அந்த குரல் அவளுக்கு கேட்டதோ, அவளது இதயம் துடிக்க ஆரம்பித்தது வேகமாய்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
அவன் உயிர் இங்கே உருக, உள்ளே அவளது சுவாசமோ எகிறியது அதிகமாய்…
அவன் அழுகை இங்கே அவன் கன்னம் தாண்டி வழிய, அங்கே அடைத்துவைக்கப்பட்டிருந்த அவளது இமைக்கதவுகளோ ஒரு பெரும் யுத்தத்தினை முறியடிக்க போராட,
இங்கே அவன் அதரங்களிலோ, அவளது பெயர் ஒன்றே உச்சரிப்பாய் இருக்க, அவளது இதழ்கள் பிரிந்தது…
அப்போது அவன் மெதுவாக பிரேமியிடமிருந்து விலகி எழுந்து கொள்ள,
“கா…….ர்…….த்………தி…..” என அவள், அவனது பெயரை உச்சரித்து முடித்த வேளை,
அவன் சட்டென அவளைக் கண்ணாடி கதவின் வழியே பார்க்க, அவளது விழிகளும் மெல்ல திறந்து கொண்டது சட்டென….
தொடரும்
{kunena_discuss:995}