‘கடவுளே எந்த தடங்கலும் இல்லாம காரியத்தை முடித்து கொடு’
என்று மானசீக வேண்டுதல் வைக்க... மறு நொடியே அதற்கு எதிர்மறையாக கட்டிடத்தையே அதிர வைத்தது சைரன் ஒலி!
“ஃபயர் ட்ரில்லிற்கான சைரன் அது!!!
அது கூட நல்ல சகுனம் தான் என்று எண்ணிக் கொண்டவனுக்கு அவனது கெட்ட சகுனம் ஆரம்பித்து விட்டது என்று தெரியுமா என்ன?
சைரன் ஒலி அடித்ததும் அலுவலகத்தில் இருந்த அத்தனை பேரும் அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறினர். இதில் ஆர்யமனின் மீட்டிங் குழுவினரும் அடக்கம்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
பின் சிறிது நேரம் கழித்து, ஃபயர் ட்ரில் முடிந்தது என்று அறிவுப்பு வரவும்... மீண்டும் அத்தனை பேரும் கட்டிடத்திற்குள் நுழைய...
ஆர்யமன் படி ஏறும் இடத்திற்கு அருகே இருந்த கூட்டத்தைக் கண்டதும், ‘கிளையண்ட்ஸ் எதுக்கு அலைகழிச்சுகிட்டு! லிஃப்ட் ஆபரேட் ஆக ஆரம்பிச்சதும் போகலாம் என்று எண்ணியவனாக தன் மீட்டிங் குழுவினரை அழைத்துக் கொண்டு கூட்டத்தை விட்டு விலகி நின்ற பொழுது....
அந்த கூட்டத்தில் ஒருத்தியாக படிகளில் ஏறிக் கொண்டிருந்த கோகிலாவைப் பார்த்து பதறிப் போனான்.
‘என்ன இவ??? இந்த நெரிசல்ல சிக்ஸ்த் ஃப்ளோர் வரை ஏறப் போறாளா?’,
நெஞ்சம் படபடக்க.... அடுத்த கணமே அவன்,
“ஹே... கோக்..... கோக்... கோகிலா... பப்பி”, என்று சத்தமாக அழைத்தவாறு அந்த கூட்டத்திற்குள் பாய்ந்தான்.
சுற்றி இருந்த இரைச்சலில், ஆர்யமனின் சத்தம் கோகிலாவிற்கு தாமதமாகவே எட்ட, அவள் திரும்பி பார்க்கும் நேரத்திற்குள் அவள் கையைப் பற்றியே இருந்தான்!!!!
அந்த ஷணம் அவளை சுற்றியிருந்த இரைச்சல் குறைந்து போய்.... அத்தனை கண்களும் அவர்கள் மீது படிய...
அதை பற்றிய கவலையே இல்லாமல், அவளை அந்த கூட்டத்தில் இருந்து வெளியேற்றிய பின் தான் அவள் கரத்தையே விடுவிக்க...
ஸ்ருதியின் கண்களும் இதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது!
யாரோ? யாருக்குள் இங்கு யாரோ?
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ!!!
விடையில்லா ஒரு கேள்வி!
உயிர் காதல் ஒரு வேள்வி!!!
தொடரும்
{kunena_discuss:922}