பொதுவாக அவன் ஆழ்ந்து யோசிக்கும் போதும் ,தான் அவனை பார்க்கும் போதும், அவனை அறியாமல் அவனின் ஒற்றை புருவம் மேலே எழும்பி என்ன என்ற கேள்வியை அவன் கேட்பான்.அவ்வாறு அவன் கேட்கும் பாங்கு ரசிக்கும் வண்ணம் இருக்கும். இருந்தாலும் கவி அவனை பார்த்து போடா நீயும் உன் ஸ்டைலும் என்ற பாவனையில் தான் பார்த்துவைப்பாள். ஆனால் இன்று அவளின் பார்வையில் ஓர் இயந்திரத்தன்மை இருந்தது. அவள் முன்பு அவனைப்பார்த்து சலிப்பாக போடா! என்ற தோரணையில் பார்க்கும் தன்மையில் இல்லாமல், ஏதோ அறிமுகமில்லாத தெரியாத அடுத்தவரை பார்ப்பது போன்ற ஓர் உணர்ச்சி துடைத்த பார்வையாக அது இருந்தது.
மகிந்தனுக்கு அவளின் அத்தகைய ஒட்டாத தன்மை கொண்ட பார்வை பிடிக்க வில்லை.முன்பு மாதிரி அவள் அவனிடம் முறைத்துக் கொண்டு இருப்பதைத்தான் அவன் ரசித்தான். ஏனெனில் இதுவரை அவன் பார்த்த பெண்களில் யாரும் அவனை இதுபோன்ற கோபமான பார்வையோ, போடா நீயும் உன் பணமும், என்ற அலட்ச்சிய பார்வை பார்த்ததில்லை. அவனின் ஓர் பார்வைக்கே பாகாக உருகி வந்து ஒட்ட நினைக்கும் பெண்களைத் தான் இதுவரை கண்டிருந்தான்.
முதல் முதலாக் தன்னை முறைத்துப் பார்த்த கவிழையாவை நெருங்கி பார்க்க நினைத்தவன் இப்பொழுது அவள் தன்னைவிட்டு விலகாமல், ‘’தான் அவளுக்கு நெருங்கியவனாக காலம் முழுவதும் இருக்க மாட்டோமா’’ என்று அவளின் மேல் பித்தானான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
அவனின் என்ன என்ற முகபாவத்திற்கு கவிழையா என்னுடைய வேலையை நான் விட்டுவிடுவதாக இருக்கிறேன் என்று அவள் ஆரம்பித்ததும்.அவளை முறைத்துப்பார்த்தவன், வா! நம் ரூமிற்குப் போய் பேசலாம் என்று உமா இருப்பதையும் பொருட்படுத்தாமல் அவள் அருகில் சென்றவன் அவள் கையை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்தான். அவன் இழுப்புக்கு மறுப்பாக, தரையில் அழுத்தமாக கால் பதித்துநின்றவளை அவன் எளிதாக இழுத்துக்கொண்டு தன் அறைக்குள் போனான்.
உமா அங்கு நடப்பதை கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்துக்கொண்டே அவன் இழுப்பதால் அவன் பின்னால் அவளும் இழுபட்டு ரூமினுள் சென்றாள்.
ரூமில் உள்ளே சென்றதும் அவளை அங்கிருந்த இருக்கையில் பிடித்து அழுத்தி உட்காரவைத்தவன் அவள் எதிரில் நின்று குனிந்து சேரின் அவளை அரஸ்ட் பண்ணியதுபோல் சேரின் கைப்பிடிகலை பிடித்துக்கொண்டு என்ன சொன்னாய்? என்று ஆழ்ந்தகுரலில் கேட்டான்.
அவனின் அத்தகைய செயலில் கோபத்துடன் அவனை முறைத்துக்கொண்டு நான் நாளை வேலையில் இருந்து நின்று கொள்வதற்காக நான் கட்டவேண்டிய பெனால்டி ரூபாய் ஐம்பதுலட்சம் ரூபாயை கட்டிவிட்டு, “என் வேலையில் இருந்து ரிலீவ் ஆகப் போகிறேன்’’..அதன் பின் உங்களாள் என்னை கட்டுப்படுத்த இந்தமாதிரி இழுக்கவெல்லாம் நானும் என் வீட்டவரும் அனுமதிக்க மாட்டோம் என்றாள்.
அவள் அவ்வாறு சொன்னதும் எப்படி நானும் என் வீட்டு ஆட்களுமா? நீ என் பொண்டாட்டி உன் வீட்டு ஆட்களை விட எனக்குத்தான் உன் மேல் உரிமை நிறைய உள்ளது.அன்று ரெஜிஸ்டர் ஆபீசில் உன் அப்பா உன் மேல் எனக்கு முன் அதிக உரிமையெடுத்து உன்னிடம் பேசியதர்க்குத்தான் நம் கல்யாணத்திற்கு அவரை சாட்சி கையெழுத்து போடவைத்தேன்.உன் மேல் உரிமை கொண்டாடியது உன் அப்பா அதனால் தான் அவரை இத்துடன் விட்டேன் என்னைத்தவிர வேறு எவனாவது உன்னிடம் நெருங்கவோ, பேசவோ நினைத்தால் அவர்களை நான் இல்லாமல் ஆக்கிவிடுவேன்.
வேலையை விட்டு நிற்கப் போகிறேன் அதற்க்காக் பெனால்டி பணத்தை என் மகளுக்கு கட்டப் போகிறேன் என்று உன் அப்பா வந்தால் அவ்வளவுதான் உன் அப்பனிடம் என்று கூறிக் கொண்டு போனவன் அவள் முகத்தில் இருந்த பாவத்தைக்கண்டவன் சாரி என் மாமனாரிடம் சொல்லிவை உன்னை வேலையில் இருந்து ரிலீவ் பண்ணுகிறேன் என்று. பணத்தை கொண்டுவரவேண்டாம் என்றும். நீ என்னுடையவள். எனக்கும் உனக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என்று கூறி, உரிமையுடன் அவள் சுடிதாரினுள் கைவிட்டு அவள் யாருக்கும் தெரியாமல் போட்டிருந்த தாலியை எடுக்க, அவன் கைவிடுவதை கவிழையா தடுக்க, தன்னை குறுக்கி அவள் மார்பின் இருபுறம் குறுக்காக் கைகளை வைத்து மறைப்பத்தையும் பொருட்படுத்தாமல் மல்லுக்கட்டி வெளியே எடுத்தவன்.இந்த தாலியை நமக்கு கல்யாணம் ஆனதற்கு அடையாளமாக் காட்டு என்று கர்ஜனை செய்தான்.
நீ நான் என்ன சொன்னாலும் அடங்க மாட்ட டீ.அப்படியே உன்னை அறையனும் போல் இருக்கு என்னைவிட்டு போய்விடுவையா ? அது எப்படி போகமுடியும் என்று நான் பார்க்கிறேன்.உன் மனதில் நன்றாக அழுத்த பதிந்துவைத்துக்கொள் இந்த ஜென்மத்தில் உனக்கு நான் தான் புருஷன். மற்ற எல்லாமும் நான் மட்டும் தான் புரிந்ததா? என்று கேட்டான்.
அவனின் ஆக்ரோசத்தை கண்ட கவிழையா முதலில் பயந்தால் பின்பு தன்னை சுதாரித்துக் கொண்டவள் எப்படி நான் தான் உங்கள் மனைவி என்றாள் அந்த ஐஸ்வர்யா உங்களுக்கு யார் வைப்பாட்டியா ? அவள் வயிற்றில் உள்ள உங்கள் பிள்ளைக்கு, நீங்கள் அது பிறக்கும் முன்பே, தன் அப்பா இன்னொருத்தியை கல்யாணம் செய்தார்கள் என்ற விஷயம் தெரிந்தால் எப்படி இருக்கும்?.என்று இளக்காரமாக வாயை வைத்துக் கொண்டு,
இப்படி பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் உங்களை போன்றவனை கழுத்தில் தாலி கட்டிவிட்ட காரணத்திற்காக கணவனாக ஏற்றுக் கொள்வேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றாள்.