ஹேய் என ஜாக்குலின் போனில் உற்சாகக்குரல் எழுப்ப அவள் கணவன் ,முதல்ல தம்பி என்ன சொல்லுறான்னு கேளு என அவளை அடக்கினார். அனைவரும் அவன் சொல்வதற்காக காத்திருக்க , எனக்கு அனிக்காவை ரொம்ப பிடிக்கும். எனக்காக அத்தை மாமாகிட்ட பேசுங்களேன்’ என்று சுருக்கமாகக் கூறி முடித்தான்.
தீபன் நம்பவியலாமல் ஆச்சரியமாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, ப்ரீதா தன் தங்கை சொன்னதை நினைவில் கொண்டு வந்து ஓ அப்படியென்றால் அது அனிக்காவோ? என யோசிக்க, இந்திராவும் ராஜ்-ம் ஒருவழியாக மகன் சொல்லி விட்டான், இனி மேற்கொண்டு விஷயங்கள் பேச வேண்டியது தான் என எண்ணத்திலிருக்க , ஜீவன் நீ நல்லா வருவேடா என்கிற எஃபெக்டோடு அவனை நோக்க யாரும் பதில் பேசாத அந்த ஒரு நிமிட இடைவெளி நிறைவுறும் நேரம் யாராலும் அதுவரை கவனிக்க படாமலிருந்த அந்த இரண்டரை வயது வாண்டு ராபின், "சித்தா எனக்கும் அனி சித்தியை ரொம்ப பிடிக்கும்” என்றுச் சொல்ல மகிழ்ச்சி சிரிப்பில் ஆரவாரித்தது ரூபனின் அறை. அண்ணன் மகனை மகிழ்ச்சியோடு மடியில் அள்ளிக் கொண்டான் ரூபன்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
இனிய கனாக் காலம்
என் வாழ்வின்
இனிய கனாக் காலம்.
கனவில் நீயும் நானும்
கைக் கோர்த்து
கண்கள் நான்கும்
ஒன்றையொன்று ஈர்த்து
காலம் தோறும்
தோள் சேர்ந்து கடக்கும்
இனிய கனாக் காலம்
என் வாழ்வின்
இனிய கனாக் காலம்.
தொடரும்
{kunena_discuss:970}