ஆனால் அவள் மனதில் இருந்த எண்ணமோ விஷ்வா,கவியை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தது.தனது தோழி இதுவரை பட்ட கஷ்டம் போதும் என்று அவள் நினைத்தாள்.அதற்கு கவி விஷ்வாவை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று யாமினி நினைத்தாள்.அவன் கவியை நன்கு புரிந்துக் கொள்வான் என்று அவள் நினைத்தாள்..அதனால் தனது தோழி வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தாள் யாமினி.
விஷ்வா அவளிடம் அவனது லவ்வை சொன்னதும் யாமினி தனது தோழியின் வாழ்க்கையில் தான் குறுக்கே வந்து விட்டதாக நினைத்தாள்.அவளுக்கு விஷ்வாவின் மீது காதல் அவளை அறியாமல் வந்திருந்தது.ஆனால் அதை ஏற்றுக்கொள்ள அவள் தயாராக இல்லை. தனது தோழியின் வாழ்க்கையை கெடுக்க அவள் தயாராக இருக்கவில்லை.
அதனால் அவள் மறுத்துவிட்டாள்.அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை.ஆனால் அவளிடம் எப்பொழுதும் பேசுவதுபோல் மட்டும் பேசிக்கொண்டிருந்தான்.அவளும் தான் நினைத்துக் கொண்டிருப்பதை பற்றி அவனிடம் பேசவில்லை.
கடைசிவருடம் கடைசிநாளில் அவளிடம் உனக்காக நான் காலம் முழுவதும் காத்துக் கொண்டிருப்பேன் என்றுக் கூறிவிட்டு சென்றுவிட்டான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து அன்றுதான் விஷ்வாவும்,யாமினியும் சந்திதுக்கொண்டார்கள்.
இந்த இரண்டுவருடங்களில் கவிக்கு விஷ்வா மீது அந்த மாதிரியான எண்ணங்கள் இல்லை என்பதை புரிந்துக் கொண்டாள் யாமினி.
அவனை எப்படி தொடர்புக்கொள்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தால் யாமினி.அவனை நேரில் பார்த்த உடனேயே அவனிடம் தன் காதலை சொல்ல வேண்டும் என்றுதான் அவள் நினைத்தாள்.
நெஞ்சில், எந்தன் நெஞ்சில்
போர் கப்பல் வேகமாக மோதுதே
கண்ணில் இமை ரெண்டும்
பல்லவரின் கல்வீச்சில் இறங்குதே
சீன சுவர் நீளத்திலே
காதல் கடிதம் தீட்டி வைத்து
அவளுக்கு காத்துகொண்டிருக்கிறேன்
நிலவுக்கு பின்புறம்
அவள் புகைப்படம் இருக்குமோ..??
என்னவள் சுவாசத்தை
சுமந்துபோகும் இளந்தென்றலே
என்னவள் என்பவள் யார்..?
என்னவள் என்பவள் யார்..?
ஆனால் அவன தன்னை தேடி வரவில்லை தங்களது குடும்பத்துடன் கவி கொண்டிருக்கும் மனஷ்தாபத்தை போக்கதான் வந்துள்ளான் என்று தெரிந்துகொண்ட உடன் அவள் மனதில் ஒரு ஏமாற்றம் தோன்றியது.
அதனால் அவனிடம் தன் காதலை சொல்லவில்லை. இவளின் நிலை இப்படி இருக்க விஷ்வாவின் நிலையோ வேறாக இருந்தது.
மூன்று வருடங்களுக்கு மேலாக அவன் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் கவி காணாமல் போனது எல்லாம் சேர்ந்து அவனை வேறு விஷயம் யோசிக்க விடாமல் செய்தது.
கவியைப் பார்க்க வந்த பொழுதுதான் அவன் யாமினியை அவன் அங்கு பார்த்தான். இருந்தாலும் அவளிடம் உடனே அவனால் உரிமை எடுத்துக்கொள்ள முடியவில்லை அவளின் மனதை அறியாமல்.
அவன் வந்ததிலிருந்து அவளின் கண்களில் காதலை பார்த்தவன் அவளிடம் இன்று மனம் விட்டு கவியின் விஷயத்தை பேசினான்.
அதன் பிறகு யாமினியும் அவளது காதலை அவனிடம் கூறிவிட்டாள்.அவர்கள் இருவரும் தங்களது காதலை புரிந்துக் கொண்டு அந்த புத்தாண்டு நாளில் தங்களது காதல் அத்தியாயத்தை தொடங்கிவிட்டனர்.
இரண்டு ஜோடிகளும் வெவ்வெறு விதங்களில் புது வருடத்தில் தங்களது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை அடைந்தனர்.
ஆகாஷ் தன்னவளை எவ்வாறு சமாதானம் படுத்துவது என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
கவியோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிலைமையில் இருந்தாள்.
அர்னவ் ஒரு வேலை விஷயமாக வெளியில் சென்றிருந்ததால் அவன் வாழ்த்துக் கூற கவியின் வீட்டிற்கு வந்தான்.
காலிங்பெல் அடிக்க தனது மாயஉலகில் இருந்து கலைந்த யாமினி கதவை திறந்தாள்.
“அர்னவ் வந்துடியா..,happy new year …டா.” என்று வாழ்த்தி அவனை உள்ளே அழைத்து சென்றாள் யாமினி.
“ happy new year மினி,எங்க கவியும்,அனுவும்..”என்றுக் கேட்டான் அர்னவ்.
“அனு ஊருக்கு போயிருக்கா,கவி ரூம்ல இருக்கா நான் வர சொல்லுறேன் இரு காபியா..டீயா..”
என்றுக்கேட்டாள் யாமினி.
“எதுனாலும் ஓகே..”என்றான் அர்னவ்.