மனோரஞ்சன் தன் முயற்சியால் இப்போதுதான் வளர்ந்து வருகிறான். அத்தோடு தேவைக்கு அதிகமாக வீண் ஜம்பத்துக்காக பணியாளர்களை அமர்த்துவதில் அவனுக்குப் பிரியமில்லை. வேலை பார்ப்பவர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்க வேண்டும். அதை சரியாக கடைபிடித்தான்.
அத்துடன் அவன் பெண்களிடம் வழிவதில்லை. நேர்க்கொண்டுதான் பார்த்து பேசுவான். கண்டிப்பானவன் கூட.
அவனிடம் உள்ள எதுவோ ஒன்று சாந்தியைக் கவர்ந்துவிட்டது.
தன் குடும்பக் கஷ்டம் தீர வேலை கொடுத்தவன் என்பதால் இருக்கலாம். இதற்கு முன்பு வேலை பார்த்த இடத்தில் ஒரு பெண்ணுக்கு நேரும் இடர்களைக் கண்டு பயந்து அந்த வேலையை விட்டு ஓடிவந்தவள் அவள். அதன் பிறகும் சரியான இடத்தில் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. பெரிய வேலைக்குச் செல்லுமளவிற
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லாத நேரத்தில் அவள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிச்சொல்லி அவள் மனதில் பதிந்துவிட்டது.
சிரமமான நிலையில் குடும்பம் நடத்தினாலும் பிள்ளைகள் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டதில்லை.
திடீரென்று ஏற்பட்ட அன்பான குடும்பத்தலைவனின் மறைவு அந்தக் குடும்பத்தையே ஸ்தம்பிக்கச் செய்தது.