அவளோ இத்தனை நேரம் தன்னைக் கண்டு கொள்ளாமல், தான் ஒருத்தி அங்கே இருப்பதையே மறந்தவர்களாக அவர்கள் இருந்ததில் கோபமாக முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“அக்கா தங்கைக்குள் எதற்கு போலி மரியாதை. நீ என்னை உரிமையோடவே கூப்பிடலாம்.”
அவள் ஓடிவந்து நேசமலரை அணைத்துக்கொண்டாள்.
சில்லென்ற உணர்வு தாக்க அவளை நிமிர்த்தினாள்.
“ஏய்! ஏன் அழறே?”
“நான் ஒத்தையா பிறந்து வளர்ந்ததால் எனக்கு கூடப்பிறந்தவங்க இல்லையேன்னு ரொம்ப ஏக்கம். ராதாக்கா பெரியவங்க. அவங்ககிட்ட உரிமையா பழக முடியலை. அப்படியே ஒரு சில நேரங்களில் வாய் தவறி வந்துவிட்டாலும் அவங்க திட்டுவாங்க. அதான் மஞ்சரி அக்காகிட்ட கூட யோசிச்சு பேசுவேன். இப்ப எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?”
“சர
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வருகையில் அவளது தாயார் கொடுத்ததாக கொடுக்கும் சில பொருட்களை அவர்களாலும் மறுக்க முடியாது.
கல்லூரி சென்று வந்த பிறகு மாலையிலிருந்து இரவு தூங்கும் வரையில் இங்கேதான் இருப்பாள். அதற்கு ராதாவுக்கு வருத்தம்தான்.
இருந்தாலும் அவள் சொல்வது எதையும் கண்ணம்மா பொருட்படுத்திக்கொள்ளமாட்டாள்.