இதுநாள் வரையில் அவள் பாடிக் கேட்டதில்லையாதலால் நேசமலர் கேட்டாள்.
“இல்லை மலர். அவள் நல்லா பாடுவாள்.”
“ஏன் கண்ணம்மா? அப்ப சினிமாவில் பாடற ஐடியா இருக்கா?”
“நீ வேறப்பா. அவளுக்கு டீச்சர் ஆகனும். அதுவும் மேத்ஸ் டீச்சர் ஆகனுமாம். அதுதான் அவளோட லட்சியம்.”
“மேத்ஸ் பாடம் எடுக்கிறதுல உனக்கு அவ்வளவு ஆர்வமா?” ஆச்சர்யமுடன் கேட்டாள்.
“அதெல்லாம் இல்லைக்கா. என் அம்மாவோட விருப்பம் அதுதான். அதனால் என்னோட விருப்பமும் ஆயிடுச்சு.”
“உனக்கு விருப்பம் இல்லாமல் எப்படி கண்ணம்மா உன்னால் படிக்க முடிகிறது?”
“நான் என்னக்கா செய்யட்டும். நடிகர் தனுஷ் ‘வராத படிப்பை வா வான்னா எப்படி வரும்னு’ படத்தில் வசனம் பேசினா அதை எல்லாரும் ரசிக்கிறாங்க.
...
This story is now available on Chillzee KiMo.
...
துவா என்னையும் அறியாமல் சில நேரத்துக்கு உரிமையா பேச வந்துடுது. அப்புறம்தான் மரியாதை கொடுக்கனும்னு தோணுது. அதுதான். சாரிக்கா. நான் செய்யறது தப்புன்னு தெரியுதுதான். மன்னிச்சிடுங்க.”
“ஆமாம். நீ செய்யறது தப்புதான்.”
அவள் என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருத்து மஞ்சரியை நோக்கினாள்.