வடிவு தன்னை மீட்டுக்கொண்டாள். முன்பு தங்கள் குடும்பத்துக்கு மட்டுமாக துணிகளைத் தைத்துக்கொண்டவள் இப்போது வருமானத்திற்காக மற்றவர்களுக்கும் தைத்துக்கொடுக்க ஆரம்பித்தாள்.
அப்போது சாந்தி எட்டாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தாள். வசந்தி ஐந்தாம் வகுப்பிலும் சரவணன் பத்தாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தனர். அவளது தந்தைக்கு பிள்ளைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுக்க வேண்டும் என்று ஆசை.
படிப்பு பிள்ளைகளை நன்றாக வாழ வைக்கும் என்று உறுதியாக நம்பினான்.
இப்போது கணவனின் ஆசையை உணர்ந்து வடிவு பிள்ளைகளின் படிப்பை உத்தேசித்து தன் மனக்காயத்தை மறைத்துக்கொண்டு பிள்ளைகளுக்காக என்று எழுந்து நடமாடத் தொடங்கிவிட்டாள்.
தன் தந்தை சொல்லிச் சொல்லி வளர்த்ததால் அட
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக்கொண்டிருந்தனர்.
பாடி முடித்ததும் கைகளை தட்டினர்.
“கண்ணம்மா. சூப்பர்.”
அவள் கைகளைப் பற்றிக் குலுக்கினர்.
“ஏன் கண்ணம்மா? எனக்கு ஒரு சந்தேகம். உன் பேர் வர்றதினால் இந்தப்பாட்டை ப்ராக்டிஸ் பண்ணி இவ்வளவு அழகா பாடறியா? இல்லைன்னா உனக்கு உண்மையிலேயே நல்ல குரல்வளமா?”