(Reading time: 18 - 36 minutes)

தற்கு முன்பும் அவளிடம் வைர நகைகள் இருந்தன தான்.  கொஹினூர் வைத்தை அறிந்து வியந்திருந்த சமயத்தில் இத்தனை சிறந்த வேலைபாட்டுடனான வைரக்கம்மலை பார்த்தவள், மகிழ்ச்சியில் துள்ளி குதித்து தந்தையின் கழுத்தை கட்டி கொண்டாள்.  அன்றிலிருந்து அந்த கம்மல் அவளின் பொக்கிஷமாகி போனது.  ஆசை ஆசையாக வைத்திருந்ததிலொன்று தொலைந்தது, ஒப்பு கொள்ள முடியாத வேதனையளித்தது.  இருக்கும் ஒற்றை கம்மலை உபயோக படுத்த வழியில்லாமல் தவித்து கொண்டிருந்தாள்.

“என்… என்ன சஞ்சு?” வருத்தம் தோய்ந்திருந்த அவளின் முகமும் குரலும் அவனின் உயிரை அசைத்தது. 

மனதிலெழுந்த வலியை மறைத்து, “அந்த கம்மலை எங்கிட்ட கொடு!”

கம்மலை வைத்திருந்த கையை நெற்றியில் முட்டி, “அப்பா எனக்காக கொடுத்தது சஞ்சு! நானே தொலைச்சிட்டே!”

“எங்கிட்ட கொடு சரூ! நான் அதை எதுவும் செய்யமாட்டேன்.  ஐ ப்ராமிஸ்! அது உன்னோடவே இருக்கும்”

“அதெப்படி? அதைதா நான் இப்போ யூஸ் பண்ண முடியாதே!...” அவன் சொன்னதின் பொருளை அறியாதவள் “யூஸ் பண்ண முடியலைனாலும் நானே இதை பத்திரமா பார்த்துக்குவேன்” உடைந்திருந்த அவளின் வார்த்தைகள் இவனுள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியிருந்தது.

‘என்னை நம்பினாலே போதும் சரூ! உன்னை எந்த கஷ்டமும் தொடமுடியாதபடி பார்த்துக்குவேன்’

தன் காதலை உணர்ந்திடமாட்டாளா!

“ஐ ப்ராமிஸ் சரூ! ப்ளீஸ்” அவனின் உருகும் வார்த்தைகள் ஏதோ செய்ய பதிலேதும் பேசவில்லை இவள்.  கையை அவன் முன் நீட்டி, மூடியிருந்த விரல்களை பிரித்தாள்.

வெயிலில் மின்னிய கம்மலை எடுத்தவன், அதை உற்று பார்த்துவிட்டு பத்திரப்படுத்தினான்.

அடுத்த நாளை, சரயூ, தன் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாற்றியிருந்தான் ஜெய்.  கம்மலின் பிரச்சனைக்கு அவன் கண்டிருந்த தீர்வு, பெண்ணவளை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்திருந்தது.

சந்தோஷத்தில் மின்னிய முகமாக, நண்பர் கூட்டத்தோடு சலசலத்த படி வந்தவளின் எதிரில் திடீரென தோன்றிய கிரண், பூங்கொத்தை நீட்டினான்.

மலர்களின் வண்ணமும், வாசமும், மகிழ்ச்சியிலிருந்தவளின் உள்ளத்தை மென்மையாக வருடிய வேளை, கிரணிடமிருந்து வந்தது அந்த வார்த்தைகள்

“ஐ லவ் யூ, சரயூ!”

Episode 12

Episode 14

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.