அண்ணன் தம்பிக்குள்ளே இருக்க வேண்டிய கொடுக்கல் வாங்கல் வேற அதை பத்தி நீ கவலைப் படாத ,சொத்தெல்லாம் அவனவன் பொண்டாட்டி பிள்ளைங்க பேர்லதான் எழுதுவாங்க இதுக்கெல்லாமா நீ இவ்வளவு யோசிச்சு அழுது வழிஞ்சுட்டு இருப்ப என்று அவளையே கேள்விக் கெட்டவன்.
தான் எண்ணியது தவறோவென தன்னை குறுக்கிக் கொண்டு அமர்ந்திருப்பவளை நெருங்கி அமர்ந்து அணைத்துக் கொண்டான்.
அதுக்காக இப்போ கில்டியா ஃபீல் பண்ணி சாவடிக்காத ….என்றவனாய் தலையில் முத்தமிட்டான். என் கிட்ட சண்டைப் போட உனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு ….எனக்கு இந்த சண்டையும் ரொம்ப பிடிச்சு இருக்கு…….அப்பப்ப சண்டைப் போடறதும் நல்லதுதான் இல்லியா……… என் அனிக்கு கோபமே வராதே என்னோட லவ் ஸ்டோரில ஊடல்னு ஒன்னு வராம போயிடுமோன்னு நினைச்சிட்டு இருந்தேன் என்று சிரிக்கலானான்.
அத்தான் என்று சிணுங்கியவளாய் அவன் அணைப்பிற்க்குள் அவள் பாந்தமாய் அடங்கினாள்.
சரி இப்போ சொல்லு, நகை எல்லாம் பிடிச்சிருக்கா இல்லியான்னு, அப்ப தான் நான் எங்க போயிருந்தேன்னு விபரம் சொல்லுவேன் என்றவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் நகைகளை பார்வையிட்டாள்.
நம்பவே முடில அத்தான்..
என்னது நம்ப முடில உனக்கு…
இவ்வளவு அழகா நகை செலக்ஷன் பண்ண உங்களுக்கு தெரியுமான்னு நம்ப முடிலன்னு சொல்றேன் நினைச்சீங்களா….
பின்னே…
என் அத்தான் இவ்ளோ பேசுவாங்களான்னு தான் நம்ப முடியலை என்றவளை ……
வாலு என்றவனாய் பின்னோடு அணைத்துக் கொண்டான்.
கொஞ்சம் விடுங்க அத்தான் என்று அவன் கைகளை விடுவித்தவள், ஆசையாக தனக்காக பார்த்துப் பார்த்து தெரிவுச் செய்து நகைகள் செய்தவனை மகிழ்விக்க எண்ணினாளோ என்னவோ தன்னுடைய கம்மல் , வளையல், கழுத்தில் கிடந்த பெரிய நகைகளை ஒவ்வொன்றாக கழற்றியவள் அவன் கொண்டு வந்த நகைகளை அணியலானாள்.
ரூபன் மிக ஆசையாக அவள் நகை அணிவதையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
அத்தனை நகைகளும் அணிந்த பின்னர் அவளைப் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு……
“நல்லாயிருக்கா அத்தான்” என்றவளுக்கு அவனால் சட்டென்று பதில் சொல்லவே இயலவில்லை.
சற்று நேர மௌனம் கலைந்து.. ரொம்ப அழகா இருக்க அனி என்றவனாய் அணைத்துக் கொண்டான், பரிசாய் சில முத்தங்கள் வேறு…….
சரி இப்போ சொல்லுங்க….எங்க போயிருந்தீங்க…..
அவன் சொல்ல அவள் கேட்க ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் அவள் முகத்தில்……இருவரும் டன்…டன் என்று உற்சாகமாய் தம்ஸ் அப் செய்து கொண்டனர்…..ரூபன் சொன்ன செய்தி தந்த மகிழ்ச்சி தாளாமல் அவள் அவன் காலரைப் பற்றி கீழே இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள்… அன்று அவர்களுக்கிடையேயான முத்தங்கள் அத்தனையும் கருப்புப் பணம் போல கணக்கிடப் படவியலாமல் போயின.
இருவரும் திட்டமொன்றை வகுத்து செயல்படுத்த முடிவுச் செய்த பின்னர் சேர்ந்தே மாடியிலிருந்து கீழே இறங்க அவனை பின்னே விட்டு விட்டு அவர்கள் இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவிடம் விரைந்தாள். நின்றவிடமே இருந்து அம்மாவையும் அவர்களருகே கூப்பிட்டாள்.
சாரா தாமஸ் அருகில் வரவும்……அப்பா அம்மா இந்த நகையெல்லாம் எனக்கு அத்தான் வாங்கிட்டு வந்திருக்காங்க நல்லாருக்கில்ல…என கண்கள் மிளிரக் கேட்கவும் தாமஸிற்க்கு தான் இது வரை மகளுக்காக வாங்கிய நகைகள் அத்தனையும் ஞாபகத்திற்க்கு வந்தது. அவை அவள் அணிந்திருப்பவையிலும் பல மடங்கு மிகுதியானவை.
என்ன இருந்தாலும் அவளுக்கு அவன் வாங்கிக் கொண்டு வந்தது தான் உயர்வோ? என்று மனதிற்க்குள் கொஞ்சமாய் மருமகன் மேல் பொறாமை வந்துச் சென்றது. மறு நேரமே மகளின் மகிழ்ச்சிப் பார்த்து தெளிந்தார். நல்லாயிருக்கும்மா….என்று தந்தையின் பதில் கேட்கும் வரை அவள் அங்கிருந்து நகரவில்லை. சாராவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். மகளை கையாலே த்டவி திருஷ்டி கழிக்க….
உடனே அண்ணிக்கு நகைக் காட்ட அவள் விரைந்துச் சென்றாள். தாமஸ் சிறிது நேரம் ரூபனை அருகமர்த்தி அளவளாவிக் கோண்டிருந்தார்.அடுத்த நாள் தான் அனிக்காவை மதியம் வெளியே அழைத்துக் கொண்டு செல்ல அனுமதி கேட்ட பின்னரே அவன் அங்கிருந்து விடைப்பெற்றுச் சென்றான்.
மறுநாள் புலர்ந்தது மதியம் வரை அன்று இருந்த முக்கியமான ஏற்றுமதிக்கான வேலை முடிவடைய இன்னும் சில அது தொடர்பான வேலைகள் இருந்தனதான் ஆனால், ஜீவனை ரூபன் வெளியில் சாப்பிடப் போகலாம் என்றுச் சொல்லி பொறுப்புகளை ஒரு சில மணி நேரங்களுக்காக மேனேஜரிடம் ஒப்படைத்து கூட்டிச் சென்றான்.