என்னிக்குமில்லாத அதிசயமா இன்னிக்கு இவனுக்கு என்னாச்சு என்று அண்ணனைப் பார்த்துக் கோண்டிருந்தான். அவரவர்க்கு அவரவர் கவலை .........அவனுக்கு திவ்யா இன்றும் ஆஃபீஸிற்கு வந்திருக்கவில்லை என்பதே கவலையாக இருந்தது. அவளுக்கு எதுவும் பிரச்சினை இல்லையே என்று அறிந்துக் கோள்ள வேண்டியதாக இருந்தது. அதிகம் நெருங்க முடியாமலும், விலக முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தான் அவன். அனிக்காவும் இவர்களோடு சேர்ந்துக் கொள்ள இவங்க ரெண்டு பேரும் என்னவோ பிளான் செஞ்சிருக்காங்க என்று மனதிற்குள்ளாக உறுதிப் பட்டுவிட்டது.
என்ன பாட்டிம்மா இன்னிக்கு ஸ்கர்ட்ல…..சாரி ஸ்டோக் தீர்ந்திடுச்சா…… என நக்கலாகவே ஆரம்பித்து அவள் காரில் ஏறும் முன்பே இரண்டு கொட்டுகளை பரிசாக பெற்றுக் கொண்டான்.
ஜீவா நீ பின்னால உக்கார்ந்துக்கோ அனி முன்னால இருக்கட்டும் என்றதும் கடுப்பானவன். இதை முன்னாடியே சொல்லியிருந்திருக்க வேண்டியது தானே என….
ஃபர்ஸ் டைம் நாங்க ரெண்டு பேரும் வெளிய போறோம்…. உனக்கு ஏண்டா பொறாமை?
அண்ணா ஃபர்ஸ்ட் டைம் போறவன் என்னை எதுக்கு வீணா கரடி மாதிரி என்னை கூட்டிட்டு போணும்…விடு நான் இறங்கிக்கிறேன என முறுக்கிக் கொள்ள
எல்லாம் கரடிக்கு ஜோடி சேர்க்கத்தான் என்று அனிக்கா முன்னாலிருந்து சொன்னது அவனுக்கு அரைகுறையாக கேட்டது, அவன் மறுபடி அவளிடம் கேட்க தான் அப்படி ஒன்றும் சொல்லவே இல்லையென்று அவள் மறுத்தாள்.
அண்ணா அனி ஏதோ சொன்னா….நீ கேட்டியா என.. அவனும் இல்லையே என அப்பாவியாய் கண் விரித்து தோள் குலுக்கினான்.
என்னமோ பிராட் வேலை நடக்குது செய்ங்க செய்ங்க எனக்கென்ன என்று பின்னால் சாய்ந்து உட்கார்ந்தவன் அதற்க்கப்புறமாக பேச்சுக் கொடுக்கவில்லை..
சும்மா சேர்ந்து லன்ச் பண்ணத்தான் போறோம் ஜீவா…எதுக்கு உனக்கு இவ்வளவு டென்ஷன் என்றவனும் பின்னர் பேசவில்லை.
ஸ்டார் ஹோட்டலின் முன் வந்து நின்றது கார்.
காரை பார்க் செய்ய கை நீட்டிய ஹோட்டல் ஊழியனுக்கு சாவியைக் கொடுத்து விட்டு மூவரும் முன்னே நடந்தனர்.
தனக்கு தேவையானவைகளை எடுத்துக் கொண்டு மூவரும் சாப்பிட அமர,
அனிக்கா தான் ஆரம்பித்தாள்…
சரி அப்போ சொல்லு…….
என்ன சொல்லணும்…. ஜீவன்
சும்மா இரு சாப்பிட்ட அப்புறம் பேசலாம்….. அனியை தடுத்தான் ரூபன்..
அப்புறம் அவள் ஜீவனை அதிகமாய் கண்டுக் கொள்ளாமல் ரூபனை சீண்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
சாப்பாடு மெயின் கோர்ஸ் முடித்த பின் அவள் டிஸ்ஸெர்ட் கொண்டு வந்த விதத்தில் அண்ணன் தம்பி இருவருமே சிரிக்க ஆரம்பித்தார்கள்.
கொஞ்சம் பெரிய பிளேட்டில் அங்கிருந்த அத்தனை இனிப்புக்களையும் அவள் கொண்டு வந்திருந்தாள்…
இருவரும் சிரிக்கவும் அவளுக்கு வெட்கமாகி விட்டது……..
“உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் கொண்டு வந்தேன்” என்று சமாளித்தாள்.
ஹேய் அனிம்மா நீ சாப்பிடு என்று அவள் தலையைப் பிடித்து செல்லமாய் ஆட்டி வைத்தான் ரூபன்.
இன்னும் தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் ஜீவனின் கண்ணில் அருகிலிருந்த ஃபோர்க்கை எடுத்து குத்துகிற பாவனை காட்டி பயமுறுத்தினாள் அவள்.
அதற்க்கும் அடங்காதவனை என்னச் செய்வதென புரியாமல் திரும்பி அமர்ந்துக் கொண்டு சாப்பிடலானாள்.
ஆண்கள் இருவருக்கும் அவள் செய்கைகளால் சிரிப்பில் முகம் மலர்ந்திருந்தது,
ஏ அனி லூசு திரும்பி உக்காரு நான் சிரிக்கலை என்று ஜீவன் சொன்னபின்னரே திரும்பி அமர்ந்தாள்.
சாப்பிட்டு முடிந்ததும் விசாரணை ஆரம்பமாயிற்று……. ஜீவனை எதிரில் விட்டு விட்டு ரூபனுடன் கட்சி சேர்ந்து கொண்டாள் அவள்.
உனக்கு திவ்யாவை பிடிக்கும்ல ஒழுங்கா மரியாதையா உண்மையச் சொல்லு… தோழி என்ற நிலைக் கடந்து அண்ணனருகில் அமர்ந்து அண்ணி தோரனையைக் காட்டுபவளை இன்னும் அதிகமாய் பிடித்தது ஜீவனுக்கு.
அதான் இல்லைன்னு சொன்னேன்ல…..
உண்மையச் சொல்லு… நீ என் கிட்ட பொய் சொல்லுற….
அவன் நான் என் லவ் சொன்னப்பவே பிராக்டிகலா என்னெல்லாம் பிராப்ளம் வரும்னு சொன்னவன் ……இப்பவும் மனசுக்குள்ள எதையாவது வச்சிட்டு தான் இல்லைன்னு சொல்லிட்டு இருப்பான்…….கரெக்டாய் பாயிண்ட்டை பிடித்தான் அண்ணன்காரன்.
ஜீவா முதல்ல பிராப்ளம் என்னன்னு சொல்லு, சால்வ் செய்ய முடியுமா இல்லையான்னு பார்க்கலாம் என்று அனி தைரியம் கொடுக்க கொஞ்ச கொஞ்சமாய் மனம் திறக்க ஆரம்பித்தான் அவன்.