அன்றும் வழக்கம் போல் விடியலின் முன் எழுந்து அனைத்து வேலையும் முடித்துவிட்டு,குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றாள் ஊரைத் தாண்டியுள்ள வயல்வெளிப் பகுதிக்கு.அவளைப் போல் சிலர் தங்கள் தலைவிதியை எண்ணியப்படி வேலை செய்ய ஆரம்பித்திருந்தனர்.அங்கு இருந்த ஒரு மரத்தில் அடியில் பல குழந்தைகளுக்கு மத்தியில் தம்பியும் தமக்கையும்...
ஏன் இந்த வாழ்வு? எதற்கு இந்த துன்பம்?யார் காரணம்?
அவன் கெக்கலித்தப்படி இருந்தான் நண்பர்களுடன்...
ஆண் என்ற ஆணவமா? எளியோரை ஆட்டிப் படைக்கும் வல்லமையோ?தவறான ஒன்றை ஊராரே கண்டுக்கொல்லாமல் இருப்பதா? ஏழை அதுவும் பெண் என்றால் தன் கைப்பாவை என்ற இறுமாப்போ?தனக்கு வலிக்காதப் பொழுது இதில் ஏன் பிறர் தலையிட வேண்டும் என்ற அலட்சியமோ?
ஏதோ ஒன்றினால் அக்கூட்டம் ஆர்ப்பாட்டமாய் இளித்துக் கும்மாளம் போட்டுக்கொண்டு இருக்கும்போது, அவர்களின் ஒருவன் ஹாரக்கைப் பார்த்து ஒரு கேள்வி வைத்தான்.
நீ எப்பொழுது முறைப்படி மணம் செய்யப் போகிறாய் என்று?
ஆதி வந்துட்டேன் நண்பர்களே! உங்களுக்கு ஒரு விவரம் சொல்லிட்டு உடனே போய்விடுவேன் சரியா?
பரோ என்பவர்கள், தாய் தந்தையரிடமோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அல்லது தரகர்களிடமோ அல்லது முன்னால் கணவன் அல்லது மனிதனை கடத்தி விற்கும் கூட்டத்திடமோ பணம் கொடுத்து வாங்கப்படும் பெண்கள்.
இவர்கள் முதன்முறை அல்லது பல முறை பல இடங்களில் விற்கப்படலாம்.
இவர்களில் மிகவும் வெகு சிலரே நடைமுறை திருமண வாழ்க்கை வாழ்பவர்கள்.
பலர் வருமானமில்லா விவசாயக் கூலிகளாகவும்,வேலைக்காரியாகவும், விலையில்லா விலைமாதுவாகவும்,சட்டப்படி தீயை சுற்றிவிட்டு தங்கள் பிள்ளைகளுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லாமல் நாட்களைக் கடத்துக்கின்றனர்.
இவர்கள் ஹரியான மாநிலத்தில் அதிகம் உள்ளனர்.அங்கு பெண்களின் எண்ணிக்கை வெகு குறைவு.காரணம் பெண் சிசுக்கொலை இன்னும் பிற. பல ஆண்கள், பிறகு தங்கள் அந்தஸ்த்திற்கு ஏற்றப்படி வேறொருத்தியையும் மணந்துக் கொண்டு வாழ்வர்.அவர்களின் பிள்ளைகளுக்கே வாரிசு உரிமை மற்றும் பிற சலுகைகள்.
நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம்!எதில்?
சரி நண்பர்களே! என் வேலை முடிந்துவிட்டது,பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.
இப்பொழுது ஹாரக்கின் பதிலை அறிவோம்.
ம்...எனக்கும் அந்த எண்ணம் இருக்கு.இவள் மூலம் எனக்கு பணம் நன்றாய் மிச்சமாய் உள்ளது அதே சமயம் நிலத்தில் வருவாயும் வந்துள்ளது.இனி ஒரு நல்ல பெண்ணை மணந்து வாழ வேண்டியதுதான்! கூறியப்படி கையில் உள்ளதை புகைத்தான்.
அதற்குள் மற்றொருவன், வெகுநாளாய் அவனின் மனைவியின் ( நாமாவது அவளுக்கு அப்பெயர் அளிப்போம் நண்பர்களே!) மேல் கண் வைத்திருந்தவன், கை வைக்க ஏதுவாய் ஒரு திட்டம் தீட்டினான்.
ஹாரக்!!! அப்போ வீட்டில் இருப்பவளை என்ன செய்யப்போகிறாய்?
ம்.நானும் அதைத்தான் யோசிக்கிறேன்.விற்றால் பணம் வரும் ஆனால் இவள் பல வேலைகளைச் செய்கிறாளே!
அதற்கு அவன்,விற்பதானால் என்னிடம் சொல்.எனக்கு இதில் பல நபர்களைத் தெரியும் என்றான்.
ஹாரக்கும் அவனுக்கு தலையை ஆட்டிவிட்டு சென்றான்.
விடைத் தெரியாமல்
வேதணையில்
வீழ்ந்திருப்பவளுக்கு
கயவர்கள் மூலம்
காலம் வைக்கும் விடை
எதுவோ?
விடை தேடும் பல கேள்விகள் தொடரும்...
{kunena_discuss:1124}