(Reading time: 20 - 40 minutes)

கீழே போக பிடிக்காமல் அறையைவிட்டு வெளியே வந்தவள் அங்கிருந்த மாடிக்குப் போகும் படிக்கட்டில் ஏறி மொட்டை மாடிக்கு வந்தாள் அங்கு நீச்சல் குளமும் அதை சுற்றி அமைக்கப் பட்டிருந்த மாடித்தோட்டத்தின் அழகும் அவளுக்கு உற்சாகத்தை கொடுத்தது

அங்கருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தவள் சிலு சிலுவென்று வீசிய காற்றை அனுபவித்தபடி இரண்டு கால்களையும் உந்தி ஊஞ்சலாடினால் ரசிக்கும் படியான அங்கிருந்த அழகு அவள் மனதில் இதத்தை பரவ விட்டது. இரவு உணவுக்கு அவளை அழைத்துப்போக வந்த மஹிந்தன் மொட்டை மாடிக்கு அவளை தேடி வந்தான் முகத்தில் மந்தகாச சிரிப்புடன் ஊஞ்சலாடியவளை ரசித்தபடி நின்று விட்டான்.

.அவளின் மலர்ந்த முகத்தை பார்த்தவனுக்கு அதுவரை அவளின் மேல் இருந்த கோபம் சொல்லாமல் விடைப் பெற்றுவிட்டது ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருந்தவள் தற்செயலாக திரும்பி அங்கு அவளை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த மஹிந்தனை பார்த்ததும், தனது ஊஞ்சலாட்டத்தை நிறுத்தி இறங்கப் பார்த்தாள்

ஏய்.... நீ ஊஞ்சலாடு .நான் சும்மாதான் உன்னை தேடி வந்தேன் என்றவன் அங்கு இருந்த இருவர் மட்டும் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு தோதாகப் போடப்பட்டிருந்த குடையின்கீழ் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து தனது மொபைலை இயக்கி “மணி எனக்கும் ழையாவிற்கும் சாப்பாட்டை மாடி தோட்டத்துக்கு கொண்டு வா” என்று கூறினான்

அவன் வரும் முன் இருந்த துள்ளல் அவனின் வருகைக்குப் பின் கூச்சம் காரணமாக அவளிடம் மறைந்து விட்டது

உனக்கு ஊஞ்சல் ஆட பிடிக்குமா ழையா, அந்த வீட்டிலும் மாடியில் இதே போல் தோட்டமும் ஊஞ்சலும் அமைக்கலாமா? என்று அவளிடம் ஆவலுடன் கேட்டான் .

இல்ல இல்ல... சும்மாதான் என்று தனக்கு ஆசை இருந்தாலும் அதை அவனிடம் ஆம் என்று கூற எதோ ஒன்று அவளை தடுத்தது .

அங்கு மாடிக்கு சாப்பாட்டை கொண்டுவந்த மணி அவர்களுக்கு தட்டில் பரிமாறி விட்டு இருக்கவா போகவா என்று யோசனையுடன் அவனின் முகம் பார்த்திருந்த மணியை நீ போ நாங்கள் சாபிட்டுக்கொள்வோம் என்று சொல்லி அனுப்பிவைத்தவன் சாப்பிட வா! என்று ழையாவை கூப்பிட்டான்

சாப்பிடும் போது எதுவும் பேசாமல் அமைதியாக இருவரும் சாப்பிட்டு முடித்ததும் கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து விட்டு போகலாம் பேபி என்றவன் அவளை நிலவின் ஒளியில் அனுவனுவாக ரசித்தான்

அவனின் பார்வையில் தடுமாறியவள் அவனுக்கு முதுகு காண்பித்து திரும்பி நின்று தோட்டத்தை வெறித்துப்பார்த்தாள்

அபொழுது அவளில் காதில் கேட்ட கிட்டார் மீட்டும் ஒளியில் திரும்பிப்பார்த்தவள், அவன் அவளை பார்த்தபடி கிட்டார் மீட்ட ஆயத்தமாவத்தை பார்த்தும் ஆவலானாள். அவன் மீட்டுவதை பார்க்க தோதாக அவனின் முன்பிருந்த இருக்கையில் அமர்ந்தாள்

முதலில் ஓர் ஆங்கிலப் பாட்டிற்கு அவன் கிட்டார் மீட்டி உடன் சேர்ந்து பாடினான் அவன் பாடி முடித்ததும் “வாவ் சூப்பரா இருக்கு” என்று முகம் முழுவதுவும் புன்னகையுடன் கூறியவள்

தலை சாய்த்து உங்களை பற்றி நான் நினைத்ததுக்கு ஆப்போசிட்டாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றாள் .

உடனே என்னை பற்றி நீ என்ன நினைத்தாய் சொல்லேன்! நானும் தெரிந்து கொள்கிறேன் என்று புன்னகையுடன் கேட்டான்

இல்ல இந்த ஹிட்லருக்கு, மத்தவங்களை தான் நினைத்தது போல் ஆட்டிவைக்கத்தான் தெரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது இந்த ஹிட்லருக்குள்ளேயும் ஓவியனும் இருக்கிறான் மனதை மயக்கும் இசையை இயக்கும் கலைஞனும் இருக்கிறான் இன்று தெரிந்தது என்றாள்

தன் மேல் இருந்த கோபம் மறந்து மகிழ்ச்சியுடன் பேசியவளை பார்த்ததும் அவனுக்கு அவள் மேல் மோகம் வந்தது. ஆனால் அதனை வெளிப்படுத்த முடியாமல் அவளின் வார்த்தைகள் அவனை தடுத்தது. அப்பொழுது அவளுக்கு அவனின் ஏக்கத்தை உணர்த்த எண்ணி பகல் நிலவு என்ற படத்தின் பாடலை கிடார் மீட்டியபடி தாபமாக அவளை பார்த்தபடி பாடத்துவங்கினான்

துள்ளி எழுந்தது பாட்டு

சின்னக் குயிலிசைக் கேட்டு

சந்த வரிகளைப் போட்டு

சொல்லி கொடுத்தது காற்று

(மதியம் கணவனான அவனின் அணைப்பை அவள் மறுத்த விதத்தை நினித்தவன்)

உறவோடு தான் அதை பாடணும்

இரவோடு தான் அரங்கேறணும்-

(என பாடியவுடன் அவளும் அவன் எதை நினைத்து அந்த வரியை கூறுகிறான் என்பதை உணர்ந்து குற்றஉணர்வுடன் தன் உதடுகடித்து குனிந்த படி அவன் மீட்டும் அழகை பார்த்தாள்)

துள்ளி எழுந்தது பாட்டு

சின்னக் குயிலிசை கேட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.