(Reading time: 20 - 40 minutes)

ஓர் நாள் மட்டும் என்றாலும் நீங்கள் கணவனாய் என்னுடன் வாழ்ந்து விட்டீர்கள் இனிமேலும் நான் இன்னொருவருடன் வாழ்க்கையை இணைத்துக் கொள்வேன் என்று எப்படி உங்களாள் நினைக்க முடிந்தது ? என்று கோபமுடன் கேட்டாள்.

அவளின் வார்த்தைகள் அவனை பொசுக்கியது அதை கண்களில் கனல் வீச பிரதிபலித்தவன் ஆழ்ந்த குரலில் என்னடீ சொன்ன.... உன்னை நான் சந்தேக படுவதாக என் மீது அடுத்த அம்பை வீசுகிறாயா? என்றவன்

முடியல டீ என்றவன் என்னால் முடியாதது எதுவும் இல்லையென்று உன்னை பார்க்கும் முன்புவரை கர்வம் இருந்துச்சு .என்னைக்கு உன்னை பார்த்தேனோ அன்னைக்கே என் கர்வம் ஆட்டம் கண்டுடுச்சு

நான் இதுவரை யாரையும் பார்த்து பொறாமை பட்டதில்லை வனிதாவோட நான் பார்க்கும் போது நீ சிரிச்சு பேசின அவ மேல எனக்கு பொறாமை வந்துச்சு .ரெஜிஸ்டர் ஆபீசில் என்மகள்னு உன் அப்பா என் முன் உரிமையா உன் பக்கத்தில் நிற்கும் போது பொறாமை வந்துச்சு உன் தம்பி என் அக்கா என்று உனக்கு சப்போர்ட்டா என்கூட சண்டை போடும் போது அவன் மேல் எனக்கு பொறாமை வந்துச்சு

அவங்க எல்லோரிடையும் என் ழையா, இந்த உலகத்துலேயே எனக்குத் தான் உன் மேல் அதிக உரிமைன்னு அவர்களிடம் காண்பிக்கனும் என்று எனக்கு ஆத்திரம் வந்துச்சு

இவங்க கூடவே நீ பேசுறது எனக்கு பொறாமையை கொடுக்கும் போது அவன் அந்த தனுஷ் அன்னைக்கு உன் கூட உன் போனில் பேசியத என்னால் ஜீரணிக்க முடியும் என நினைக்கிறாயா? ழையா

என்னடா இவன் சைக்கோ மாதிரி பேசறானேன்னு பார்கிறாயா?, ஆமா நான் பைத்தியம் தான். உன் மேல் பைத்தியமாகத்தான் இருக்கிறேன். உன்னால மட்டும் தான் என் பைத்தியத்தை தெளிய வைக்க முடியும் .

எப்படின்னு நினைக்கிறாயா? எனக்குரிய பிரச்சனை என்னனு உனக்கு புரியலையா சொல்றேண்டீ என் பிரச்சனை என்னனு சொல்றேன்

கல்யாண வாழ்க்கையில் மனசு ஒத்து வாழ்ரவங்க தான் செக்யூர்டா பீல் பன்னுவாங்க ஆனா நாம அப்படியா வாழறோம்...? உன் விருப்பம் இல்லாமல் உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாமல்.... “நோ அதர் வே” என்ற நிலையில் உன்னை கட்டாயப் படுத்தி என்னிடம் கொண்டு வந்துருக்கேன் டீ, அதனால் நான் அன் செக்யூரா தான் பீல் பண்ண முடியும் . என்னைக்கு நீ என்னை முழுமனதுடன் ஏத்துக்கிட்டேனு நான் பீல் பண்றேனோ அன்னைக்குத்தான் என்னுடைய இந்த சஞ்சலம் போகும் அதுவரை நான் பேசுறது உன்னை காயப் படுத்தும். நீ பேசுறது என்னை குற்ற உணர்வுக்கு உள்ளாக்கும் என்றவன், ஓர் பெரிய ஆசுவாச மூச்சை இழுந்து விட்டவாறு நான் என்ன பண்ண பேபி! நீ மட்டும் தான் என் மனைவி என்றும் உன் கூட மட்டும் தான் என்னால் வாழ முடியும் என்று தெரிந்த பின்பு என்னால் உன்னை விலக முடியலையே !

உனக்கு விருப்பம் இல்லாமால் உன்னை கல்யாணம் செய்தால் இது போல பிரச்சனை நமக்குள் வரும் என்று தெரிந்து தான் நான் எல்லாம் செய்தேன். இதற்கெல்லாம் பயந்து என்னால் உன்னை விட்டுக்கொடுக்க முடியாது டீ ! என்றான்

அவனின் பேச்சை கேட்டவள் மனதில் பெறும் சூறாவளி ஏற்பட்டது ஏனோ கண் இரண்டும் அவளை அறியாமல் கண்ணீரை சொரிந்தது மனம் முழுவதும் சந்தோசமும் துக்கமும் சேர்ந்து ஏற்பட்டது

அவள் அறியாமல் அவனிடமே ழையா கூறினாள் ஏன் மஹி முதலில் எனக்கு வில்லனாக அறிமுகமானீங்க? எனக்கு முதலிலேயே நல்ல காதலனாக ஏன் அறிமுகமில்லாமல் போனீங்க? இப்போ என்னால் உங்க காதலை புரிந்து கொள்ள முடிந்தும் என் காதலை உங்களிடம் காண்பிக்க முடியவில்லையே என்றவள் கண்கள் மேலும் கண்ணீரை சொரிந்தது.

அவள் கண்ணீரை பார்த்ததும் அவளின் கண்ணீரை துடைத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலை கஷ்ட்டப்பட்டு அடக்கினான்

எனக்கு நம்பிக்கை இருக்கு பேபி “உன்னால் முழு மனதுடன் எந்த வருத்தமும் இல்லாமல் என்னுடன் காதலாய் ஓர் நாள் குடும்பம் நடத்துவாய் ” அந்த நாளை நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றான்.

தொடரும்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:1081}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.