(Reading time: 20 - 40 minutes)

குயிலே, ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது

அழகே புது ஆசை வெள்ளம் அணைத் தாண்டி தாவுது-

(என்று பாடியவனின் முகமும் தாபத்துடன் அவளை பார்த்தது )

 

மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது

மாலை முதல்.......

மாலை முதல் காலை வரை 

சொன்னால் என்ன காதல் கதை

காமன் கணை எனை வதைக்குதே

(அவன் பாடலில் தாபத்துடன் தன்னை அழைப்பதில் படபடக்கும் மனதை சமாதானப்படுத்தமுடியாமல் தடுமாறினாள் )

 

துள்ளி எழுந்தது பாட்டு

சின்னக் குயிலிசை கேட்டு

(அவளின் தடுமாற்றத்தை அறிந்தவன் மர்மமான சிரிப்பொன்றை உதிர்த்தவண்ணம் )

 

அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது

கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது

நிலவே! பகல் நேரம் போலே நெருப்பாக காயுது

(அவளை தேடும் அவனின் தாபத்தில் தன்னையறியாமல் அவன் தோல் சாய நினைத்ததை உணர்ந்தவள் பதட்டத்துடன் எழுந்து திரும்பி நின்று கொண்டாள் )

 

நான் தேடிடும் ... (அவளின் முகத்திருப்பலை தாங்க முடியாத தவிப்புடன் )

நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே

வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்

 

துள்ளி எழுந்தது பாட்டு

சின்னக் குயிலிசைக் கேட்டு

சந்த வரிகளைப் போட்டு

சொல்லிக் கொடுத்தது காற்று

உறவோடு தான் அதை பாடணும்

இரவோடு தான் அரங்கேறணும்

 

துள்ளி எழுந்தது பாட்டு

சின்னக் குயிலிசை கேட்டு

(அதற்கு மேல் அங்கிருந்தால் தன்னால் சமாளிக்க முடியாது என்று பயந்தவள் ஏதோ துரத்துவதை போல் ஓடிவந்து அவனின் அறைக்குள் புகுந்து கொண்டாள் )

அவள் சென்றதும் அவள் பின்னாலேயே வந்தவன் மேலும் அவளை சீண்டாமல் இயல்பாக பேச்சுக்கொடுத்தான்

ழையா ரிசப்சனுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் இருந்ததால் வேலை நிறைய இருக்கு அதனால் விழா முடியும் வரை இங்கேயே தங்கியிருக்குமாறு அப்பா சொல்லிவிட்டார் .

நிறைய வேலை காரணமாக அந்த இரண்டு நாட்களும் தூங்க மட்டும் தான் வீட்டிற்கு வர முடியும் என்றவன் அங்கிருந்த ட்ராயரை திறந்து அதில் இருந்து எடுத்த புது ஆப்பிள் போனை அவளிடம் கொடுத்தான்

நான் இல்லாமல் இருக்கும் நேரத்தில் உனக்கு எதுவும் தேவைப்பட்டால் இதில் இருந்து எனக்கு கால் பண்ணு என்றான்

இந்த மொபைலை ஆண் செய்து பார்த்தவள் இதில் என் சிம் கார்டைதானே போட்டிருக்கிறீங்க பட் பழைய நம்பர்ஸ் சிலதை இதில் காணோம் என்றாள்.

இல்ல இதில் புது சிம்மை போட்டிருக்கிறேன் உனக்கு தேவையான் நம்பர்ஸ் மட்டும் இதில் பதிந்திருக்கிறேன் என்றான்

இல்ல நிறைய நம்பர்ஸ் மிஸ் ஆகி இருக்கு இதில் டூ சிம் ஆக்டிவேட் ஆகும் அதனால் எனது பழைய சிம்மையும் கொடுங்க என்று கேட்டால் அவள் கேட்டதும் ஏனோ அவனையும் அறியாமல் எரிச்சலுடன் ஏன்?... ஏன்?... ஏன்? அதை கேட்கிற நீ. என்னால் அதை கொடுக்க முடியாது என்று காய்ந்தான்

அவனின் கோபத்தை கண்டு யோசனையுடன் ஆழ்ந்த குரலில் ஏன்?...என்று ஓர் வார்த்தையில் கேள்வி எழுப்பியவளுக்கு

மஹிந்தனின் பதில், அந்த தனுசுக்கு அந்த நம்பர் தெரியும் ,இனி அந்த நம்பர் டஸ் நாட் எக்இஸ்ட் ஆக இருக்கணும் என்றான் ..

என்னுடைய அனுமதியில்லாமல் என்னை நீங்கள் கல்யாணம் செய்திருந்தாலும் என் வாழ்க்கையில் கல்யாணம் என்பது ஓர் முறைதான் அது உங்களுடன் முடிந்து விட்டது என்று முன்பே நான் நினைத்திருந்தேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.