"தி வார்" என படத் தலைப்பு பிரம்மாண்டமாக வந்தது. அமேலியா அமைதியாக பார்த்தாள்.
ஈராக் மக்களின் வாழ்க்கை முறைகளை படமாக காட்டினார்கள். அமேலியாவிற்கு உள்ளமெல்லாம் மகிழ்ச்சி கூத்தாடியது. தனது மக்களை மிக அருகில் பார்ப்பது போல் உணர்ந்தாள். அவளது மகிழ்ச்சியை நிலாவும் உணர்ந்தாள்.
அமெரிக்க ராணுவனத்தினர் ஈராக் மக்களை துன்பறுத்தும் காட்சி, அவர்களின் இறப்பு, சடங்குகள், திருமணங்கள் என ஒவ்வொரு காட்சியையும் விலாவரியாக காட்டினார்கள்.
அமேலியாவின் முகத்தில் சொல்லமுடியாத மகிழ்ச்சி படர்ந்தது. தன்னை மறந்து, திரையில் ஓடியதை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
அமெரிக்க ராணுவனத்தினர் பயிற்சி மேற்கொள்வது, விசாரணை கைதிகளை அவர்கள் நடத்தும் முறை என சில காட்சிகள் அமேலியாவை நடுங்கச் செய்தன. பின்னர், சில நிமிடங்கள் வேறொரு பகுதியை காட்டிய காமெரா திடீரென அமேலியா வாழ்ந்த பகுதியை காட்ட ஆரம்பித்ததும் அமேலியா தொலைக்காட்சியை நெருங்கி உட்கார்ந்து பார்த்தாள்.
அமேலியாவின் தந்தை வேலை பார்க்கும் காய்கறி மார்க்கெட் காட்டப்பட்டதும், தனது அப்பா எங்காவது தெரிகிறாரா என ஏக்கத்தோடு பார்த்தாள். ஆனால், அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரே ஒரு ஆறுதலாக, தூரத்தில் பஹீராவை தூக்கிக்கொண்டு ஹக்கீம் சென்ற காட்சி அவளை ஆறுதல்படுத்தியது.
சிறிது நேரத்தில் டாக்குமெண்ட்ரி முடிந்தது. அமேலியாவிற்கு ஏமாற்றமானது. "ஏன் நின்னுடுச்சு? திரும்ப போடு" என்பது போல் நிலாவிடம் சைகையில் கேட்டாள் அமேலியா.
"அவ்வளவு தான் அக்கா, அதுக்கு மேல ஓடாது. மாமா தான் இந்த சிடி வாங்கிட்டு வந்திருக்காரு. இதோட தொடர்ச்சி இருக்கானு மாமா வந்ததும் கேட்டு பாக்கலாம்" என்று சைகையில் கூறினாள் நிலா.
அமேலியா ஏமாற்றமடைந்தாள். இருவரும் படுக்கைக்கு வந்து உறங்க ஆரம்பித்தார்கள்.
அமேலியாவிற்கு உறக்கமே வரவில்லை. அவள் மனம் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியது. தனது நாட்டைக் கண்ட சந்தோசம் அவள் உறக்கத்திற்கு தடை போட்டது.
தான் அடைந்த மகிழ்ச்சிக்கான காரணம் வசந்த் என எண்ணினாள் அமேலியா. அதற்கு நாம் திரும்ப என்ன செய்ய போகிறோம் என்று எண்ணியவளுக்கு ஓவியம் நினைவுக்கு வந்தது. ஆனால், ஆபாசமாக இருக்கும் அந்த ஓவியத்தை எப்படி வரைவது? உதவியும் செய்ய வேண்டும், என்ன செய்வது? என்று எண்ணினாள் அமேலியா.
படுக்கையில் இருந்து எழுந்து வாசல் கதவைத் திறந்து தான் கசக்கி எறிந்த ஓவியத்தை தேடி எடுத்துப் பார்த்தாள். நிச்சயம் ஆபாசமாக ஓவியத்தை நான் வரைய மாட்டேன் என முடிவு செய்தவள் வானில் ஜொலிக்கும் நிலவினை நோக்கினாள்.
தொடரும்...
{kunena_discuss:983}