பிடித்த உணவை கண்ட மகிழ்ச்சி என புரிய, ஆதுரத்துடன் அந்த பக்கமே பார்த்த படி நடந்தேன்.
சந்தோஷத்துடன் நடந்துக் கொண்டிருந்த அந்த பிஞ்சுக் கால்கள் எங்கேயோ தட்டுபட தட்டுடன் கீழே விழுந்தது குழந்தை.
தட்டில் இருந்த உணவு முழுக்க மணலில் கொட்டி போயிருந்தது!
“ம்மா...” என வருத்தமும் பயமுமாக குழந்தை முனக, எனக்குள்ளும் பரிதாபத்துடன் கூடவே சின்ன கிலியும் எட்டி பார்த்தது.
காலை முதல் வெயிலில் நின்று உழைத்து வந்த பணத்தில் செய்த உணவு!
வீணாகி போனதற்கு குழநத்தையை அடித்து விடுவார்களோ?
நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, குழந்தையின் சத்தத்தை கேட்டு உள்ளிருந்து ஓடி வந்தாள் அதன் தாய்.
குழந்தை தட்டை காட்டி சொல்ல, அவள் முகத்தில் வேதனையின் அடையாளம்.
ஆனாலும் குழந்தையிடம் கோபமாக எதையு
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>தொடரும்!
{kunena_discuss:899}