"ஆண்டி.. வாட் இஸ் திஸ்.. பாருங்க சூரி பேபி மூஞ்சிச் சின்னதாயிட்டுது.. யூ டோண்ட் வொர்ரி பேபி.. பிடிச்சிருந்தா உனக்கும் வாங்கிடலாம்.. அதை விடு நமக்குக் காலேஜுக்கு டைம் ஆச்சு வா இப்போ போகலாம்.. நாங்க கிளம்பறோம்.." என்று கையைப்பிடித்து அழைத்து வாசலுக்குச் சென்றாள்..
அதற்குள் இரண்டு தெருத் தள்ளியிருந்த சாந்தி பானுவும் வந்துவிட,
"ஹாய்டி பன்னு..", என்றார்கள் கோரசாய்..
பானுவைக் குண்டு பன்னு என்று தான் கூப்பிடுவார்கள் தோழிகள் இருவரும்..
ஒருவழியா மூவரும் இரண்டு ஸ்கூட்டியில் ஏறிக் காலேஜீக்கு புறப்படும் வேளை அவர்கள் எதிர் வீட்டிற்கு.. சுந்தரியின் பெரியப்பா பலராமன் வீட்டின் வாயிலில் ஒரு சாமான் டெம்போ வந்து நின்றது..
“ஏய் என்னடி உங்க பெரியப்பா வீட்டு வாசலில் வண்டி வந்து நிக்கிது?.. ஏதாவது விசேஷமா?..”, என்று ஆவலுடன் பானு எதிர் வீட்டை நோக்க..
“ஏய் பன்னு போதும்.. அங்க என்ன நடந்தா நமக்கென்ன.. எங்கம்மாவே கொஞ்சம் அளவாத்தான் அங்கே போவாங்க வருவாங்க.. அதுவும் பாட்டி தாத்தா காலத்துக்கப்புறம் அதிகமா ஒட்டுதல் கிடையாதுடி.. அப்பப்பப் பாத்துக்கறதுதான்.. அதுவும் அண்ணனுக்கு அப்படி ஆனதுக்கு அப்புறம் அங்கே போகவே என்னமோ மாதிரி இருக்குடி.. சரி சரி வாங்க நாம கிளம்பலாம்..”, என்று மீண்டும் அவர்களை ஊக்கியவள், ஸ்கூட்டியில் மோஹிதாவைப் பின்னே வைத்துக் கொண்டு பறந்தாள்
தொடரும்
{kunena_discuss:1138}