“நான் வரலை. இனி இங்கேதான் இருக்கப்போறேன்.”
“நீ எப்படி இங்கே இருக்க முடியும்? வா நம்ம வீட்டுக்குப் போகலாம்.”
“இல்லை! இதுதான் என் வீடு. நான் வேறெங்கும் வரமுடியாது.” அழுத்தமான குரலில் சொன்னவளை கடிந்துகொள்ள முடியாமல் பொறுமை காத்தான்.
இந்த இரண்டு வாரங்களில் உடல் மிகவும் மெலிவுற்றிருந்தது. கண்களைச் சுற்றிக் கருவளையம் பரவியிருந்தது.
இப்போது தான் கடுமை காட்டினால் நொந்து போய் இருப்பவள் எப்படி நடந்துகொள்வாளோ? என்று பயந்தான்.
அவளுக்கு என்ன கோபம் என்று புரியவில்லை. எதையாவது வாய் விட்டு சொன்னாலாவது பரவாயில்லை. எதையுமே சொல்லாமல் அழுத்தமாக இருப்பவளிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பது.
“மலர். என்னால் ரொம்ப நாள் இங்கேயே தங்க முடியாது.”
“நீங்க உங்க வீட்டுக்குப் போங்க. நான் வரமாட்டேன
...
This story is now available on Chillzee KiMo.
...
யில்லை.”
“ப்ளீஸ்டா. அழாதே. இந்த மாதிரி நேரத்தில் நீ அலட்டிக்கக்கூடாது.”
அவளை கட்டிலில் அமர வைத்தான். அவள் அழுகை நிற்கவேயில்லை. இந்த நேரத்தில் எதையாவது கேட்டு அவளை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று எண்ணியவன் பேசாமல் இருந்தான். ஆனால் விதி சும்மா இருக்கவில்லை. நேசமலர் பேச ஆரம்பித்தாள்.