“ஆம்.. இது தியாவிற்கு சொந்தமானது தான்..”,என்று அனைவரிடமும் பொதுவாக கூரிய அகிலன் தியாவை நோக்கி,”போய் எடு தியா.. உன் இலக்கை நோக்கிய இரண்டாம் படிக்கட்டு இது..”,என்றது..
அதனிடம் சரி என்பது போல் தலையசைதவள் தன் கரங்களால் அந்த பெட்டியை குட்டையிலிருந்து வெளியில் எடுத்து அருகிலிருந்த பாறையின் மேல் வைத்தாள்..
அந்த ஓலைப் பெட்டியை ஒரு முறை சுற்றிய அந்த நாகம் கருங்குவளை குட்டையை ஒருமுறை சுற்றி விட்டு தியாவின் காலை உரசிய வண்ணம் சருகுக்காட்டை விட்டு வெளியேறத் துவங்கியது..
அதே சமயம் சுஜன் விழுந்த குட்டையை சுற்றியிருந்த பாம்புகளும் நாகத்தைப் போல் அனைத்தையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு நாகத்தை பின் தொடர்ந்து செல்லத் தொடங்கின..
“இது எங்க போகுது..??”,என்ற விக்கியின் முனுமுனுப்பைக் கேட்ட அகிலன்,”இந்த நாகத்தின் பணி முடிவடைந்துவிட்டது.. அது அதன் வழி செல்கிறது.. சுஜனை தூக்கி விடுங்கள்..”,என்று விட்டு தியாவிடம் சென்று,”இந்தப் பெட்டியை திறந்து பார்..”,என்றது..
அகிலனின் பேச்சிற்கு உடன் பட்டு அந்த பெட்டியைத் திறந்தவளுக்கு ஒரு ஓலைச்சுவடி
“ஆக வநவ கோன்
கெள ரங்கன் வீய
உகன்னப் பொறி
அலரி இரும் பூது”,என்ற வரிகளுடன் வெளிப்பட்டது..
வணக்கம் நண்பர்களே..!!
என்னுடைய இப்பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்..
இந்த பதிவில் நிறைகளோ குறைகளோ எதுவாக இருந்தாலும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி..!!
வியூகம் வகுக்கலாம்...
{kunena_discuss:1111}