(Reading time: 21 - 41 minutes)

ஏய் பொண்டாட்டி என்ன நீ திடீர் திடீர்நு பேர் சொல்லி கூப்டுற??

ம்ம் விட்டா வாடா போடானே கூப்டுவேன்..நீ இந்த சிவாயெல்லாம் எப்படி லவ் பண்ணீங்க எப்போ பாரு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஊர் சுத்திட்டு இருக்கீங்க…சரியா படல என குறுகுறு பார்வை பார்க்க,

சத்தமாய் வாய்விட்டு சிரித்தவன்..பேபி நல்லவேளை யாரும் பக்கத்துல இல்ல மானம் போய்ருக்கும் ஏண்டி நீ இப்படியிருக்க சரி இப்போ என்ன அவரோட வெளில போனது தப்புதான் அதுக்கு பனிஷ்மெண்ட் என்னவோ சொல்லு செய்றேன்..

கில்லாடி மாமா நீ சரி நீ இவ்ளோ தூரம் கெஞ்சி கேக்குறதால சொல்றேன்..ஈவ்னிங் என்ன வெளில கூட்டிட்டு போ..

நா கெஞ்சினேனா அது சரி..ம்ம் எங்க போலாம்நு சொல்லு..

பெருசாலா இல்ல மாமா சும்மா அப்படியே ஒரு வாக் போய்ட்டு வரலாம்..

சரி சஹி நா போய்ட்டு ப்ரெஷ் ஆய்ட்டு வந்துரேன் நாம போலாம் 10 மினிட்ஸ் என கன்னம் கிள்ளிச் சென்றவனை கண்களுக்குள் நிரப்பினாள்..அடுத்த அரைமணி நேரத்தில் இருவருமாய் வீட்டை விட்டு கிளம்பி நடக்க ஆரம்பித்தனர்..மாலை மங்கும் வேளையில் தன்னவனோடு கைகோர்த்து அந்த தெருக்களில் நடக்கும்போது ரம்மியமாய் இருப்பதாய் தோன்றியது..

என்ன சஹி அமைதியாவே வர???

இல்ல மாமா மனசு ஒருமாறி அமைதியா இருக்கு அதான்..என்று அவள்முடிக்க கார்த்திக்கின் கைப்பேசி ஒலித்தது..

அப்பா கிளம்பிடீங்களா???

ம்ம் ஆமா கார்த்தி சம்மந்தி வீட்ல கிளம்பிடாங்க இங்க வந்து பிக்கப் பண்றேன்னு சொல்லிருக்காங்க.

ஓ சரிப்பா பாத்து வாங்க..நாங்க இங்க கோவில் பூஜைக்கு அரேஜ்மெண்ட்ஸ்லா பண்ணியாச்சு நீங்க வந்தவுடனே கோவில் போக கரெக்ட்டா இருக்கும்..மேலும் சில நிமிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் தன்னவள் ஏதோ யோசனையாய் வருவதை கண்டு,என்னாச்சு சஹி???

இல்ல மாமா இந்த ஒரு வாரமும் போனதே தெரில இல்ல அழகான நாட்கள் மாமா..நாளைக்கு ஊருக்கு போனும்னு நினைச்சா கஷ்டமாயிருக்கு..

ம்ம் உண்மைதான் சஹிம்மா ப்யூட்டிபுல் ப்லேஸ்..பட் என் சஹிகுட்டி ஈப்படி பீல் பண்ணுவானு தெரிஞ்சுதான் நா ஆல்ரெடி ஒரு ஏற்பாடு பண்ணிட்டனே..

என்ன மாமா சொல்ற???

ம்ம் அடுத்த வாரம் நாம கல்யாணம் முடிஞ்சதும் டூ டேஸ்ல ஹனிமூன் ட்ரிப் ஆரம்பிக்கலாம்நு இருக்கேன் ஒரு 20 டு 25 டேஸ்..மீ அண்ட் சஹி மட்டும்..என்ன ஓ.கே தான??

பெண்ணவள் கன்னம் சிவக்க தலையை குனிந்து கொள்ள,எங்கநு கேக்க மாட்டியா சஹி???

ம்ம் எங்க போறோம் மாமா??

இங்கதான் என்றுகூறி கண்சிமிட்ட சஹானாவோ வாயடைத்து நின்றாள்..இங்கேயா????

ம்ம் ஆமா சஹிம்மா ஹனிமூன் ப்லேஸ் நமக்கு பிடிச்ச இடமா மனசுக்கு சந்தோஷத்த குடுக்குறதா இருக்கனும் உனக்கு இதவிட எந்த இடம் சந்தோஷத்தை குடுக்க போகுது அதனால தான் இங்கேயே வரலாம்நு டிஸைட் பண்ணிட்டேன்..ஓ.கே தான??

லவ் யூ சோ மச் மாமா என அவன் தோள் சாய்ந்து கொண்டாள்..

இரவு உணவை எடுத்து வந்த கௌரி வீடு முழுவதும் தேடியும் யாரையும் காணாமல் வாசலை நோக்கி செல்ல ஷரவன் அவனது அறையிலிருந்து வந்தான்..

யாரையாவது தேடுறியா???

இல்ல சாப்பாடு எடுத்துட்டு வந்தேன் யாரையும் காணுமேநு அதான்..

ஓ அண்ணா அண்ணி வெளில போய்ருக்காங்க ஷரவ் மாடிலயிருக்கா..

ஓ சரி நா அப்பறமா வாரேன் என நகரப் போனவளை மறித்து நின்றவன் நா கொஞ்சம் உன்கூட பேசனுமே..

என்ன சொல்லுங்க என்றாள் சிறு தயக்கத்தோடு..

ம்ம் எனக்கு உன்னை பிடிச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்கனும்நு ஆசப்பட்றேன்..நாளைக்கு நாங்க ஊருக்கு கிளம்புறோம் அதான் அதுக்குள்ள சொல்லிடலாம்நு ஒண்ணும் அவசரமில்ல நீ யோசிச்சு சொல்லு..

ஒரு முறை அவனை நிமிரிந்து பார்த்தவள்.மறுபுறம் திரும்பியவாறு எனக்கு வந்து…..இதெல்லாம் சரிபடாதுங்க..இன்னும் படிக்கனும் என் பீல்ட்ல எதாவது சாதிக்கனும் அதுக்கப்பறம் தான் கல்யாணத்தை பத்தி யோசிக்கனும் அதுகூட எங்கப்பாவோடமுடிவுதான்..

கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோ..நா உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் சொன்னேன் நாளைக்கே பண்ணிக்கனும்னு சொல்லலையே..இன்பேக்ட் நானே என் ப்ரோபஷன்ல கத்துக்க நிறைய இருக்கு…அதுக்கப்பறம் வந்து உங்கப்பா கிட்ட பொண்ணு கேட்டா நீ பிடிக்கும்நு சொல்லுவியா மாட்டியானு தெரியனுமே அந்த அஷீரன்ஸ் கூட இல்லாம எந்த நம்பிக்கைல நா எங்க அம்மா அப்பாவ பொண்ணு கேட்டு வர சொல்றது??இப்போ புரியும்னு நினைக்குறேன்..சொல்லு இன்னும் 4 இல்ல 5 வருஷம் கழிச்சு பொண்ணு கேக்க வரலாமா கூடாதா என குனிந்து அவளைப் பார்க்க அவளோ பதட்டமாய் தன் துப்பட்டாவை கையில் சுழற்றிக் கொண்டிருந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.