(Reading time: 21 - 41 minutes)

எஸ் ஆர் நோ??என மீண்டும் அவன் விடாபிடியாய் கேட்க,

மௌனம் சம்மதம்நு தெரியாதா கொழுந்தனாரே??நா கூட உங்கள என்னவோநு நினைச்சேன் பட் பரவால்ல நீங்க உங்க அண்ணன் அளவுக்கு மோசமில்ல..என்ன கௌரி என் கொழுந்தனார் ஓ.கே தான என அதிகாரமாய் கேட்க கார்த்திக் குறுஞ்சிரிப்போடு அவளருகில் வந்து நின்றான்..

அண்ணா..

எல்லாம் கேட்டுட்டுதான் இருந்தேன் ஷரவன்…கௌரி உன் விருப்பத்தை சொல்லு..இரண்டு பேருக்கும் சம்மதம்ங்கிற. பட்ஷத்துல பெரியவங்ககிட்ட பேச வேண்டியது என் பொறுப்பு..என்று ஷரவனின் தோள்தட்டிச் சென்றான்..

ஆனா கொழுந்தனாரே உங்க அண்ணன் எப்படி இப்படி ஒரு நல்லவரா இருக்காருனே தெரில..ம்ம் எனிவே உங்க ரெண்டு பேருக்கும் என் சப்போர்ட்டும் எப்பவும் உண்டு..கௌரி நாதான் சீனியர் சோ ரகிங்லா உண்டு பீ கேர்புல் என்று உள்ளே சென்றுவிட,ஷரவன் இன்னமும் அவளை மறித்து நின்றிருந்தான்..பாரு நம்ம விஷயத்துலா எல்லாமே தலைகீழா இருக்கு உன் சம்மதமே தெரில அதுகுள்ள குடும்பமே ஓ.கே சொல்லியாச்சு..

ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்தவள் சம்மதம் இல்லாமயா இவ்ளோ நேரம் நீங்க பேசினதெல்லாம் அமைதியா நின்னு கேட்டுட்டு இருந்தேன்..சரியான டியூப்லைட் என்றவாறு அவனை தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்..

அவள்சென்ற அடுத்த நிமிடம் ஷரவனின் பின்னிருந்து மச்சான்…….

குரல் வந்த திசையை பார்த்து கைக்கூப்பியவன் மாமா உங்ககிட்டயும் மாட்டிட்டேனா நா பாவம் மாமா..இப்படி ப்ரோபபோஸ் பண்ண அன்னைக்கே குடும்பத்துல அத்தனை பேர்ட்டயும் மாட்டிட்டேனே..

ஹா ஹா விடு மச்சான் நடு வீட்ல நின்னு ப்ரோபோஸ் பண்ணா அப்படி இப்படி காதுல விழதான் செய்யும்..நல்லவேளை என் மாமனார் மாமியார் இல்லயேநு சந்தோஷப்பட்டுக்கோ..

ஷரவன் கங்க்ராட்ஸ்டா..-ஷரவ்..

நீயுமா தேங்க்ஸ் ஷரவ் என தனதறைக்குள் சென்று ஒளிந்து கொண்டான்..

மறுநாள் காலையிலேயே பெரியவர்கள் வந்துவிட அவர்கள் குளித்து தயாராகி கோவிலுக்கு கிளம்பினர்..அனைவரும் வெளியே வந்து காரில் ஏற சஹானாவை காணாமல் கார்த்திக் உள்ளே வந்தான்..என்னாச்சு அத்தை சஹானா எங்க???

அத ஏன் கேக்குறீங்க மாப்ள..நானே உங்கள கூப்பிட வரலாம்நு இருந்தேன்..நீங்க கூப்டாதான் வருவாளாம்..கதவை தட்டிதட்டி ஓஞ்சு போய்ட்டேன்..

சரி சரி நீங்க போங்க அத்தை நானே கூட்டிட்டு வரேன்..என அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு மனதிற்குள் தன்னவளை நினைத்து சிரித்தவாறே கதவைதட்ட திறந்துதான் இருக்கு மாமா வா என உள்ளிருந்து குரல் கொடுத்தாள்..

என்ன சஹி இப்படி பண்ற என கேட்டவாறே உள்நுழைந்தவன் தன்னவளை கண்டு வாயை மூடிக் கொண்டான்..அழகான நாவல்பழ நிற மைசூர் சில்க் சேலையில் கரும்பச்சை நிற பார்டரோடு அதற்கேற்ற சிறு செயினும் கம்மலும் கைநிறைய அதே நிறத்தில் வளையலுமாய் அழகாய் நின்றிருந்தாள்..

மாமா எப்படியிருக்கு..நானே பர்ஸ்ட் டைம் கட்டிருக்கேன்..உனக்குதான் முதல்ல காட்றேன் சொல்லு எப்பாடியிருக்கு என அவனருகில் வர அழுத்தமாய் அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன் என் சஹி எப்பவுமே கொள்ளையழகு அதுல என்ன டவுட்..வந்ததுக்கு ஒரு கிஸ் லாபம் போலாமா என கேட்க

ஆனாலும் நீ ஆடிட்டர்நு ப்ரூவ் பண்ணிட்டேதான் இருக்க கணக்குல கரெக்ட்டா இருக்கியே மாமா வந்த வேலைய முடிச்சுட்டு கிளப்பற பாத்தியா??

சஹிம்மா எல்லாரும் வெயிட்டிங்ல அதுக்காகதான் சொல்றேன்..இன்னும் ஒரே வாரம் கல்யாணத்துக்கப்பறம் நீ இப்படி ரெடி ஆய்ட்டு வந்து நில்லு நீயே விரட்டினாலும் ரூமை விட்டு நகர மாட்டேன் என்ன சொல்ற டீலா???

அதான உன்கூட பேசி ஜெயிக்க முடியுமா சரி சரி வா போலாம் மாமா..

அதன்பின் அன்றைய பொழுது தெய்வத்தின் அருளோடு அழகாய் அமைந்தது..குல தெய்வ கோவிலில் ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருக்க அவர்கள் சென்றவுடன் பூஜை ஆரம்பித்தது..அபிஷேகங்கள் முடிந்து பெண்கள் அங்கேயே பொங்கல் வைத்து இரு தம்பதிகளுக்கும் அர்ச்சனை செய்து திருப்தியாய் வேண்டுதலை முடித்து வீட்டுற்கு வர மதியத்தை தாண்டியிருக்க பெரியவர்கள் பயண களைப்பில் ஓய்வெடுக்கச் சென்றுவிட சிவா ஷரவந்தியை அழைத்து கொண்டு மொட்டைமாடிக்குச் சென்றான்..

என்னப்பா சொல்லுங்க எதுக்கு கூப்டீங்க??ட்ரெஸ்லா பேக் பண்ணணும்..

ம்ம் நாட்டுக்கு அதான் இப்போ ரொம்பா முக்கியம்..ஏன் ஷரவ் நானே ஊருக்கு போறத நினைச்சு எவ்ளோ பீலிங்க்ஸ்ல இருக்கேன்..அங்க போனா வேலை வெட்டிநு பாக்கவே டைம் எப்பவாவதுதான் கிடைக்கும்..நா அதை நினைச்சு கவல பட்டுட்டு இருக்கேன் நீ என்னனா ஜாலியா பேக்கிங் பண்ண போறங்கிற..

ஐயோ என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க..எனக்கும் இங்கயிருந்து போக மனசேயில்ல..பட் நெக்ஸ்ட் வீக் அண்ணா கல்யாணம்ல நாம அவங்களுக்கு எவ்ளோ சர்ப்ரைஸ் ப்ளான் பண்ணி வச்சுருக்கோம் அந்த ஜாலில தான் ரெடி ஆகுறேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.