ம்ம் டீச்சரம்மா நீ ஆனாலும் என்ன கண்டுக்கவே மாட்ற கல்யாணத்துக்கப்பறம் ரொம்ப பீல் பண்ணுவ??
என்ன லாயர் சார் கிரிமினல் மாறி பேச ஆரம்பிச்சுட்டீங்க..எதுவாயிருந்தாலும் கல்யாணத்துக்கப்பறம் நா சமாளிச்சுக்குறேன் நீங்க கவலபடாதீங்க பை..என அவள் வேகமாய் கிழிறங்க..படியருகில் சென்று அவனைப் பார்க்க உண்மையாகவே அவன் முகம் வாட்டமாய் தான் இருந்தது..மேலும் இரண்டுபடி இறங்கியவள் அம்மா என்று அலற சிவா ஓடி வந்தான்..ஷரவந்தி காலைப் பிடித்தவாறு அமர்ந்திருந்திருக்க பதறிவிட்டான்..
ஷரவ் என்னடா ஆச்சு??விழுந்துட்டியா??என்னடீ??என அவன் கேட்டுக் கொண்டேயிருக்க சட்டென அவன் கன்னத்தை பற்றி இதழ்பதித்தாள்..இப்போதைக்கு இவ்ளோ தான் ஆள விடுங்க..முதல்ல பாவமா மூஞ்சிய வச்சுக்குறத மாத்துங்க என்றவாறு நிற்காமல் ஓடிவிட்டாள்..தேங்க் யூ டீச்சரம்மா என்றவாறு தன்னவளை பின் தொடந்தான்…
கிளம்புவதற்கு சற்று நேரத்திற்கு முன் கார்த்திக் மணியை தேடிச் சென்றான்..வாங்க தம்பி எதுவும் வேணுமா??
இல்ல அண்ணா சாரி இனி உங்கள மாமாநு தான் கூப்டனும் மறந்துட்டேன்..
தம்பி என்ன சொல்றீக எனக்கு புரில..
என் தம்பிக்கு மாமனார்னா எனக்கு மாமா தான??
தம்பி..
பதட்டபடாதீங்க அண்ணா..ஷரவன்க்கு கௌரியை பிடிச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்கனும் ஆசப் பட்றான்..பட் கௌரி படிப்ப முடிக்கட்டும் மேல படிக்குறதுனாலும் படிக்கட்டும்..ஷரவனும் அதுக்குள்ள அவனோட வேலைல நல்ல நிலைமைக்கு வந்துருவான்..நா இத இப்போவே உங்ககிட்ட ஏன் சொல்றேன்னா நாளைக்கே கௌரி படிப்ப முடிச்சவுடனே நாலஞ்சு வரன் வரும்..ஊர்காரங்க தெரிஞ்சவங்கநு கேப்பாங்க அப்போ உங்களுக்கு தர்மசங்கடம் ஆக கூடாதுநுதான் சொல்றேன்..எங்க வீட்டுக்கு கௌரி மருமகளா வர்றதுல உங்களுக்கு சம்மதம் தான???
அவன் கைகளைப் பிடித்தவாறு தம்பி சந்தோஷத்துல பேச வார்த்தை வராம நிக்குறேன்..சஹானாம்மா வாழப் போற வீட்ல என் பொண்ணும் இருக்கப் போறாங்கிறத விட வேற எண்ணம் வேணுமா ஆனா இப்போ அதையும் தாண்டி அவளுக்கு ஒரு நல்ல அண்ணணா நீங்க இருக்கீங்களே தம்பி அது போதாதா பொம்பள பிள்ளைய எப்படி கரையேத்த போறோம்நு தவிச்சு போயிருந்தேன் இனி கௌரி வாழ்க்கைய பத்தி எனக்கு எந்த கவலயும் இல்லப்பா..
சந்தோஷம் அண்ணா..ஆனா இப்போதைக்கு நா உங்ககிட்ட இந்த விஷயத்தை பத்தி பேசினது யாருக்கும் தெரிய வேணாம் கௌரி உட்பட..அப்பா அம்மாட்ட விஷயத்தை பேசி சம்மதம் வாங்குறது என் பொறுப்பு .நீங்க எப்போ சென்னை வரீங்க??
நல்லா கேட்டீக போக உங்க கல்யாண வேலைலா நா இல்லாமையா ரெண்டே நாள்ல வந்துருவேன் தம்பி..
நல்லா சொன்னீங்க போங்க அது எங்க ஊரு உங்களுக்குலா ஒரு வேலையும் வைக்க மாட்டோம்..எங்கள ஆசீர்வாதம் பண்றது மட்டும்தான் உங்க வேலையா இருக்கனும்..என்றவாறு அவரிடமிருந்து விடைப் பெற்றான்...
ப்ரெண்ட்ஸ் எபி எப்படியிருந்தது..அடுத்ததாக கார்த்திக் சஹானா சாரி சாரி கார்த்திகேயன் தேவிகா கல்யாணத்துக்கு எல்லாரும் மறக்காம வந்துருங்க..
தொடரும்
{kunena_discuss:1097}