உடனே வாட்ஸப்பில் நான் சல்யூட் அடிக்கும் படத்தை என் ஃபோனிலிருந்தே க்ளிக் செஞ்சிப் போட சொல்லிட்டாரு அந்தச் சிங்கார வேலன்.. மொத்தமா கம்ப்ளீட் ஆப்பு ஆண்டவனா மாறிட்டான் அந்தச் சிக்கல் சிங்காரவேலன்..", என்று பற்களாய்க் கடித்தாள்.
ஹாஹா.. என்று சிரித்த மோஹிதா.. "தாங் காட்.. நல்லவேளை எங்களை விட்டுட்டார் சார்.. மே பீ பன்னு வாடர்ஃபால்சை மூடாம இருந்ததால இருக்குமோ.. எது எப்படியிருந்தாலும் இந்த பிரச்சனையிலிருந்து நீ மீண்டு வந்தா.. உனக்கு மொட்டை...", என்று முடிக்கவிடவில்லை சுந்தரி..
"கொரங்கே.. மொட்டைப் போடுவியா நீயி.. போதுண்டி.. நீயெல்லாம் எனக்கு நண்பின்னு சொல்லவே ஆத்திரமா இருக்கு.. துன்பி நீயி.. இதுக்கெல்லாம் காரணமான அந்தச் சிக்கல் சிங்காரனை.. நான்...", என்று சொல்லிவிட்டு நிறுத்தினாள்.
"சொல்லுச் சொல்லு.. நீ.. என்ன பன்னுவே..”
“இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே அனபேன்னு..”
சிங்கார வேலன் படத்துலே வருமே அது போலப் பாடுவியா?..", என்று சொல்லி மீண்டும் கிண்டலடித்தாள்..
பதில் சொல்லாமல்.. "பொறுத்திருந்துப் பார்..மகளே.. அவன் என்னாகிறான்னு..", என்று நினைத்தவள், தன் ஸ்கூட்டிக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு ஆட்டோவை நோக்கி நடந்தவள்..
"ஆமாம்.. காலையில போன் பண்ணா ஏன்டி நீ போனை எடுக்கலை?.." என்னவோ இப்பொழுது அதுதான் முக்கியம் போலக் கேட்டச் சுந்தரியை ஏற இறங்கப் பார்த்த மோஹியோ..
"ஹி.ஹீ.. அது ஒண்ணுமில்ல மச்சி.. யானைக்குக் கூடக் கட்டிச் சோறு போடலாம்.. இந்த ஆன்ட்ராய்ட் போனுக்குச் சார்ஜ் போட்டு மாளலைப்பா.. சார்ஜ் போட மறந்து போயிட்டேன்.. ஆனாலும் சொன்ன டயத்துக்கு வந்துட்டோமில்ல.." என்ற மோஹிதாவை முறைத்த சுந்தரி பக்கெனத் தன்னை மறந்து சிரிக்க, உடன் தொடர்ந்தத் தோழியரோ எல்லாவற்றையும் மறந்து அவளுடன் சிரித்தபடித் தொடர்ந்தனர்.
பார்ப்போம்.. ஆட்டம் இனி களைக் கட்டுமா?
தொடரும்
{kunena_discuss:1138}