(Reading time: 41 - 82 minutes)

சாயந்தரம் வந்துடுவோம்....பத்திரமா இருங்க” என்றபடி அவர் விடைபெற, அவரை எதிர்த்துப் பேசி அறியாத ஜெயசீலி திரும்பி திரும்பி பார்த்தபடி கண்ணில் நீரோடு போன காட்சி இன்னும் இவள் கண்ணில் தெரிகிறது.

ங்கு தென்பாவூரில் இளையவர்கள் நால்வரும் மொட்டை மாடியில் உச்சி மாநாடு. இருபக்க சூழலையும் பேசி எப்படியும் இந்த கல்யாணத்தை நடத்தியே தீர்வது என்ற முடிவுக்கு வந்திருந்தது நால்வர் கூட்டணி.

“எங்க அக்கா ஏற்கனவே கல்யாணதுக்கு சரின்னு தான் சொல்லிருக்கா..இனி சந்தோஷமா சொல்லுவா....ஆனா பெரிய அத்தான சம்மதிக்க வைக்க என்ன வழி....?” ஜீவனி முக்கிய ப்ரச்சனையை சுட்டிகாட்ட....

“ம்க்கும்....”தொண்டயை கணைத்துக் கொண்டான் ஆனந்த். “அதுக்கு ஒரு வழி இருக்குது ...எங்கள பத்திதான அண்ணா யோசிக்கிறான்.... என் தம்பிக்கு அடுத்த அண்ணியும் இந்த வீட்ல இருந்தே வந்தா......” அவன் கண்கள் ஜீவனியிடம் போய் திரும்பியது.

தன் அண்ணன் ஆனந்த் முகத்தைப் பார்த்த ஜீவன் “இது எப்ப இருந்துடா....? வர்றப்ப நல்லாத்தான இருந்த..? ” என்றபடி ஏற இறங்க பார்த்தான்.

“அது...இதுக்கெல்லாம்....அப்படித்தான்....தோணிச்சு.....” ஆனந்த் சொல்ல இப்பொழுது ஜீவனி தலையை குனிந்து கொண்டாள்.

ஆனந்த் ஜீவனி இருவர் முகத்தையும் பார்த்த ஜீவன்

“வர்ரே வா...அப்ப ரெண்டு கல்யாணம்னு சொல்லு....கங்குராசுலேஷன்ஸ் சின்ன அண்ணி...” ஜீவனியிடம் கைகுலுக்க கை நீட்டினான்.

அதுவரை எதுவும் புரியாது விழித்துக்கொண்டிருந்த ஆனந்திக்கு அப்பொழுதுதான் விஷயம் ஓரளவு புரிந்தது.

“ஹலோ....ஓவர் ஸ்பீடு உடம்புக்கு ஆகாது....ஓட்ட காரு ஊர் போய் சேராது.... அவளுக்கு எங்க வீட்டு கணக்குபடி கல்யாண வயசு வரதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்குது.....இப்பதான் டிகிரி முடிச்சிருக்கா...பி எட் பண்ணாம நோ கல்யாணம்....பாலம்ம சட்டம்....”

“அதோட ஆனந்தி அக்கா கல்யாணதுக்கு முன்னால என்னால இதுக்கெல்லாம் சம்மதிக்க முடியாது..” மெல்லமாக ஜீவனி சொல்ல

..ஆ....என்றமுக பாவத்தை ஆனந்த் காட்ட “ ஆனந்தி அக்காவா...?” என அதை மொழிப் படுத்தினான் ஜீவன்.

ஆண்கள் இருவரும் ஜீவனியை மூத்தவளாக தவறாக புரிந்திருந்தனர்.

“இப்ப என்னடா பண்றது...ஒரு கல்யாண ப்ரச்சனைய தீர்க்கவே திருடன் ரேஞ்சுக்கு டெவலப் ஆகி இருக்கோம்...இப்போ ரெண்டு கல்யாணத்துல  ப்ரச்சனைனா...? டான் ரேஞ்சுக்கு டெவலப் ஆகனுமோ....?” ஜீவன் சிந்திக்க

“ஆமாங்க உங்களுக்கு திருடன் வேஷம் ஈசிய பொருந்துது.....டான் ஆ நடிக்கனும்னா...அதுக்கு ஒரு  சார்மிங் வேணும்ல....? பாவம் நீங்க அதுக்கு எங்க போவீங்க...?...” சீரியஸாக கவலைப் பட்டாள் ஆனந்தி...

காதில் புகைவர ஜீவன் அவளைப் பார்த்து நிமிரும்போதே....

“ஹலோ இப்போ பாலம்ம வந்தா ரெண்டு கல்யாணமும் நிரந்தர கேன்ஸல்...இப்படிபட்ட வீட்டுக்கு பொண்னு தர மாட்டேன்னு சொல்லிடுவாங்க....அவங்க வரமுன்னால நாங்க உள்ள போய் ஆகனும்...நீங்க வெளிய....” இம்மீடியட் ப்ரச்சனையை நினைவு படுத்தினாள் ஜீவனி.

பெண்கள் இருவரும் வெளியில் மொட்டை மாடியில் நிற்க, ஆட்டமெட்டிக் லாக் உள்ள மொட்டை மாடி கதவு அடித்த பலத்த காற்றில் அதுவாக மூடி உள்ளே பூட்டிகொண்டிருந்தது. அதற்குதான் ஜீவனி நாம செத்தோம்னு சத்தமிட்டது. சாவியின்றி இப்பொழுது அந்த கதவை திறக்க முடியாது. சாவி பாலம்மையிடம்.

அவசரமாக ஆலோசனை செய்து மொட்டை மாடியில் முதுகாட்டி கொண்டிருந்த  விண்டோ ஏசியை கழற்றுவது என முடிவாகியது.

 “அம்மா ஒரு வாயில்லா பூச்சி....ஜீவனி பிறந்த கொஞ்ச நாள்ள அப்பா இறந்துட்டாங்க....ஹீ வாஸ் இன் நேவி....அப்பா போனதுல இருந்து அம்மா நிலைம இதுதான்...நம்ம கல்யாணம் பாலம்ம ஏற்பாடுங்கிறதாலயே எங்களுக்கு பிடிக்கல...” தேவகிருபா அனைத்தும் சொல்லி முடித்தாள்.

“பைதவே என் பேர் தங்கையா கிடையாது தேவ் கிருபாகர்.

வாட்....?????!!!! ஐ கேன்ட் பிலீவ்....மாம்ஸ்.....ஹுர்ரேஏஏஏஏஏஏஏஏஏ

“தங்கையாங்கிறது என் அப்பா பேர். ஸோ என் சர்டிபிகேட் படி தேவ் கிருபாகர் தங்கையா. ஆர்மில சர்நேமா அப்பா பேர் சொல்லி கூப்பிடுவாங்க...., உங்க பாட்டிட்ட என் மாமா எப்படி சொன்னாங்களோ....அவங்களுக்கு எப்படி புரிஞ்சிதோ..!!

“என் பேர் தேவ கிருபா......உங்க பேரை சொன்னப்ப  என் பேரை எதோ சொல்றாங்கன்னு கூட பாட்டி நினச்சிருப்பாங்க...வயசாயிட்டுல அவங்களுக்கு....புரிஞ்சிகிற சக்தி அப்டிதான்”

“ வாவ்...எது எப்படியோ உனக்கு நான் எனக்கு நீன்னு எப்பயோ முடிவாயிட்டு போல...ரெண்டு பேருக்கும் என்ன ஒரு பேர் செலக்க்ஷன்....”

இப்டில்லாம் கேட்டா நான் என்ன பதில் சொல்றதாம்...வெட்க வெட்கமா வருதுல்ல....

  “நான் ஆர்மில டாக்டரா இருக்கேன்....யூஜி செய்தது சென்னைல...பி ஜி டெல்லில.. இப்போதைக்கு போஸ்டிங் கஷ்மீர்ல...ம்...அதுவும் ஒரு ரீசன் நான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு நினைச்சதுக்கு....நான் இருக்கிற இடம் ரொம்ப ஸேபான ப்ளேஸ் கிடையாது....

வர்றதுக்கு முன்னாலயே வரப்போற வைஃப்மேல அவ்வளவு அக்கறையா..?? ...நீ ச்சோ ச்வீட்...செல்லுஉஉஉ

 “என்னை பத்தி சொல்லிட்டேன்.....நீங்க இன்னும் எதாவது சொல்லனும்னா சொல்லுங்க....”

இரண்டு பேரும் நடந்து தார் சாலைக்கு அருகில் வந்திருந்தனர். சற்று தொலைவில் பேருந்து நிறுத்தம்.

“இன்னும் உங்க வீட்ல கல்யாண சேலை எடுக்கலைனா....இனிமே தான் எடுப்பீங்கன்னா...கோல்டன் கலர்க்கு க்ரீன் கலர் பார்டர் வச்ச சஅரி எடுங்க....இல்ல உங்களுக்கு வேற கலர் தான் பிடிக்கும்னாலும் எனக்கு ஓகே... “ தலை குனிந்து பார்வை தாழ்ந்து வெட்க பிம்பமாக அவள்.

ஆயிரம் கோடி பூக்கள் மலர்ந்தன அவன் முகத்தில்.

“அப்புறம் இன்னொருவிஷயம் ...ஒருவகையில நான்  ரொம்பவும் பயந்த சுபாவம் தான்...ஆனா உங்க பக்கத்துல இருந்தா தைரியமா இருப்பேன்னு  எனக்கு தோணுது......”

நின்று அவள் முகம் பார்த்தான்.

காதல் காதல் காதல்.

பார்வை நிமிர்த்தியவள் வெட்கமும் மகிழ்ச்சியுமாம் அவன் முகம் தவிர்த்தாள்.

“அப்ப நானேதான் நீயா கிருபா பொண்ணு.?.” ஒரு அடி அவளை நோக்கி எடுத்துவைத்தான்.

“அடுத்த அடி எடுத்துவச்சா  கிருபா பொண்ணு அருவா பொண்ணாயிடும்...உங்க பக்கத்துல எனக்கு சும்மாவே தைரியம் ஜாஸ்தியாகும்....ஞாபகம் இருக்கட்டும்...”

“அதையும் பார்க்கதான போறேன்...இன்னும் 7 நாள் கழிச்சு தான் உன்னபார்த்து அடுத்த அடி வைப்பேன்...என்ன செய்றன்னு பார்ப்போம்...” குறும்பு சிரிப்பு அவன் முகத்தில்

“பார்ப்போம்...பார்ப்போம்.. எனக்கு .பக்கத்துல எப்பவும் ரெண்டு பாடி கார்டு இருப்பாங்க...”

“பார்ப்போம்...”  இப்பொழுது அவன் குரல் குழைந்தது.

வாயடைத்தது அவளுக்கு.  

உன் குரலளவுதான் என் பலமா?                                                                                                                                                                                                           

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.