அவளோ...
“எனக்கு புரிஞ்சிடுச்சு பெல்லி பாய்!!! டஃப் சிட்டிவேஷன்ல இருக்கிறே! ஓவர் டைம் கொடுக்கிறேன்... புயலுக்கு பின்னே அமைதி.. அந்த அமைதிக்கே பின்னே தான்...
முன்பே வா.. என் அன்பே வா..
‘அதுவரை ரஸ்ட்டான மூளையை ரெஸ்ட்லே வைக்கிறேன்!’,
என்று கண்களை மூடி காத்திருக்க...
அதற்குள் ஆர்யமன் அந்த இடத்தை விட்டு சென்றிருந்தான்..
அடுத்து சில மணித் துளிகள் கழித்து...
“பரணிதரன், பரணி நட்சத்திரம் மேஷ ராசி”, என்ற ஆண் குரல்... இவள் கண்களைத் திறக்க வைத்தது...
அர்ச்சகரிடம் அர்ச்சனை செய்ய சொல்லிக் கொண்டிருந்த அந்த இளம் வாலிபன் அவள் கண்ணில் பட்டான்..
‘ஆளை காமிக்க சொன்னா.. ஜாதகமே காட்டிறியே பெல்லி பாய்!’,
என்று எண்ணும் பொழுதே... அர்ச்சகர் தீபத் தட்டை இவள் முன் நீட்ட...
‘அஞ்சு லைட் அலர்ட்..’,
அப்பொழுது ‘கோவில் மணி அடிக்கபட்ட.. ‘அஞ்சு பெல் சவுன்ட்... சவுன்ட் அலர்ட்’..
இப்படி சிறு பிள்ளை போல கண்ணால் பார்ப்பதையும், காதால் கேட்பதையும்... கடவுள் உணர்த்தும் வழிகள் என்றே நினைத்தவளுக்கு அதை தாண்டி எந்த தீவிர யோசனையும் இல்லை..
அவன் நெட்டையா, குட்டையா... கருப்பா சிகப்பா.. அழகா... அழகில்லையா.. என்று அவன் உருவத்தை எடை போடாமல்.. அப்படியே அவனை அவனாக மனதிற்குள் பதித்தாள்.
எதிரே நின்றவனுக்கு.. தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பவளை கண்டு மனதில் என்ன ஓடியதோ... எரிச்சலுடன் பார்வையை அகற்றினான்..
அவன் சாமி கும்மிட்டு விட்டு.. மீதமிருந்த விபூதி குங்குமத்தை உண்டியல் மீது தட்டி விட்டு சென்று விட... அவனையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்த அஞ்சனா...
அவன் விட்டு சென்ற பிரசாதத்தை சேகரித்து பத்திரப் படுத்தி கொண்டவள்.. அங்கிருந்து கர்பகிரகத்தில் அமர்ந்திருந்த விநாயகரை பார்த்த படி..
‘Man proposes, God disposes ன்னு சொல்லுவாங்க... அதனாலே, நீ ப்ரோபோஸ் செய்தவனையே ஏத்துகிடுவேன் பெல்லி பாய். அவனை நான் தேட கூட போறதில்லை! அவன் தான் எனக்குன்னா, நீயே முப்பது நாளில் என் கண் முன்னால நிறுத்துவே! ஐ ட்ரெஸ்ட் யு’
என்று தனக்குத் தானே எடுத்த முடிவை கடவுளிடம் திணித்தாள்...
இவளின் இந்த முடிவு... அவளையே காயப்படுத்தும் என்று அறியாமல் போனாள்!!!
தொடரும்
{kunena_discuss:922}