(Reading time: 18 - 35 minutes)

னக்கு கொஞ்சம் வேலையிருக்கும்மா! சரியான நேரத்துக்கு வந்திடுவேன் அப்பா” என்ற ஜெய் இருவருக்கும் சொல்லிவிட்டு கிளம்பினான். 

ஆதர்ஷின் திருமண பேச்சு என்றதும் சரயூவுடன் தன் திருமணம் என்ற எண்ணம் இனிமை தரவும், அதற்காக இவன் என்னவெல்லாம் செய்யனும் எப்படி செய்யனும்னு யோசிக்க தனிமை தேவைபடவும் தன் வீட்டிற்குச் சென்றான்.

மைத்ரீயிடமிருந்து ஜெய் எளிதாய் தப்பித்தது… அவளின் ஏமாற்றத்தை ஏற்க முடியாமல் மறுகணமே விட்டு கொடுத்தது…. என்ன தான் விளையாட்டு பிள்ளைகளாக இருந்தாலும் இம்மாதிரியான பல விஷயங்களில் இருவருமே ஒருவரை மற்றொருவர் புரிந்து நடப்பதும் விட்டுகொடுப்பதும் மிகவும் பிரம்மிப்புதான்… எங்கிருந்து தான் இந்த புரிதல் வந்ததோ இவர்களுக்குள் என்று மனதில் வியந்தபடி வடிவு வாசலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கவும்

“பிள்ளைங்க மேல கண்ணு பட போகுது வடிவு! ஜெய் போய் ரொம்ப நேரமாச்சு” என்று தன் கணவர் கூறவும் தான் வடிவுக்கு உரைத்தது அத்தனை நேரமும் தான் ஜெய் சென்ற திசையைப் பார்ந்திருந்தது.

“என் கண்ணே பட்டிருக்கும்.  அவங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு திருஷ்டி கழிக்கனும்” என்றவாறு சமையலறையை அடைந்தார்.

‘இவங்க என்றைக்கும் ஒத்துமையா இதே போல் சந்தோஷமா இருக்கனும்’ என்று கடவுளிடம் மனு கொடுத்தார் அந்த அன்பு தந்தை.

திட்டமிட்டிருந்தபடி மாலை மூவரும் கருடா மாலுக்கு சென்றனர்.  இவர்களின் இந்த சந்திப்பு அவரவர் வாழ்வில் பெரிய மாற்றத்திற்கான முக்கிய சந்திப்பாக அமையுமென அப்போது யாருமே அறிந்திருக்கவில்லை.

Episode 05

Episode 07

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.