அன்று கவிழையாவின் தம்பி வருண் வயிற்றுப்போக்கின் காரணமாக வீட்டில் இருந்தான் .
தன் அம்மாவின் அலறலில் தன் அறையில் இருந்து வேகமாக வந்தவன் தன் தந்தையின் நிலைமையைப் பார்த்து ஆம்புலன்சிற்கு போன் செய்து நகரின் பெரிய மருத்துவமைக்கு கூட்டி வந்தான்
அவன் கூறிய அத்தனையும் கேட்ட மஹிந்தன் ஹாஸ்பிட்டலின் பெயரைக்கேட்டுவிட்டு தான் கவிழையாவை அழைத்துவருவதாக போனை வைத்தான்.
பின் கதிருக்கு தொடர்பு கொண்டு ஈஸ்வரனை அட்மிட் செய்திருந்த மருத்துவமனையின் பெயரைக்கூறி தான் ழையாவை கூடிக்கொண்டு மருத்துவமனை செல்வதற்க்குள் அவரின் நிலையை அறிந்து அவருக்கு வேண்டிய சிறந்த வைத்தியத்திற்கான அத்தனை வசதிகளையும் செய்யச்சொல்லி கட்டளைபிறப்பித்தான் .
அவன் போனைவைத்ததும் ழையா உடைமாற்றி வெளியில் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. வெளியில் வந்தவள் அவள் போகும் முன் உடுத்தியிருந்த உடையை அங்கிருந்த மேஜைமேல் வைத்துவிட்டு ட்ரெஸ்ஸிங்டேபிள் முன்னாள் இருந்த அவளின் காதணிகளை போட்டுக்கொண்டு அவன் போகும் முன் அவளுக்கு அணிவித்த மற்ற நகைகளை கலட்டும் போது அவள் கழுத்தில் உள்ள தாளிச்செயினையும் கலட்டலாமா என்று யோசனை செய்தவள் அதைமட்டும் கழட்டாமல் தன் கழுத்தில் போட்டிருப்பது வெளியில் தெரியாதமாதிரி தன் உடையினுள் அதை மறைத்துப் போட்டுக்கொண்டாள். அவளின் ஒவ்வொரு செயளையும் அசைவையும் பார்த்தபடியிருந்த மஹிந்தனுக்கு அவள் தாலிக்கொடியை கழட்டாததைக் கண்டதும் மனதில் இதம் பரவியது.
பின் சிறிது அலுவலக வேலைகளை சரிபார்த்துவிட்டு ழையாவை கூட்டிக்கொண்டு காரில் மருத்துவமனைக்கு வந்தான். கார் மருத்துவமனையில் நிற்பதைப்பார்த்தவள் இங்கு எதற்காக கூட்டிகொண்டு வந்தீர்கள் என்று கேட்டாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
இனி மறைக்க முடியாது என்பதால் மஹிந்தன் கூறினான் உன் அப்பாவிற்கு கொஞ்சம் உடம்பு முடியவில்லை எனவே மருத்துவமைக்கு உன்னை கூட்டிவரச்சொல்லி உன்தம்பி போன் செய்தான் என்று கூறினான்.
மஹிந்தன் கூறியதைகேட்ட கவிழையா கோபத்துடன் அவன் சட்டையைப்பிடித்து என் அப்பாவை என்னசெய்தாய்? உன்னாலே அவருக்கு ஏதாவது ஆனால் உன்னை என்னால் மன்னிக்கவே முடியாது என்று கூறி கதறினாள். அவள் அழுவதை தாங்கமுடியாத மஹிந்தன் அவள் தன் சட்டையை பிடிதிருப்பதை பார்த்தான் .
பின் ழையா என்ற அழைப்புடன் அவளின் தலையை தன் நெஞ்சோடு அனைத்துபிடித்து உன் அப்பாவிற்கு எதுவும் ஆகாது, ஆகவும் நான் விடமாட்டேன் நீ அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை, ப்ளீஸ் அழுகாதே! என்று கூறியபடி அவள் தலையை தடவிகொடுத்தான்.
தன் அதிர்ச்சி சற்று மட்டுப்பட்டதும் தான் இருக்கும் நிலை உணர்ந்த கவிழையா தன்னை மீட்டுக்கொண்டு தன் தந்தையை பார்க்க மருத்துவமனையினுள் விரைந்தாள்.
அவள் பின்னால் வேகமாக வந்த மஹிந்தன் ரிசப்சனில் ஈஸ்வரனின் பெயரைச்சொல்லி எந்த ரூமில் உள்ளார் என்று கேட்டான்.
அவர் ஐசியு ரூமில் இருப்பதை அவர்கள் கூறியதும் அங்கு இருவரும் விரைந்து சென்றனர்.
ஐசியு ரூமின் வாசலில் பார்வதி அழுதுகொண்டு அமர்ந்திருந்தாள். கவிழையா அம்மாவைப் பார்த்ததும் .ஓடிப்போய் தன் அம்மாவிற்கு தோள்கொடுத்து தேற்றியவள் அப்பாவிற்கு எதுவும் ஆகாது இப்பொழுது நீங்கள் தைரியமாக இருந்தால்த்தான் நானும் கலங்காமல் இருக்கமுடியும் என்று கூறி கொண்டிருந்தாள்.
மஹிந்தன் மருத்துவமனை வந்துவிட்டதை அறிந்த கதிர் ஸ்பெசல் டாக்டர் குழுவுடன் ஐசியு யூணீட்டிற்குள் வந்தான்
பின் மஹிந்தனிடம் ஈஸ்வரனின் உடல்நிலைபற்றி விளக்கம் அளித்த டாக்டர் அஞ்சியோ மூலம் இதயத்தின் அடைப்பைப்பற்றி தெரிந்துகொண்டு, மற்றதைப் பற்றி பேசலாம் என்றார்.
மேலும் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டதால் அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறினார் .
டாக்டர்குழுவைப் பார்த்ததும் கவிழையா தன் அப்பாவின் உடல்நிலை அறிய வந்தவள் மஹிந்தனிடம் அவர்கள் பேசியதைக் கேட்டவள், தன் அப்பாவைப்பற்றிய கவலை குறைந்தது., தொடர்ந்து அதிர்ச்சியை சந்தித்ததின் விளைவாக நின்ற இடத்திலேயே மயங்கி சரிந்தாள்.
அவள் மயங்கி சரிவதை தற்செயலாக திரும்பி பார்த்த மஹிந்தன் அவளைத் தாங்கி பிடித்து மற்றொரு பெட்டில் அவளை அட்மிட் செய்தான் .
வருண் ஏ டி எமில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்தவன் தன் அக்காவும் மயங்கிச் சரிவதை பார்த்தவன் அவளை தாங்கிபிடித்த மஹிந்தனைக் கண்டான் .
அதன் பின், மருத்துவர்கள் ழையா அதிர்ச்சியில் மயங்கிருப்பதாக தெருவித்தனர். தற்பொழுது தூக்கத்திற்கு ஊசி போட்டிருப்பதாகவும் தூங்கி எழுந்தாள் சரியாகிவிடுவார்கள் என்றும் தெருவித்தனர் .
கதிர் மஹிந்தனை நீ வீட்டிற்கு கிளம்பு நான் இங்கு பார்த்துக்கொள்கிறேன் என்றான்.