மஹிந்தன் பிடிவாதமாக இருப்பதைப் பர்ர்த்தவன் நீ இங்கு இருப்பது மற்றவர்களுக்கு தெரிவதற்குள் இடத்தை காலிசெய் இல்லாவிடில் கவிழையாவிற்குத்தான் பிரச்சனை அதிகாரிக்கும் என்று கூறி அவனை மருத்துவமனையிலிருந்து அனுப்புவதற்கு முயற்சி செய்துகொண்டு இருந்தான் .
அப்பொழுது அங்கு வந்த வருண், மஹிந்தனிடம் தங்களுக்கு சமயத்தில் உதவி செய்ததிற்கு நன்றி கூறியவன் சற்று தயங்கி நாங்கள் சாதாரனமானவர்கள் என்றாலும் என் அக்காவையும், அப்பாவையும் கவனித்துக் கொள்ளும் அளவிற்கு தங்களுக்கு வசதி இருப்பதாக தெரிவித்தான்.
மேலும் அவனின் அதிகப்படியான அக்கறை தனக்கு தன் அக்காவின் வாழ்க்கையைப் பற்றிய பயத்தை அதிகரிப்பதாகவும் கூறினான். எனவே அவனை போகச்சொல்லி கேட்டுக்கொண்டான்.
கவிழையாவின் எம்.டி மஹிந்தன் தன் அக்காவை மருத்துவமனைக்கு அழைத்துவருவதாக போனில் சொல்லியபோதே இந்தியாவின் பலராலும் வியந்து பார்க்கும் நிலையில் உள்ள மிகப்பெரிய பிசினெஸ்மேன் தன் அக்காவுடன் வருவதாக கூறியது வருணுக்கு மஹிந்தன் மேல் சற்று சந்தேகத்தை கிளப்பியது .
ஏற்கனவே அவனுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருப்பதை நியூஸ் பேப்பரிலும், நியூஸ்சேனல்களிலும் கண்டு அறிந்திருந்தான். மேலும் அன்று தன் அக்காவை வாசலில் காரில்மட்டும் செல்லவேண்டும் என்று எம்.டிசொன்னதாக அன்று அவனின் ஆட்கள் கூறியது வருணுக்கு நெருடலாக இருந்தது.
மேலும் தன் அக்கா மயங்கிச்சரியும் போது மஹிந்தன் பதறியதும்.கவிழையாவின் மேல் அவனுடைய அதிகப்படியான ஈடுபாட்டையும் கண்டவனுக்கு இந்த அதிகப்படியான அக்கறை தன் அக்காவின் பெயருக்கு களங்கத்தை விளைவிக்கும் என்ற பயத்தை அவனுக்குக் கொடுத்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...
படிக்க தவறாதீர்கள்..
எனவே வருன், மஹிந்தனை அவ்விடத்தைவிட்டு அகற்றவும் அவனின் உதவியை மறுக்கவும் எண்ணினான்.
வருணின் ஆராய்ச்சி பார்வையையும் ,அறிவையும் கண்ட மஹிந்தனுக்கு அவன் மேல் பிடிப்பு ஏற்பட்டது. எனவே மஹிந்தன் அவன் தோளின் மேல் கைபோட்டு பக்கத்தில் அமரவைத்து பேசினான்.
கதிருக்கு மஹிந்தனின் செயல் ஆச்சிரியத்தை கொடுத்தது . இதுவரை யாரிடமும் இவ்வளவு நெருக்கமாக பேசியதில்லை .அவன் தங்களிடம் பேசுவதையே பிசினெஸ் உலகத்தினர் மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்வர் .அப்படிப்பட்ட இடத்தில் உள்ளவனின் செயல் பார்த்து வருணின் மேல் கதிருக்கும் மதிப்பு கூடியது .
மஹிந்தன் வருனிடம் கூறினான். நீ நினைப்பது போல் உன் அக்கா எனக்கு ஸ்பெசல் தான். ஆனால் இப்போதைக்கு அதை வெளியில் சொல்ல முடியாத சூழலில் நான் இருக்கிறேன் என் ழையாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நான் உன்னிடம் கொடுக்கிறேன் என்று கூறி தன் பர்சனல் போன்நம்பரை அவனிடம் கொடுத்தான். எதுவென்றாலும் தனக்கு போன் செய்ய சொல்லி கூறினான்.
அவன் கூறியதைக் கேட்ட வருண் அவன் கொடுத்த நம்பரை பெற்றுக்கொண்டு .என் அக்காவை பார்த்துக்கொள்ள யாரும் எனக்கு சொல்ல வேண்டாம் . மேலும் உங்களால் அவளுக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தால் அதுவே எனக்கு போதும் என்று அவனைப் பார்த்தபடி கூறினான்.
அவன் கூறியதைகேட்டு உதட்டில் புன்னகையுடன் எழுந்துகொண்ட மஹிந்தன் .நான் இப்பொழுது உன் அப்பாவின் மருத்துவத்திற்கான முழுபொறுப்பையும், உன் அக்காவை என் பொறுப்பிலும் எடுத்துக்கொண்டேன் என்னை உன்னால் தடுக்க முடியாது என்று கூறினான்.
பின்பு நட்புடன் வருனைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டு நான் இப்பொழுது போகிறேன் ஆனால் மீண்டும் வருவேன் என்று கூறிச் சென்றான்.
மஹிந்தன் வீட்டிற்கு வருவதற்கு இரவு ஆகிவிட்டது .அவனின் வரவை எதிர்பார்த்து தங்கை மதுரா மற்றும் அவனது பெற்றோர் விஸ்வநாதன்- சுபத்ரா ஆகியோர் உடன் ஐஸ்வர்யா மற்றும் அவளது அம்மா விஜியும் நடு ஹாலில் உட்கார்ந்து இருந்தனர் .
மஹிந்தன் உள்ளே வந்ததும் மதுரா, அண்ணா! நீ ஒரு மணி நேரத்தில் வருவதாகச் சொன்னாய் ஆனால் முழுவதுவதுமாக நான்கு ஒருமணிநேரம் தாமதமாக வந்திருக்கிறாய் என்று குற்றம் கூறுவதை போல் சொன்னாள்.
அவள் அவ்வாறு கூறியதும், மகிந்தனுக்கு அன்று நடந்த செயல்களின் விளைவால் எப்பொழுதும் இல்லாத வழக்கமாக தன் தங்கையிடம் கடிந்து பேசினான் .
மதுரா நான் யாருக்கும் இன்று என்னைப் பார்ப்பதற்கு அப்பாய்ண்மென்ட் கொடுக்கவில்லை என்னுடைய பிஸியான டைம் செட்யூல் தெரிந்திருந்தும் முன்னறிவிப்பு இல்லாமல் காத்திருந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும் என்று கோபத்தில் சத்தமாக கூறினான்
அவன் கூறியதைகேட்ட மதுரா அதிர்ந்து அவனைப் பார்த்தாள். தன் தங்கையின் அதிர்ச்சியைப் பார்த்தவன் தன் கோபத்தை கட்டுப்படுத்தி மதுராவின் அருகில் வந்து, சாரி ஏதோ டென்சனில் கத்திவிட்டேன் என்று கூறி தன் தங்கையின் கையை ஆதரவாக பிடித்துக்கொண்டு அவள் அருகில் அமர்ந்தவன் புன்னகைத்துக்கொண்டே இப்பொழுது சொல் எதர்க்காக எனக்காக காத்துக்கொண்டு இருகிறீர்கள் என்று மதுராவிடம் கேட்டான்.