குட்டிக் கதைகள் – 67. கடவுளும் மயிலும்
குயிலின் இனிமையான குரலைக் கேட்டு ஒரு மயில் மயங்கிப் போனது.
தனக்கு அப்படி ஒரு இனியக் குரல் இல்லையே என்று வருந்திய மயில், குயிலைப் பார்த்து பொறாமையும் பட்டது.
தானும் குயில் போல பாட வேண்டும் என்ற ஆசையில் மயில் சத்தமாக பாடியது.
ஆனால் அதன் பாடலைக் கேட்ட அனைவரும் சிரித்தார்கள்.
மயிலுக்கு ஏமாற்றமாகவும், அவமானமாகவும் இருந்தது.
கடவுளை சந்தித்து தனக்கும் குயில் போல இனிமையான குரல் வேண்டுமென்றுக் கேட்டது.
கடவுள், “மயிலே உன்னிடம் அழகு இருக்கிறது. அதேப் போல குயிலிடம் இனியக் குரல் இருக்கிறது. கழுகுக்கு வலிமை இருக்கிறது. இப்படி அனைத்து உயிரிடமும் ஒரு சிறந்த தன்மை இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் வழியில் தனித்துவமானவர்கள். எனவே குயிலைப் பார்த்து பொறாமைப் படாமல் அதன் குரலை ரசித்து மகிழ பழகிக் கொள்.” என்றார்.
கருத்து:
உங்கள் பலத்தில், திறமையில் திருப்தி அடையுங்கள். ஒருவர் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க முடியாது என்பதை உணருங்கள்.