குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பள்ளிக்குச் சென்ற சிட்டுக் குருவிகள் - நாரா நாச்சியப்பன்
ஆழ்வார்ப்பேட்டையில் பேருந்து நிற்கும் இடத்தில் ஓர் அரசமரம் இருக்கிறது. அந்த மரக்கிளை ஒன்றில் கூடுகட்டிக் கொண்டு இரண்டு சிட்டுக் குருவிகள் இருந்தன. அந்தச் சிட்டுக் குருவிகளுக்கு இரண்டு சின்னச் சிட்டுக்கள் இருந்தன. அந்தச் சின்னச் சிட்டுகள் இரண்டும் அடித்த கொட்டத்திற்கு அளவே இல்லை.
ஒரு சிட்டுக்குஞ்சு ஒரு கிளையில் போய் ஒளிந்து கொள்ளும். இன்னொன்று அதைத் தேடிக்கொண்டு மரத்தைச் சுற்றிச் சுற்றிவரும். அது சோர்ந்து போய் ஒரு கிளையில் உட்கார வரும். அப்பொழுது பார்த்து முதல் குஞ்சு விருட்டென்று பறக்கும். உடனே அதை விரட் டிக்கொண்டு இரண்டாவது குஞ்சு புறப்படும்.
இரண்டும் சேர்ந்து கத்திக் கொண்டு பறந்தோடுவதைப் பார்த்தால் எதையோ விரட்டிப்பிடிக்கப் போவதைப்போல்இருக்கும்.
அந்த மரத்தில் இருக்கும் எல்லாப் பறவைகளுக்கும் அந்த இரண்டு சிட்டுக் குஞ்சுகளும் செல்லச் சிட்டுக்கள். அவை விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாலே மற்ற பறவைகளுக்குப் பொழுது போய்விடும்.
இந்தச் சிட்டுக்களின் அம்மாச் சிட்டுக்கு ஒரே ஒரு ஆசை. இந்த இரண்டு சிட்டுகளையும் எங்காவது ஒரு நல்ல பள்ளிக் கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்து விட வேண்டும் என்பதுதான் அதன் ஆசை.
நான்கு எழுத்துப் படித்துவிட்டால் அவை பேசும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இப்படி ஒரு ஆசையை அந்த அம்மாச் சிட்டு மனத்தினுள் வளர்த்துக் கொண்டு இருந்தது. அம்மாவின் ஆசை தெரியாமல் அந்தச் சின்ன சிட்டுக்கள் இரண்டும் விளையாட்டி லேயே ஈடுபட்டிருந்தன,
ஒரு நாள் அந்த அம்மாச் சிட்டு ஆழ்வார் பேட்டையில் இருந்த ஆங்கிலப் பள்ளிக் கூடத்தின் பக்கமாகப் பறந்து சென்றது. வெள்ளை வெளேரென்று அழகாக இருந்த அந்தப் பள்ளி,