குருவிகளுக்குத் தலைவனாய் இருக்க கூடிய அதன் தகுதிக்கு அந்தப் பார்வையே சான்றாக அமைந்திருந்தது.
சிட்டரசனாகிய அந்தச் சிட்டுக் குருவி ஏறி வந்த பூம்பல்லக்கு உப்பரிகையின் மீது வந்து இறங்கியது. அது இறங்கிக் கொண் டிருந்த போதே, சுற்றிலும் இருந்த சிட்டுக் குரு விகள் "சிட்டரசன் வாழ்க! சிட்டரசன் வாழ்க’ என்று முழக்கம் எழுப்பின.
பூம்பல்லக்கு உப்பரிகைத் தளத்தின் மீது இறங்கியவுடன், சிட்டரசன் மெல்லக் கீழே இறங்கியது. பாராண்டபுர அரசன் எதிரில் வந்து நின்றது.
“மன்னர் பிரானே, வணக்கம்' என்று தலை வணங்கியது.
ஒரு சிட்டுக் குருவிக்கு எவ்வளவு பெருமை என்று மனத்துக்குள் அதைத் திட்டினாலும், அதை மறைத்துக் கொண்டு பாராண்டபுர மன்னர் அமைதியாகவே பேசினார்.
"சிட்டரசனே, இது எல்லாம் என்ன? எதற்காக எல்லாச் சிட்டுக்களையும் அனுப்பி என் அரண்மனையை அல்லோல கல்லோலப் படுத்துகிறாய்?
“எனக்கும் உனக்கும் என்ன பகை?” என்று மன்னர் கேட்டார்.
'மன்னர் பெருமானே, இந்த உலகத்தில் கடவுள் மனிதர்களை மட்டும் படைக்க வில்லை. விலங்குகளையும், நீர் வாழ்வனவற் றையும் பறவைகளையும் படைத்திருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது?’ என்று சிட்டரசன் கேட்டது.
'ஏ, சிட்டுக் குருவியே, நீ என்ன பள்ளிக் கூடம் நடத்துகிறாயா? இது என்ன பாடம் நடக்கிற வகுப்பா? என்று கேட்டார் மன்னர்.
‘அரசே, நீங்கள் பதிலைச் சொல்லுங்கள். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் தான் சொந்தமா?” என்று கேட்டது சிட்டு.
'இல்லை, இல்லை. எல்லாருக்கும் தான் சொந்தம். உயிர்கள் அனைத்தும் வாழ்வதற் காகத்