நழுவிப்போயிடுது. அதுக்கு வருத்தப்பட்டுக் கட்டிலெக் கட்டிகிட்டு அழுதிட்டிருந்தா என்ன பிரயோஜனம்? அடுத்த தடவெ சாக்கிரதெயா இருந்தா சரியா போவுது.
ஆனா அதுவே அவரோட பார்வெயிலெ பெரிய குத்தம்! 'பொம்பளெங் கெல்லாரும் புதுசு புதுசா சாமானுங்களெச் சம்பாதிச்சிக்கிட்டு எவ்வளவு செட்டா குடுத்தனம்; பண்
றாங்க. உனக்குப் பொம்பளெ லட்சணமே இல்லே. ஆம்பளெ தொரெ மாதிரி கைக்கெட்னதெக் கீழே தள்ளிட்டு, காலுக்கெட்னதெ உதச்சிட்டு கர்வத்தோட
திரியறே. சாக்கிரதெயாப் புடிச்சாக்கா கப்பு ஏன் நழுவுது? பையனுக்கு எட்றாப்போல கண்ணாடியே ஏன் விக்கணும்? உனக்கு அக்கறெ எப்பொ வரப்போவுது?"
அது அவர் பேசற தோரணெ! எனக்குத் தெரியாம கேக்கறேன் -- எந்த வீட்லேயும் கப்புங்க ஒடெயற்தில்லே? குழந்தெங்க பொருளெ நாசமாக்கற் தில்லே?
இந்த அக்கிரமங் கெல்லாம் நான் ஒருத்திதான் செய்றேனா? உதவாத கப்பு ஒடஞ்சதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா? துரதிர்ஷ்டவசமா நடந்த வேலெக்கு ஒரே
யடியா நடுங்கிக்கிட்டு இந்த நிமிஷமோ அடுத்த நிமிஷமோ நடக்கப் போற யுத்தத்திற்குத் தயாராக முடியாம, அந்தத் திட்டுங்களெ யெல்லாம் பொறுக்க
முடியாமெ அழுதுக்கிட்டு--சீ! ஒரு மனுஷியெப் போலவா வாழ்ந்து கிட் டிருக்கறேன் நான்! சக்கரெக்கு எறும்பு சுத்திக்கிட்டதுன்னு, ஆவக்கா ஊறுகாயெ வெய்யில்லே
வெக்கலேன்னு, காபி கிளாஸ் சன்னல்லேயே இருந்து போச்சின்னு, நானி தொடப்பத்தெப் பிச்சிப் போட்றான்னு-- சீ! சீ! நான் பாத்துக்க மாட்டேன். சந்
தோஷமா சாப்ட்டுட்டு படுத்துக்கறேன். இனி நான் மாற மாட்டேன். இருந்திருந்து என்னெப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டது அவர் தலெவிதி! அனுபவிக்கவேண்டியதுதான்! ஒவ்வொரு நாளும் இந்த நச்சரிப்பெ எந்தப் பொம்பளெ தாங்கிக்குவா? சமயலறெக்கு வந்து தண்ணி மொண்டு குடிக்க வெக்கப்பட்ற
ஆண்மெக்கு இவ்வளவு சின்னச் சின்ன பொம்பளெங்க விஷயத்தலே இல்லாததெ உண்டாக்கிகிட்டுத் திட்றதுக்கு எப்படி மனசு வருது? என்னவோ அப்படி நினெச்சிக்
கிட்டு உக்காந்தா பைத்தியமே புடிக்குது." பானு மறுபடியும் சாதத்தைப் பிசையத் தொடங்கினாள்.
நான் எல்லாவற்றையும் கேட்டேன். பானுவைப் புரிந்து கொண்டேன். இருந்தாலும் " பானூ! நீ எல்லாத்துக்கும் தர்க்கம் பண்ணிக்கிட்டிருக்காதே. மாமா இஷ்டப்படியே நடந்துட்டாப் போவாது? "