லிருந்து எழுந்த மருமகனை மடியில் உட்கார வைத்துக்கொண்டு அவனிட மிருந்து புதுப்புதுச் சொற்களை வரவழைத்துக் கேட்டுக்கொண்டு இருந்தேன்.
"டேய் நானீ! உனக்கு இன்னக்கி கணக்குச் சொல்றேன். கத்துக்கறியா?" அவன் தூக்கக் கலக்கத்தைத் தீர்த்துக்கொண்டு தலை ஆட்டினான்.
"அப்படின்னா நான் சொல்றபடியே சொல்லு. ஒன்று."
"ஒந்நு!"
"திருப்பியும் அதானா? ஒந்நுங்கிறியே ஏன்"
"நான் அப்பதிதான் சொல்வேன்."
"அப்படியே சொன்னா அடிப்பேன்."
"ஏன் அதிப்பே?"
"வாயெ மூட்றா! முட்டாள். சொல்றபடி கேக்காமெ எதுத்தாப் பேசறே? ஒரு சாண் உயரமில்லே. முட்டாப் பயலே!"
"என்னெ ஏன் தித்தறே?" நான் வியப்புடன் அவன் முகத்தையே பார்த்துக்கொண் டிருந்தேன். பானு எப்போது வந்தாளோ கன்னத்தில் கை வைத்தபடி நின்றுகொண் டிருந்தாள். என்னைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் "பாத்தியா என் மகனெ?"
"நிஜமாவே உன் மகன் தான்" என்றேன். பானு அவன் மீது முத்தமழை பொழிந்துவிட்டாள்.
"பானூ! உன் மகன் டாக்டரா? நடிகனா? வக்கீலா? யாரு?" என்று கேட்டேன் சிரித்துக்கொண்டே.
"பெரிய பெரிய ஆசெங்க வெச்சி ஒரு தடவை ஏமாந்து கூட புத்தி வரலேங்கறீயா? இப்பொ ஆசெங்க இல்லெ. அந்தத் தகுதியும் இல்லெ. சோத்துக்கும் துணிக்கும் பஞ்ச மில்லாமெ ஒழுங்க வாழமுடிஞ்சா போறும்." பெரு மூச்சு விட்டு என் பக்கத்தில் உட்கார்ந்தாள். அதற் குள்ளேயே மகிழ்ச்சியை மறந்து என் மனம் துணுக் குற்றது. "ஏம்மா அவ்வளவு அலட்சியமா பேசறே? நான் இருக்கற வரெக்கும் உனக்கும் உன் குழந்தென் களுக்கும் எந்தக் குறெயும் வராது. உன் மகனெப் பெரிய டாக்டராக்கிக் காட்றேன். எனக்குத் தந்துட்றியா?"
"அழெச்சிட்டுப் போயிடு. அவங்க அப்பாக்குப் பாதி பாரம் குறெஞ்சிடும். அந்த மீதிப் பாதி குறெஞ்சிடாதுன்னு நினெச்சிக்கோ!"
எனக்கு உண்மையில் கோபம் வந்தது. "பானூ! அந்தமாதிரி பேசாதேன்னு எவ்வளவு நேரமாச் சொல்றேன்? இப்படிப் பேசற்து உனக்கே நல்லா இருக்குதா? ஒவ்வொரு விஷயத்தையும் ஏன் அவ்வளவு சீரியஸ்ஸா எடுத்துக்கறே? மகனெ பாரம்னு நினெக்கற தகப்பன் கூட இருக்கான்னு நீ சொல்லித்தான் நான் கேக்கறேன். இல்லாத பொல்லாத பழியெச் சுமத்தற்து உனக்கு மட்டும் அழகா இருக்கறப்போல இருக்குது?"
தொடரும்